முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இராமேஸ்வரம்- காரைக்குடி வழியாக–சென்னைக்கு விரைவில் வந்தே பாரத் ரயில்

இராமேஸ்வரம்-      காரைக்குடி வழியாக–சென்னைக்கு வந்தே பாரத் ரயில்  உத்தேச கால அட்டவணை வெளியீடு

இராமேஸ்வரம்–சென்னை இடையே காரைக்குடி வழியாக இயக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான உத்தேச நேர அட்டவணை வெளியாகியுள்ளது.

இராமேஸ்வரத்திலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயில், இராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், தாம்பரம் வழியாகச் சென்று இரவு 10.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என உத்தேச கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுத்த நேரங்கள்: இராமநாதபுரம் – 3.15 PM, சிவகங்கை – 4.10 PM, காரைக்குடி – 4.40 PM, புதுக்கோட்டை – 5.10 PM, திருச்சிராப்பள்ளி– 6.10 PM, விழுப்புரம் – 8.15 PM, தாம்பரம் – 9.40 PM, சென்னை எழும்பூர்–10.20 PM


இந்த ரயில் திங்கட்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரைக்குடி வழியாக வந்தே பாரத் சேவை தொடங்கினால், சிவகங்கை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகளுக்கு சென்னை பயணம் எளிதாகும் என்பதால் பொதுமக்களிடையே நல்ல எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது உத்தேச நேர அட்டவணை மட்டுமே. ரயில் சேவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் நிறுத்தங்கள் மற்றும் பயண நேரங்களில் மாற்றம் இருக்கலாம். தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை உறுதிப்படுத்திய பின்னரே பயணத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.  கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு வரையிலான நிதியாண்டு காலகட்டத்தில் 1,356 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 3 நிதியாண்டுகள் மற்றும் நடப்பு நிதியாண்டில் மொத்தம் 3,511 கிலோமீட்டர் தொலைவை உள்ளடக்கிய 29 ஆய்வுகளுக்கு (4 புதிய வழித்தடம், 25 இரட்டை வழித்தடம்) ஆகியவைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதலில் உள்ள தாமதம் காரணமாக முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் தடைப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகத் தேவைப்படும் 4,612 ஹெக்டேர் நிலங்களில் 1,178 ஹெக்டேர் ( அதாவது 26 சதவீதம் ) நிலங்கள் மட்டும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.நிலம் கையகப்படுத்துதலை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசின் ஆதரவு ரயில்வே நிர்வாகத்துக்குத் தேவை.

நிலம் கையகப்படுத்துதலில் ஏற்படும் தாமதம் காரணமாக திண்டிவனம்- திருவண்ணாமலை புதிய வழித்தடம், அத்திப்பட்டு-புத்தூர் புதிய வழித்தடம், மொரப்பூர்-தர்மபுரி புதிய வழித்தடம், மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய வழித்தடம், தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை புதிய வழித்தடம்  உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவது தாமதமாகியுள்ளது.

தமிழநாடு-தெலுங்கானா மாநிலங்களில் பல்வேறு நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக 2025-26, 2026-27-ஆம் நிதியாண்டில் (30.06.2026 வரை) முறையே 21 இணை ரயில் சேவைகளும் (10 அம்ரித் பாரத் விரைவு ரயில் உட்பட), 23 இணை ரயில் சேவைகளும் (16 அம்ரித் பாரத் விரைவு ரயில் உட்பட) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்  இந்திய இரயில்வேயால் இயக்கப்படும் ஒரு நவீன, அதிநவீன, மற்றும் அரை-அதிவேக  பயணிகள் இரயில் சேவையாகும். இது உள்நாட்டிலேயே முற்றிலும் வடிவமைக்கப்பட்டு, மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பெருமைக்குரிய இரயில் சேவையாகும். ஆரம்பத்தில் இது 'டிரெயின் 18' என அழைக்கப்பட்டது  இந்த இரயில்கள் தமிழ்நாடு, சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலையில் ICF  ல் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும். இதற்குத் தனி இன்ஜின் கிடையாது. மெட்ரோ இரயில்களைப் போல, பெட்டிகளின் கீழேயே மின்சார மோட்டார்கள் பொருத்தப்பட்டு சுயமாக இயங்கும் மின்சார பல அலகு (EMU) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது, சோதனை ஓட்டங்களின் போது இது மணிக்கு 183 கி.மீ வேகம் வரை எட்டியுள்ளது. தற்போது தண்டவாளக் கட்டுப்பாடுகள் காரணமாக அதிகபட்சமாக 130 - 160 கி.மீ/மணிக்கு செயல்பாட்டு வேகத்தில் இயக்கப்படுகிறது. வெறும் 52 விநாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது, இதில் குளிரூட்டப்பட்ட ஏசி சேர் கார்  மற்றும் பிரீமியம் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் என இரு பிரிவுகள் உள்ளன. எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் 360 டிகிரி சுழலும் இருக்கைகள் உள்ளன, தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் திரை, பயோ-வேகக் கழிப்பறைகள்  மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணக் கட்டணத்திலேயே உயர்தரமான சைவ மற்றும் அசைவ உணவு வசதிகளும் அடங்கும். இந்தியாவின் முதல் வந்தே பாரத் இரயில் சேவை 15 பிப்ரவரி 2019 ஆம் தேதி அன்று புது தில்லி மற்றும் வாரணாசி இடையே பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. நீண்ட தூரப் பயணங்களுக்காக, படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர்  ரயில்கள் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சரக்குகளை அதிவேகமாக கொண்டு சேர்க்க வந்தே பாரத் சரக்கு இரயில் சேவைகளும் சோதிக்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டில் சென்னை முதல் கோயம்பத்தூர் , திருநெல்வேலி , மைசூர், நாகர்கோவில் போன்ற பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில்கள் மிகச் சிறப்பாக இயக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்