தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உதயசந்திரன் உள்ளிட்ட ஐ ஏ எஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்
நிதித்துறை செயலாளரான திமுக ஆட்சியில் இருந்து பல ஊழலுக்கு துணையாக செயல்பட்ட உதயசந்திரன் மாற்றப்பட்டு, சித்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலாலராக இருந்து திமுகவுக்கு ஆதரலாக பல தீய காரியங்கள் செய்த நிலையில் தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.
டாஸ்மாக் மேலாண் இயக்குனர் நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலா வளர்ச்சித்துறை மற்றும் கலாசாரத்துறை செயலாளராக ஸ்வர்ணா நியமிக்கப்பட்டுள்ளார்
.அமுதா சிறந்த அதிகாரி என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் திமுகவுக்கு ஆதரவாக கரூர் விவகாரத்தில் உதயசந்திரன் தூண்டுதலில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், அவருக்கு தேவையான சில வீடியோக்களை மட்டும் காட்டி, முழுப் பழியையும் தவெக தலைவர் முதல்வர் விஜய் மற்றும் கட்சி மீது சுமத்த முயன்றதால் அவர் செய்த செயல் ஒரு நடுநிலை அதிகாரியின் செயல்பாடாகத் தெரியவில்லை மாறாக, ஒரு அரசியல் கட்சி உறுப்பினர் போல பேசியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அதிகாரி என்ற முறையில் நடுநிலையுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம்.
ராம்சார் நிலத்திற்குள் முறைகேடாக பிரிகேட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை CMDA அப்பழுக்கற்ற அதிகாரி பிரகாஷ் IAS தற்பொழுது ரத்து செய்வாரா என்பது எழுவினா? ஜோதிடருக்கு அரச பதவி, என பேசும் பலர் கடந்த ஆட்சியில் நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்கள் நியமனம் செய்த நிகழ்வு குறித்து பேசியிருக்க வேண்டும்.தனது குதிரை இன்சிடாடஸுக்கு அரசவையில் பொறுப்பு வழங்கிய ரோம் அரசர் கலிகுலாவை குறிப்பிட்டு..
கார்த்தி ப. சிதம்பரம் MP பதிவு செய்த நிலைமை. தமிழகத்தில் சமீபத்திய ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் தமிழகத்தின் புதிய அட்வகேட் ஜெனரலாக (ஏஜி) பதவியேற்க உள்ளார்.
திரைப்பட நட்சத்திரம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) அரசு, மாநிலத்தின் உயர்மட்ட சட்ட அதிகாரி பதவிக்கு விஜய் நாராயணனை நியமித்துள்ளது,
முந்தைய திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தின் போது மாநிலத்தின் உயர்மட்ட சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமாவுக்குப் பிறகு அவர் தற்போது பதவியேற்பார்.
விஜய் நாராயண் இதற்கு முன்பு 2017-2021 வரை தமிழ்நாடு ஏஜியாக பணியாற்றினார்.
விஜய் நாராயண் லயோலா கல்லூரியில் பட்டம் பெற்று எல்.எல்.பி. 1982 ஆம் ஆண்டில் சட்டக் கல்லூரி, சென்னையில் பின் 2004 ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞர் பதவியைப் பெற்றார்.
அவர் புகழ்பெற்ற வழக்கறிஞர்களான கே. கே. வேணுகோபால் மற்றும் நீதிபதிகள் குடும்பத்திலிருந்து வந்தவர்.
இவர் இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் மருமகன் ஆவார். இவரது தந்தைவழி தாத்தா பழம்பெரும் வழக்கறிஞர் எம்.கே.நம்பியார் மற்றும் அவரது தாய்வழி தாத்தா சர்தார் கே.எம்.பணிக்கர், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் ஆவார்.தமிழ்நாடு அரசு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணனை அரசின் அட்வகேட் ஜெனரலாக நியமித்துள்ளது.விஜய் நாராயண் இதற்கு முன்பு அதிமுக ஆட்சியின் போது 2017 முதல் 2021 வரை அட்வகேட் ஜெனரலாக பணியாற்றியவர்.













கருத்துகள்