முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஊழல் ஒழிந்து ஆட்சி மாற்றம் முதல்வராகும் விஜய்

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் நாளை தான் தமிழ்நாடு வருகை தருகிறார். தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் 108 வென்ற தவெக தலைவர் விஜய் முதல்வர்


பதவியேற்பு விழாவை மே மாதம் 7ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநருக்கு தவெக தலைவர் விஜய் புதிய கடிதம் எழுதியுள்ளார். நேற்றிரவு, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு தவைவர் விஜய் ஏற்கனவே மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஆளுநர், விரிவான தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, தேவையான அனைத்து விவரங்களையும் அளித்து,




இன்று மாலை 7.30 மணிக்கு மின்னஞ்சல் மூலம் விரிவான பதிலை அனுப்பியுள்ளார் தவெக தலைவர் விஜய். இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மூன்று மாநிலம் மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைத் தேர்தல் இறுதி முடிவுகளை அறிவித்தது. மாநில ஆளுனர் மற்றும் துணைநிலை ஆளுநரிடம் முடிவுகளை ஒப்படைக்கும் நிலையில் ஆளுநர் தகுதியுள்ள கட்சியை ஆட்சியமைக்க அழைக்க உள்ளார்.

அதில் 


மேற்கு வங்காளம்: மொத்தம் 293 தொகுதிகள் அதை பாரதிய ஜனதா கட்சி வெற்றி : 207, இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது,

திரினாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி :80, இடங்களில் வென்று பிரதான எதிர்கட்சியாகிறது, காங்கிரஸ் வெற்றி : 2,

சிபிஐ (எம் ): 1, அந்த மாநிலத்தில் இப்போது பாஜக ஆட்சி அமைகிறது நாம் கடந்த 29 ஆம் தேதி செய்தியில் கூறியபடி, அடுத்து 

தமிழ்நாடு மொத்தம் : 234, தமிழக வெற்றிக் கழகம் வெற்றி : 108, திமுக வெற்றி : 59,   அதிமுக வெற்றி : 47, பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி :4, காங்கிரஸ் வெற்றி : 5, பாரதிய ஜனதா கட்சி வெற்றி : 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி :-2, சிபிஐ (எம்)-2, அமமுக :1, தேமுதிக :1, விசிக,1 என்ற நிலையில் தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்யும் ஒரு தொகுதி நீக்கி 107 தொகுதி போக மீதம் ஆதரவாக 12 தொகுதி தேவை, இதை எதிர் தரப்பில் வென்ற ஐந்து உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை மட்டுமே வைத்து நிறப்ப முடியாது பாமக தனியே வந்தால் நான்கு மட்டுமே மீதம் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியை விட்டு வளியே வந்தால் திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதி விஜய் விலகும் இடைத்தேர்தலில் திமுகவை எதிர்க வேண்டிய நிலை வரும்  ஆகவே கம்யூனிஸ்ட் கட்சி அதை விரும்பாது, ஆனால் அவர்கள் அதிமுக கூட்டணி அமைய விடாமல் கெடுக்கும் வேலை செய்வார்கள், அதை கே. ஏ.செங்கோட்டையன்  சாதுர்ய அரசியல் மூலம் தடுத்து அதிமுகவில் எஸ். பி. வேலுமணி மற்றும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இரமதாஸ் ஆதரவு நிரந்தரம் என நினைத்து இணைவார்கள், விஜய் முதல்வராவார்,  சபாநாயகராவார், அதிமுக ஸ், பி, வேலுமணி தரப்பு,, திமுக பிரதான எதிர்கட்சி,இதுவே கள எதார்த்தம், அதுபோல 

அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தம் : 126, இடங்களில் 

பாரதிய ஜனதா கடசி +: 102, ல் வென்று நாம் முன்பே கூறியது போல ஆட்சியமைக்கிறது, காங்கிரஸ் : 19, பிரதான எதிர் கட்சி, ஏஐயூடிஎப் : 2,  

கேரளம் மொத்தம் : 140 இடங்களில் 

காங்கிரஸ் +: 102, இடங்களில் வென்று  ஆட்சி அமைக்கிறது, 

சிபிஐ( எம்) +: 35, பிரதான எதிர்கடசி  நாம் முன்பு கூறியது இதுவே 

பாரதிய ஜனதா கட்சி : 3 இடங்களில் வென்று சட்டசபை செல்கிறது, 

பாண்டிச்சேரி யூனியன் மொத்தம் : 30, இடங்களில் முன்பு கூறியபடி என். ரங்கசாமி முதல்வராகிறார்,

அ இ என் ஆர் காங்கிரஸ் : 12, இடங்களில் 

பாரதிய ஜனதா கட்சி : 4 இணைந்து கூட்டணி ஆட்சி 

காங்கிரஸ் : 1, தவெக 3, இடங்களில் வென்று எதிர் கட்சி தலைவராகிறது,








தமிழ்நாடு ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை மக்கள் அகற்றி இந்த சோதனையான கட்டத்தில் அமைந்திருக்கும் தவெக தலைமையிலான . முதல்வராக ஜோசப் விஜய் சந்திரசேகரின் ஆட்சி அமைகிறது மிகுந்த கடமை மற்றும் நிதானமும் கூர்ந்த மதியோடு செயல்படுவது இப்போது மிகவும் அவசியம் .

இந்த இடத்திற்கு வருவது பெரிது, அதை தக்க வைப்பது அறிது மக்களிடத்தில் இருக்கும் ஆதரவுக்கு நம்பிக்கையாகச் செயல்பட்டு அந்தப் பெயரைக் காப்பாற்றுவது அதைவிடப் பெரிது.







ஆகவே கடமை தவறாத நிதானத்தோடும் கூர்ந்த மதியோடும் செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதில் நீங்கள் வெற்றி அடைவீர்கள் என்று மக்களுடன் சேர்ந்து நானும் பப்ளிக் ஜஸ்டிஸ் இதழும், உறுதியாக நம்புகிற நிலை, வாழ்த்துக்கள், நாம் கடந்த ஆறுமாத காலமாகக் கூறியது, தான் எளிய மக்கள் புரட்சி தவெக ஆட்சி அமையும் என்பதே அது தற்போது நடந்துள்ளது, இதுவரை ஆட்சி நடத்திய ஊழல் கடசிகளின் நபர்களுக்கு பயம் மக்கள் மீது முதல் முறையாக வந்துள்ளது, அரசியலில் முதிர்ச்சி வேண்டும், ஓட்டுக்கு பணம் வேண்டும், அனுபவம் வேண்டும், கோடி கோடியாகச் செலவழிக்கவேண்டும்.  சிபாரிசு வேண்டும்..பரம்பரை அரசியல் வாரிசாக இருக்க வேண்டும், என்ற அரசியல் களம் தற்போது பிம்பம் உடைத்துள்ளது இளைய சமுதாயப் புரட்சி இது எனபது மகிழ்ச்சியளிக்கிறது வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி அனுபவம் கற்று பெற்று கடமை ஆற்றுங்கள்! இந்த நிலையில் நாம் கூறவேண்டியது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற இந்த திமுக ஊழல் திருடர்களிடம் போராடி வாங்கிய வெற்றி என மக்கள் மகிழ்ச்சி 





முன்னால் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை மக்கள் ஜனநாயகம் மூலம் வீழ்த்திக்  கைப்பற்றினார் தவெக உறுப்பினரான ஸ்ரீனிவாச சேதுபதி. 83375 வாக்குகள், கே ஆர்.பெரிய கருப்பன் - 83374 வாக்குகள்,  கே. சி.திருமாறன் ஜி - 29054,  நாம் தமிழர் - 15291 சசிகலா தரப்பு வேட்பாளர் - 6011, தவெக வேட்பாளர் வெற்றி என்பது ஒருவாக்கில் வந்த நிகழ்வு தான், ஆனால் அவர் வாங்கியது 300 வாக்குகள் வித்தியாசம் தான் திமுகவின் சதி காரணம் உதவி செய்த பாஜகவின் கூட்டணியின்









வேட்பாளராகப் போட்டியிட்ட தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் தலைவர் கே. சி. திருமாறன் ஜி எண்ணிக்கை மையத்தில் மாலை ஆறு மணிக்கு வராமல் இருந்திருந்தில் திமுக ஏமாற்றி அந்த வெற்றியை தட்டிப்பறித்திருக்கும், அதைத் தடுத்து மோசடியில் இருந்து மீட்டு தவெகவை தேர்தல் பார்வையாளரை வைத்து அறிவித்ததன் காரணமாக எண்ணிக்கையில் 107 ல் ஒன்று கூடி இரவு இரண்டு மணிக்கு 108 என தவெக தரப்பில் அதிகரித்தது.  32 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக 101 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது. தயவு செய்து தலைமையை விட்டு உடனே பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் ன கோரிக்கை எழுகிறது, பன்னிரண்டாவது தோல்வி தாங்க அக் கட்சி உறுப்பினர் மனதில் இடமே இல்லை...எடப்பாடிக்கு கே. பழனிசாமிக்கு எதிராகத்திரும்பிய சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை கூடும் கூட்டத்தில் கொந்தளிப்பார்கள்,

எடப்பாடி கே. பழனிசாமி தான்  செய்த தவறுகள் மற்றும் வழக்குகளுக்கு பயந்து பிஜேபியிடம் சார்ந்திருக்க வேண்டும். மற்ற எம்எல்எக்கள் ஏன் ஐந்து வருஷங்கள் காத்திருக்க வேண்டும் என்று நினைத்து...

சிலர் மட்டுமே அடுத்த கட்சிக்கு தாவினால் தான் கட்சி தாவல் தடை சட்டத்தில் பதவி பறிபோகும். கட்சியிலிருந்தும் வெளியேற்றபடுவார்கள்.


ஒரு கட்சியில்  3 ல் 2 பங்கு , அதாவது அதிமுக 47 ல் அதாவது 32 பேர் 

வெளியேறினால் கட்சி உடைந்ததாகவே கணக்கு ஆகவே பதவியைப் பறிக்க முடியாது. 

மூன்றாம் இடத்திற்கு அதிமுகவை தள்ளிய எடப்பாடி கே. பழனிசாமி தான் ஒரு எம்ஜிஆர் மற்றும் ஜெ.ஜெயலலிதா என நினைத்து கட்சியை தோல்விப் பாதையில் கொண்டு சென்ற நிலையில் 

கட்சி தாவல் தடைச் சட்டம் 

ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுவது என்பது அரசியல் ரீதியாக "கட்சித் தாவல்"  என்றாலும் 

இதைத் தடுப்பதற்காகவும் முறைப்படுத்துவதற்காகவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பத்தாவது அட்டவணையில்   கட்சித் தாவல் தடைச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது






இதன் முக்கிய விதிகள் மற்றும் நடைமுறையாக 

தகுதி நீக்கத்திற்கான காரணத்தில்

ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் கீழ்க்கண்ட சூழல்களில் தனது பதவியை இழக்க நேரிடும்:

சுயமாக ஒரு கட்சியிலிருந்து விலகி மற்றொரு கட்சியில் நேரடியாக இணைந்தால்.

சட்டமன்றத்தில் தனது கட்சி எடுக்கும் முடிவிற்கு  எதிராக வாக்களித்தால் அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்தால்.

சுயேச்சை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெற்றிக்குப் பிறகு ஏதேனும் ஒரு கட்சியில் இணைந்தால்.

ஆனால்




இதற்கு  
விதிவிலக்குகளும் பாதுகாப்பான நடைமுறையும் : தற்போதுள்ள சட்டத்தின் படி, ஒரு கட்சியிலிருந்து விலகி மற்றொரு கட்சியில் இணைந்தாலும் பதவி பறிபோகாமல் இருக்க வேண்டுமென்றால்:

ஒரு கட்சியின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3)உறுப்பினர்கள் பிரிந்து சென்று வேறொரு கட்சியுடன் இணைந்தால் அல்லது புதிய குழுவாகச் செயல்பட்டால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள்.

முன்பு இது மூன்றில் ஒரு பங்காக (1/3) இருந்தது, ஆனால் 91-வது சட்டத்திருத்தத்தின் மூலம் இது 2/3 ஆக உயர்த்தப்பட்டது.






சபாநாயகரின் அதிகாரம்: ஒரு உறுப்பினர் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டுமா என்பதை அந்தந்த அவையின் சபாநாயகர் தான் தீர்மானிப்பார்.

சபாநாயகரின் முடிவே இறுதியானது, எனினும் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.

தற்போதைய தமிழ்நாடு சூழலில் இதன் முக்கியத்துவம்: தமிழ்நாட்டில் தற்போது தொங்கு சட்டசபை நிலவுவதால், அதாவது 108-1 ல் 107 ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட சிறிய கட்சிகளின் ஆதரவு அல்லது மற்ற கட்சிகளிலிருந்து உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பது போன்ற பேச்சுவார்த்தைகள் எழலாம். 

இந்த நடைமுறையில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகரிடமே உள்ளது. தற்போது தொங்கு சட்டசபை என்பதால், சபாநாயகர் பதவி யாருக்குக் கிடைக்கிறது என்பது இதில் மிக முக்கியமானது.

ஆனால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் மாறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. 

அதற்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் சதுரங்கமே நடக்கும். 






ஒருவேளை  சொன்னது போல 32 பேர் கழன்று மாறிச்சென்றால், அது தமிழ்நாடு அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலேயே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும்.எடப்பாடிகே. பழனிசாமிக்கு எதிராகத் திரும்பியச ட்டமன்ற உறுப்பினர்கள் 

எடப்பாடி கே. பழனிசாமி தான் தான் செய்த தவறுகள் மற்றும் வழக்குகளுக்கு பயந்து பிஜேபியிடம் சார்ந்திருக்க வேண்டும். மற்ற எம்எல்எ க்கள் ஏன் ஐந்து வருஷங்கள் காத்திருக்க வேண்டும் என்று நினைத்து...

இதனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். எண்ணிக்கை கணக்கு: அதிமுகவின் 47 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு என்பது சரியாக 32 உறுப்பினர்கள்  இருந்தால் அது சட்ட ரீதியாக மிகவும் பலமாக இருக்கும்.

சபாநாயகரின் பங்கு: இந்த நடைமுறையில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகரிடமே உள்ளது. தற்போது தொங்கு சட்டசபை என்பதால், சபாநாயகர் பதவி யாருக்குக் கிடைக்கிறது என்பது இதில் மிக முக்கியமானது.





ஆனால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் மாறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. 

அதற்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் சதுரங்கமே நடக்கும். 

ஒருவேளை  சொன்னது போல 32 பேர் பிரிந்து சென்றால், அது தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலேயே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும்.     தற்போது மதுரை, தேனி, சிவகங்கை.மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட எம்ஜிஆர் ஜெயலலிதா காலம் போல வெல்ல முடியவில்லை முக்குலத்தோர் ஆதரவை முற்றிலமாக இழந்த அதிமுக!

மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. 2016 சட்டசபைத் தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதியில் 8ல் அதிமுக வெற்றி பெற்றது. 2021 தேர்தலிலும் கூட அதிமுக 5ல் வென்றது.



வழக்கமாக தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமூக மக்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பார்கள். அதன் காரணமாக முத்துராமலிங்கத் தேவருக்கு தங்கத்தில் கவசம் செய்து அப்போது முதல்வர் ஜெயலலிதா கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் சசிகலா நடராஜன்  உடனிருந்தர் 

2021 தேர்தலில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதால், அதிமுகவுக்கு பெரிய வெற்றியை தென் மாவட்ட மக்கள் கொடுக்கவில்லை. அதேபோல் அதிமுகவில் முக்குலத்தோர் கொஞ்சம் கொஞ்சம் ஒதுக்கப்படுவதாக பேச்சுகள் எழுந்தன. 

முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க பரிந்துரை செய்வோம் என்றெல்லாம் எடப்பாடி கே.பழனிசாமி வாக்குறுதி அளித்தார். ஆனால் முக்குலத்தோர் சமூக மக்கள் தவெக பக்கம் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். முக்குலத்தோர் ஆதரவை அதிமுக முற்றாக இழந்ததாகவும் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே மதுரை, தஞ்சாவூர், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை என்று தெரிகிறது. புதிய தமிழகம் கட்சி 56 தொகுதிகளில் பெற்ற மொத்த வாக்குகள் எண்ணிக்கை 93,669. 

Dr.கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரத்தில் 15050 வாக்குகளும், 

இரு தொகுதிகளில் போட்டியிட்ட திரு. ஷியாம் கிருஷ்ணசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 9522 வாக்குகளும், திருநெல்வேலியில் 10634 வாக்குகளும் பெற்றுள்ளார்.

 நாங்குநேரியில் தமிழ்ச்செல்வி 11141 வாக்குகளும் பெற்றுள்ளார். 

மீதி 52 தொகுதிகளில் சேர்த்து பெற்ற மொத்த குறைவான வாக்குகளை வைத்துக் கொண்டு தான் கூட்டணி கட்சிகளிடம் பேரம் பேசுகிறார் என்று எடப்பாடி கே.பழனிச்சாமி கூட சுட்டிக்காட்டி இருந்தார். புதிய தமிழகம் கட்சி சராசரியாக ஒரு தொகுதிக்கு 1673 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.

அடுத்து வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வாக்குகள் விபரங்கள் மிகவும் குறைவு,    தவெகவுக்கு வெற்றி கைகூடாத மாவட்டங்களாக 

கன்னியாகுமரி, தென்காசி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், நீலகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் தான்.  வெற்றிபெற முடியவில்லை. குறிப்பாக தவெக முதல் மாநாடு நடத்திய விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி"மாண்புமிகு பிரதமர் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. நம் மக்களின் நலனே எங்களின் ஒரே இலக்கு. அரசியலைக் கடந்து, மாநிலத்தின் முன்னேற்றத்திலும், தமிழக மக்களின் நலனிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம். இந்த முயற்சியில் ஒன்றிய அரசின் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்." - முதல்வராகும் விஜய், இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யை முன்பு ஆர்.எஸ்.எஸ். குழந்தை என்ற விசிக திருமாவளவன், இப்போது தவெகவுக்கு விழுந்த வாக்கினை பாஜகவுக்கு எதிரான வாக்கு என்கிறார். இது எந்த வகை அரசியல்.மேற்கு வங்கத்தின் புதிய முதல்வரின் பதவியேற்பு விழா மே 9 ஆம் தேதி நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் சாமிக் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.



இதற்குக் காரணம் மே 9ஆம் தேதியின் முக்கியத்துவம். பெங்காலி நாட்காட்டியில் பைசாக் மாதத்தின் 25ஆம் தேதி, ஸ்ரீ ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளாகும்.மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதாகட்சி  தலைவர் தேர்தலுக்காக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சரை அமிதஷாவையும், இந்திய அரசின் மத்திய மேற்பார்வையாளராகவும், மோகன் சரண் மகி, முதல்வர், ஒடிசா அரசு ஆகியோரையும் பாஜகவின் தலைமை நியமித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றதை அடுத்து இன்று புதுடெல்லி சிஆர் பார்க்கில் அமைந்துள்ள கலிபாடி கோயிலில் பாஜக தேசிய தலைவர் ஸ்ரீ நிதின் நவீன் சென்று வழிபாடு செய்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...