இனறு பதவி ஏற்ற தமிழ்நாடு அமைச்சர்களுக்கான துறைகள் அறிவிப்பு, இனி நாளையும் பதவி ஏற்பு நடக்க உள்ளது
இதில் கே. ஏ. செங்கோட்டையன் வசமிருந்த நிதித்துறை, மரிய வில்சனுக்கு மாற்றம் செய்யப்பட்டது,
போக்குவரத்துத்துறை - சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன்க்கும்
ஹிந்து அறநிலையத்துறை - ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ்க்கும்,
உயர் கல்வித்துறை - மேலூர் எம்.எல்.ஏ. விஸ்வநாதனுககும்,
நிதித்துறை - ஆர்.கே.நகர். எம்.எல்.ஏ. மரியவில்சனுக்கும்,
மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை - கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ்க்கும்,
மீன்வளத்துறை - தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத்துக்கும்,
வனத்துறை - காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமாருக்கும்,
பால்வளத்துறை - குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமிக்கும்,
கால்நடை பராமரிப்புத்துறை - அவிநாசி எம்.எல்.ஏ. கமலிக்கும்,
வேளாண்மைத் துறை - கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத்துக்கும்,
சுற்றுச்சூழல்த்துறை - திருவாடனை எம்.எல்.ஏ. டாக்டர் ராஜீவ்க்கும்,
வீட்டுவசதித்துறை - கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கும்,
கூட்டுறவுத்துறை - அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ்க்கும்,
சிறு,குறு, நடுத்தர தொழில்துறை - ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ. மதன்ராஜாவுக்கும்,
சமூகநலன், மகளிர் நலத்துறை - இராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரிக்கும்,
சுற்றுலாத்துறை - கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமாருக்கும்,
கைத்தறி, ஜவுளித்துறை - ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. விஜய் பாலாஜிக்கும்,
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை - ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கும்,
AI, தகவல் தொழில்நுட்பத்துறை - வேளச்சேரி எம்.எல்.ஏ. குமாருக்கும்,
வெளிநாடுவாழ் தமிழர் நலன் - ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசுக்கும்,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமாருக்கும்,
தொழிலாளர் நலத்துறை - அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது பர்வேஸுக்கும்,
மனிதவளத்துறை - தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமாருக்கும், ஒதுககபபடட நிலையில்முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இணைந்துள்ளார் ஜேப்பியாரின் மருமகன் மரிய வில்சன். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போ புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்கும்
கல்வி நிறுவன அதிபராக விளங்கிய ஜேப்பியாரின் மகள் ரெஜினாவின் கணவர் தான் மரிய வில்சன். இவர் ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் தலைவராகவும் உள்ளார்.
தீவிர எம்ஜிஆர் விசுவாசியான ஜேப்பியார், சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக தன் அதிரடியான செயல்பாடுகளால், மாவீரனாக அதிமுகவினரால் அறியப்ப்பட்டார். எம்.ஜி.ஆர் வளர்த்து விட்ட கல்வியாளர்களில் ஜேப்பியார் கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்தார். இந்நிலையில் இவரது கல்வி நிறுவனங்களை வழிநடத்திச் செல்லும் முக்கிய நபராக மரிய வில்சன் திகழ்கிறார்.
ஜேப்பியார் அரசியலைவிட்டு ஒதுங்கிய 36 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவருடைய மருமகன் மரிய வில்சன் அரசியலில் மாணவர்கள் புதுமையான ஆலோசனைகளை அளிக்கும் வகையில் 'டிசைன் திங்கிங் கிளப்' ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார் .தவெகவில்
இதுதவிர பல்வேறு தொழில்சார் சொசைட்டிகளையும் அமைத்து மாணவ, மாணவிகள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார் மரிய வில்சன். இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு மிக முக்கியமான நிவாரணம் அறிவித்தார் மரிய வில்சன். கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கிடவும், ஆயுள் காப்பீடு செய்து தரவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும், 5,000 ரூபாயை ஒவ்வொரு மாதமும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாழ்நாள் முழுக்க வழங்குவேன் என்றும் மரிய வில்சன் அறிவித்தது கவனம் பெற்றது.
ஆர்.கே.நகர் - மரிய வில்சன்
தமிழக அரசியல் வரலாற்றில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு எப்போதும் தனித்துவமான முக்கியத்துவம் உண்டு. முன்னாள் முதலமைச்சர்கள் போட்டியிட்ட பெருமை வாய்ந்த, அரசியல் ரீதியாக மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் இந்தத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மரிய வில்சன் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், தொகுதி மக்களின் அடிமட்டப் பிரச்சினைகளை மையமாக வைத்து இவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மரிய வில்சனுக்கு அமைச்சர் பதவிபிராமண சமுதாயத்தை சேர்ந்த வெங்கட்ரமணன் ஏற்கனவே உணவுத்துறை அமைச்சராக பதவியேற்ற நிலையில், இன்று மற்றொரு பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர் அமைச்சராகியுள்ளார்வரலாற்றில் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு பிராமண சமுகத்தை சார்ந்த ஒருவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஏற்கனவே பிராமணர் சமூகத்தை சேர்ந்த ஜெயலலிதா முதலமைச்சராக அதிமுக கட்சி சார்பாக இருந்துள்ளார். அவரது ஆட்சி காலத்தில் கூட பிராமணர் சமூகத்தை சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
தமிழ்நாடு அமைச்சரவையில் பிராமண அமைச்சர்கள்
இந்த நிலையில் தான் தற்போது மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற வெங்கடரமணன் விஜய் அமைச்சரவையில் இடம்பிடித்தது பரபரப்பாக பேசப்படுகிறது. முதலமைச்சர் விஜய்யின் 25 ஆண்டுகாலத் தொடர்பில் இருந்து வரும் வெங்கட் ரமணன், 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் தொடங்கியது முதல் அரசியல் ரீதியாக முதல்வர் சி, ஜோசப் விஜய்யோடு பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் தான் வெங்கட் ரமணனுக்கு உணவுத்துறையானது ஒதுக்கப்பட்டது. அமைச்சரவையில் ஏற்கனவே ஒரு பிராமண அமைச்சர் நியமிக்கப்பட்டதை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நிலையில் தற்போது மற்றொரு பிராமணரும் தமிழ் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றமானது விஜய் மக்கள் இயக்கமாக மாறிய நிலையில் அதில் நீண்ட காலம் பணியாற்றியவர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்து சென்னை அருகில் வசித்து ரமேஷ்,
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரமேஷ், தனது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியாவார். பி.இ.மெக்கானிக்கல் இன்ஜினிரிங் படித்துள்ளார். இது மட்டுமில்லாமல் அரசியல் பக்கமே தலைக்காட்டாத குடும்பத்தில் உருவான முதல் அரசியல் வாதியாகவும் ரமேஷ் உள்ளார். தமிழ்நாடு வெற்றிக்கழகத்திலும் அரசியல் பணியை தொடங்கிய ரமேஷ்க்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தார் தவெக தலைவர் விஜய். பணக்காரர்களுக்கு மட்டுமே அரசியல் என்ற நிலையில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரமேஷ்,
ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்
இதனையடுத்து இரு பெரும் கட்சியின் வேட்பாளர்களை வீழ்த்தி ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார் ரமேஷ், இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை அறிநிலையத்துறை என்பது முக்கிய துறையாக உள்ளது. இந்த துறைக்கு அமைச்சராக ரமேஷை முதலமைச்சர் விஜய் நியமித்துள்ளார். சென்னை பக்கத்துல வசித்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆன ரமேமஷ் அமைச்சர் நம்பெருமாள் .. ஏதோ ஒரு காரணத்திற்காக சென்னையை சேர்ந்த ரமேஷ் (வயது 31) வயது வாலிபரை ஸ்ரீரங்கம் தொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெற செய்து ..
தனது ஜனாதன தர்மங்களை காக்கும் ஹிந்து அறநிலைய துறையின் மந்திரியாகவும் ஆக்கி இருப்பது சிறப்பு என அந்தணர்கள் கொண்டாடினாலும், தி. க. வீரமணிகள் பெயருக்கு எதிர்த்தாலும் அவர் ஈ. வெ. ராமசாமியின் ரசிகர் என பதிவு கூறுவதாக வினோஜ் செல்வம் பதிவு ஒரு உறுத்தல் ஹிந்து மக்கள் மத்தியில் நிலவுவது உண்மை.
ஒரு 20வது நாள் முன்னாள் இந்த வாலிபரிடம் நீங்க கோவில் மந்திரி ஆகுவீர்கள் என்று யாரும் சொல்லி இருந்தால் - நம்பி இருக்க வாய்ப்பில்லை
அன்னாருக்கு நல்ல புத்தி பலம் அளித்து கோவில் நடக்கும் பல குழப்பங்களுக்கு விடிவு காலம் பிறக்க வழி காட்ட அவர் தொகுதி கடவுளான திருவரங்க பெருமானையும் திருவானைகா ஜம்புகேஸ்வரரையும் பராய்துறை நாதரையும் வேண்டுவதே சிறப்பு.திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடடு தவெக வேட்பாளர்களைத் தோற்கடித்த முதல்வர் சி. ஜோசப் விஜய் கூட்டணி அமைச்சர்கள்: குமார் -வேளச்சேரியிலும், டாகடர் ராஜீவ்- திருவாடானையிலும், ராஜ்குமார்-கடலூரிலும், டி.கே.பிரபு- காரைக்குடியிலும், முகமது பர்வேஸ்-அறந்தாங்கியிலும், எஸ்.கீர்த்தனா-சிவகாசியிலும், தென்னரசு-ஸ்ரீபெரும்புதூர்(SC) தொகுதியிலும், காங்கிரஸ் கட்சியைத் தான் தோற்கடித்து வெற்றி பெற்றவர்கள், மேலும் ஏழு அட்டவணை பட்டியல் சமூக அமைச்சர்களாவர், அதில் ஏ.ராஜ்மோகன், டி.எஸ்.கமலி, வி.காந்திராஜ், பி.மாதன் ராஜா, டி.லோகேஷ் தமிழ்செல்வன், பி.விஸ்வநாதன், கே.தென்னரசு, அவர்களில் 6 பேர் தனித் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால் கடந்த திமுக ஆட்சியில், சி.வி.கணேசன், டாக்டர்.என்.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ், டாக்டர்.கோவி.செழியன் ஆகிய நான்கு பேர் இருந்தனர்.கடலூரில் சிட் பண்ட் நடத்தி மக்களை ஏமாற்றி ஊரை விட்டு மதுரைக்கு தப்பித்தவர் தான் அபைச்சர் P..விஸ்வநாதன் இன்று அமைச்சராகிறார், என ஒரு தரப்பு தகவல் தருகிறது, மேலும் இரண்டு அமைச்சர் காங்கிரஸ் கட்சி வாங்கியது கிருஸ்தவ மிஷிணரி தயவு என சிலர் மத்தியில் கருத்து நிலவுகிறது, அதற்கு அவர்கள் கூறும் காரணம் தற்போது உள்ள அமைச்சர்களில் 70 சதவீதம் கிருஸ்தவ சமயம் சார்ந்த குடுபத்து நபர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது, மக்கள் தவெக தலைவர் விஜயை பொது மனிதராக நல்ல தலைவராகப் பார்த்த நிலை இந்த நிலையை காணும் மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுவதாக பலர் பேசும் நிலை தான் தற்போது காண்கிறோம்,நாளை அமைச்சராகும் விசிக வன்னி அரசு, மற்றும் இயூ முஸ்லீம் லீக் ஷாஜஹான்..
இவர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சிறுபான்மை நலத்துறை ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தவெக கூட்டணி அமைச்சரவையில் ஐயூஎம்எல் சார்பாக பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் அதனால் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 2ஆக உயரக்கூடும்.
அதேபோல் விசிக வன்னி அரசுக்கு ஆதிதிராவிட நலத்துறை மற்றும் ஷாஜஹானுக்கு சிறுபான்மை நலத்துறை ஆகியவை ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்படலாம்.
இதன் மூலமாக இந்த இரு கட்சிகளும் திமுக உடனான கூட்டணியில் இருந்து வெளியில் வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. தவெக ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த போது, தாங்கள் திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம் என்று கூறி இருந்தனர். தற்போது கூட்டணி ஆட்சியில் பங்கெடுப்பதால், திமுக உடனான உறவில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.




















கருத்துகள்