நெதர்லாந்திலிருந்து நமது பிரதமருடன் நாடு திரும்புகிறது ஆனைமங்கலம் செப்பேடுகள்,
முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் வழங்கப்பட்ட 30 கிலோ எடையுள்ள 21 செப்பேடுகளைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சாசனம் ஒரு பொக்கிஷமாகும். நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரத்தை அமைத்த ஸ்ரீ விஜய பேரரசு மன்னருக்கு, ஆனைமங்கலம் கிராமத்தை தானமாக வழங்கியதை இவை பதிவு செய்கின்றன.இந்தச் செப்பேடுகள் முதலாம் இராஜராஜ சோழனின் 21-வது ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1010-1012) வெளியிடப்பட்டன. கடாரத்தை (தற்போதைய இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் பகுதிகள்) ஆண்ட ஸ்ரீ விஜய மன்னன் 'சூளாமணிபன்மன்' கட்டிய 'சூளாமணி விகாரம்' என்ற பௌத்த மடாலயத்திற்கு ஆனைமங்கலம் கிராமம் தானமாக வழங்கப்பட்டது. சோழப் பேரரசின் கடல் கடந்த வர்த்தக வலிமையையும், இந்து மன்னரான இராஜராஜ சோழன் பௌத்த மதத்திற்கு அளித்த சமய சகிப்புத்தன்மையையும் இந்த தானம் உலகிற்கு பறைசாற்றுகிறது.
செப்பேடுகள் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. தொடக்கப் பக்கங்கள் சமஸ்கிருதத்திலும், பெரும்பான்மையான தகவல்கள் தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளன. சோழர்களின் சின்னமான 'புலி' முத்திரை இதில் இடம்பெற்றுள்ளது.நில எல்லைகள், வரி விலக்குகள், மற்றும் நிர்வாக நடைமுறைகள் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்டுள்ளன.கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நெதர்லாந்து நாட்டில் பாதுகாப்பில் இருந்த இந்த வரலாற்றுச் செப்பேடுகள், யுனெஸ்கோ தலையீட்டின் பேரில் இந்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தச் செப்பேடுகள் பெரிய லெய்டன் செப்பேடுகள் (Leiden plates) என்றும் அழைக்கப்படுகின்றன. ராஜராஜன் சோழன் காலத்து ஆனைமங்கலம் செப்பேடு, 300 ஆண்டுகளாக நெதர்லாந்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து சென்றுள்ள நிலையில், அவரிடம் இந்த செப்பேடுகளை நெதர்லாந்து. ஒப்படைத்தது.300 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய சோழர் கால செப்புப் பட்டயங்கள்!
பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற "ஆனைமங்கலம் சோழர் காலச் செப்புப் பட்டயங்கள்" (Leiden Plates) நெதர்லாந்து அரசால் இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன!
மாமன்னன் இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில், நாகப்பட்டினத்தில் இருந்த சூடாமணி விஹார புத்த மடாலயத்திற்கு வரி மற்றும் நில வருவாய் தானமாக வழங்கப்பட்டதை இந்த 21 செப்புப் பட்டயங்கள் விவரிக்கின்றன.
சுமார் 30 கிலோ எடையும், சோழர்களின் அதிகாரப்பூர்வ இராஜமுத்திரையையும் கொண்ட இந்த பட்டயங்கள் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் செதுக்கப்பட்டவை.
18 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கடந்த 160 ஆண்டுகளுக்கும் மேலாக நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் (Leiden University) பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
பல ஆண்டுகால ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நமது சோழர் பெருமையின் அடையாளம் மீண்டும் இந்திய மண்ணை வந்தடைந்துள்ளது








கருத்துகள்