ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியான 24 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூன் மாதம் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், சி.வி. சண்முகம், சுனேத்ரா பவார் ஆகியோரின் ராஜினாமாவை அடுத்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள இரண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலும் இதே தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு ஆண்டுகளைக் கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நிறைவு செய்தவர்களுக்கு மாற்றாக புதிய உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் குரியன், ரவ்னீத் சிங் உள்ளிட்ட 24 பேர் அடுத்த மாதம் தங்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளனர். இதன் காரணமாக, புதிதாக 24 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் தலா 4 இடங்களுக்கும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்களுக்கும், ஜார்க்கண்ட்டில் 2 இடங்களுக்கும், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அதோடு, தமிழகத்தில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவைப் பதவியை ராஜினாமா செய்ததாலும், மகாராஷ்டிராவின் துணை முதல்வர் சுனேத்ரா பவார் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாலும் இவ்விரு மாநிலங்களிலும் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர் பதவிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேர்தல் அறிவிக்கை ஜூன் மாதம் 1ஆம் தேதி வெளியிடப்படும். அன்று தேர்தல் நடைமுறைகள் முறையாக தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் மாதம் 8 ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு ஜூன் மாதம் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்று மாலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். நள்ளிரவுக்குள் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்ற நிலையில், தவெக சார்பாக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பிரவீன் சக்கரவர்த்தி தற்போது தமிழ்நாடு சார்ந்து நிறுத்தப்படலாம், அல்லது, தவெகவில் சபாநாயகர் குடும்பம் சார்ந்த சத்யபாமா,
அல்லது லயோலா மணி வேட்பாளராக வாய்ப்பு என்ற நிலை தான் உள்ளது.
பிற்ப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் நலனைப் பாதுகாப்பதும் ஒரு வகையில் சமூகநீதி தான்!
இனி அட்டவணை பட்டியல் ஜாதி வாக்கு வங்கியை விசிகவால் திமுகவிற்கு திருப்பி தர முடியாது! அதுபோலவே இஸ்லாமிய சிறுபான்மையினரின் வாக்கு வங்கியும், கிருஸ்தவ வாக்கு வங்கி தற்போது நடிகர் விஜய் தவெக தலைவராகி முதல்வர் சி. ஜோசப் விஜயாக வந்த பின்னர் திமுக வாக்கு வங்கி இனி வேறு வழியைத் தான் தேட வேண்டும்!
அதையும் தவெக அரசே செய்து தரும்!
தவெக அரசும் கட்சியும் காட்டும் மிகையான அட்டவணை பட்டியல் ஜாதி ஒரு சாரார் ஆதரவு தேவேந்திர வேளாளர், உள்ளிட்ட மற்ற சமூகங்களை திமுகவின் பக்கம் திருப்பும்!
அதேசமயம், திமுக தன்னைத் தொடர்ந்து பழைய சிறுபான்மை ஆதரவு நிலைக் கட்சியாக காட்டிக் கொண்டால், திமுக முற்றாக அழிந்து போகும்!
சமூக நீதி என்பது பட்டியல் சமூக மக்கள் பாதுகாப்பு மட்டும் இல்லை என்பதை திமுகவுக்கு இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்!விஜயின் அரசியலாலும் ஆட்சியாலும் தமிழ்நாடு அரச நிர்வாகத்தில் மாற்றம் வருமா என்பது தெரியாது அது வராமலே கூடப் போகலாம் ஆனால் அவரால் அரசியல் கட்சிகளில் பலத்த மாற்றம் வந்துள்ளது அதனை ஒப்புகொள்ளத் தான் வேண்டும்,
முதல்வர் ஜோசப் விஜயின் நகர்வு அல்லது அவரை இயக்கும் கோஷ்டிகளின் நகர்வு திமுக கூட்டணியினை உடைப்பதாகவே ஏற்படுத்தப்பட்டு உள்ளது, நிச்சயம் அவர்கள் நினைத்திருந்தால் அதிமுகவோடு ஒட்டி கொண்டு திமுகவின் உதிரிகளை புறம் தள்ளியிருக்கலாம் ஆனால் விசிக , கம்யூனிஸ்ட், பாகிஸ்தானை உருவாக்கிய அந்த முகமதலி ஜின்னாவின் முஸ்லீம் லீக் என எல்லோரையும் பிடித்து அமைச்சர் பதவி கொடுத்திருப்பது திமுக கூட்டணிக்கான முதல் அடி,
காங்கிராஸை பிரித்து கையில் வைத்திருப்பதும் அப்படியே
விசிக போன்ற கட்சிகளுக்கு அமைச்சர் பதவி என்பது வெறும் மைனாரிட்டி அரசை சமாளிக்க அல்ல, இனி எக்காலமும் திமுக தனித்து ஆட்சி அமைக்க முடியாத படி இவர்களைத் தூண்டிவிட்டு திமுகவுக்கு கட்சி ரீதியாக ஆட்சி ரீதியாக மிகபெரிய நெருக்கடி கொடுக்கும் ஒரு உத்தி
இவர்கள் கவனம் முழுக்க திமுகவினை சிதைப்பதிலே தான் இருக்கிறது என்பதுதான் இங்கு கவனிக்கதக்கது
இப்போது திமுக தனிமரமாகி "பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக" எனற புலம்பல் நிலை தான் ஏ. ராஜா மூலம் வெளிவந்த ஒரு அநாகரீகப் புலம்பல்
இப்படி திமுக கூட்டணியினை ஒரு பக்கம் அக்கட்சி விறகுக்கட்டை போல கூட்டணியைப் பிளந்து போட்ட நிலையில் அதிமுகவினை இரகசியமாகக் கையாளுகின்றது, தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் அதிமுகவினர் வேகமாக தவெகவில் இணைகின்றார்கள், விரைவில் பெரிய முகங்கள் கூட இணையலாம்
கட்சித் தாவல் விதிப்படி பதவி போகும் எனும் அச்சத்தால் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று யோசிக்கலாம் ஆனால் நாளையே மேல் சபை எம்பி போன்ற பதவிகள் தவெகவினால் கிடைத்தால் நிச்சயம் கட்சி தாவுவார்கள், அதிமுக கதை இனி அவ்வளவு தான் ஜெ. மரணம் முதல் சிதைவு அதில் அரசியல் காரணம் பல இனி எழும்ப வழியில்லை
ஆக தமிழ்நாடு அரசியல் இப்போது தனித்துவிடபட்ட திமுக ஒரு பக்கம், கூட்டணி அரசு கொண்ட தவெக ஒரு பக்கம் என மாறிவிட்டது
இப்போது திமுகவுக்கு வலுவான கூட்டணி வேண்டும், கூட்டணி இல்லாமல் அதுவும் தேசிய கட்சி பலம் இல்லாமல் அவர்களால் அரசியல் செய்யமுடியாது
ஆக திமுகவுக்கு இப்போது இருக்கும் மிகசிறந்த வாய்ப்பு பாஜகவுடன் ஒட்டிக் கொள்வது, இங்கு பாஜக அதற்கு மறுப்பு தெரிவிக்கும் என நினைத்தால் அண்ணாமலை போன்றோர் எதிர்ப்பால் அது நடக்காது என நினைத்தால் பலரது அரசியல் அறிவு அவ்வளவு தான்
பாஜகவுக்கு தேவை டெல்லியின் எம்பி கணக்கு, அவர்களால் முடிந்தவரை தமிழ்நாடு முட்டிமோதி தனியேவும், அதிமுகவை பலவாக உடைத்தும் பின் அதிமுக கூட்டணியோடும் தேர்தலைப் பார்த்துவிட்டார்கள், தனியே கட்சி ஆட்சியினை பிடிக்கும் என்பது பின் காலத்தில் அடுத்த தலைமுறையில் நடக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரிகின்றது, ஆனால் பாஜகவின் தொண்டன் கனவு, இலவ மரத்தைக் காவல் காத்த கிளியின் நிலைதான்.
இதனால் டெல்லியில் எம்பி கணக்கு, தமிழ்நாடு வாக்கு வங்கி கணக்கு என எல்லாம் கணக்கிட்டால் திமுக அதன் சரியான இலக்கு
ஏற்கனவே சிறுபான்மை வாக்கு தாழ்த்தபட்டோர் வாக்கு விஜய்க்கு சென்றுவிட்டதால் திமுக கடும் ஊழல் செய்து மாட்டிக் கொண்டு அழுத்தத்தில் இருக்கின்றது, காங்கிரஸை இனி தவெக விஜயால் சுலபமாக கழற்றிவிட முடியாது அதன் பின்புலம் வேறு என்பதால் பாஜகவுக்கும் திமுக தான் வாய்ப்பு என்பதை உணர்ந்து இனி அவர்கள் அரசியல் பாஜகவை நோக்கி நகர்ந்து செல்லும்
அநேகமாக இந்நேரம் அறிவாலயத்தின் பரணில் இருந்து வாஜ்பாய் கலைஞர், வாஜ்பாய் அத்வாணி, வாஜ்பாய் மோடி என பழைய படங்கள் எல்லாமே தூசு தட்டபடலாம், "தாரதரமில்லா ஆட்சியினை அகற்ற தாமரைக்கு கைகொடுப்போம்" போன்ற வசனங்களுடன் அவர்கள் கை நீட்டலாம், பாஜகவும் அதை பற்றிக் கொள்ளலாம்
மக்களாட்சி அரசியல் இதுதான், அதுவும் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலும் இதுதான், அதே நேரம் திமுகவின் எதிர்காலமும் இன்னும் 10 ஆண்டுக்கு மேல் இல்லை என்பதால், சசிகலா இல்லா அதிமுகவின் நிலை ஸ்டாலின் குடும்பம் இல்லா திமுகவுக்கு நிகழும் என்பதால் மேற்கு வங்காளம் போல் நிதானமாக இங்கு பாஜக ஆட்சிக்கு வரலாம் அதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும்
சரி, அப்படியானால் தவெக நிலை என்னாகும் என கேட்டால் அக்கட்சி ஒரு பொருட்டே அல்ல என்பதுதான் நிலவரம், ஆதவ் அர்ஜூனரவையும், திருமாவளவன் உள்ளிட்ட சிலரை பாஜக இனி கூர்ந்து கவணிக்கும் இடத்தில் அக்கட்சியும் ஆட்சியும் வீழும் என்பதை விட விஜய் எனும் ஒற்றை மனிதர் விலகினால் அக்கட்சியே வீழும் என்பதால் அதை பாஜக ஒடுக்குவது சுலபம், என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
இருந்து பாருங்கள், கொஞ்ச காலம் விஜய் கோஷ்டி ஆடும் அதை எதிர்த்து திமுக பாஜகவோடு கைகோர்த்து ஆடும், எல்லாம் முடியும் போது பாரதபோரில் கௌரவர் அழிந்து, பாண்டவர் வனவாசம் சென்றபின் பரீட்சித்து மஹாராஜா எஞ்சியிருந்தது போல பாஜக மட்டும் எஞ்சியிருக்கும். இதுவே மேலிடத்து அரசியல் கணக்கு. ஆனால் விசிலுக்கு வாக்களித்த
மக்கள் இப்போதய கூட்டணி மந்திரி சபை அமைவதை அந்த அரசியல் முகம் தெரியாத மக்கள் விரும்பவில்லை என்பதே உண்மை



























































கருத்துகள்