எந்த மானமுள்ள் தமிழனும் இன்னொருவர் காலடியில் விழுந்து கிடக்க மாட்டான். ஆனால், மிகப்பெரிய பாரம்பரிய இனத்தின் முதல்வராக இருக்கும் பழனிசாமி மோடி, அமித்ஷாவின் காலில் விழுந்துக் கிடப்பதை பார்க்க எனக்கு கோபமாக வருகிறதென சென்னை பரப்புரையில் ராகுல்காந்தி பேச்சு தற்போதுள்ள அதிமுக பழையது அல்ல. அது முகக்கவசம் அணிந்த, பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளால் நடத்தப்படும் அதிமுக என்பதைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்தத் தமிழரும் நரேந்திர மோதியின் முன் தலைவணங்க விரும்பவில்லை. எந்த தமிழரும் அமித் ஷா அல்லது மோகன் பகவத்தின் காலில் விழ விரும்பவில்லை. எனவே தற்போதைய தமிழக முதலமைச்சர் ஏன் மோதி, அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸிடம் சரண் அடைந்துவிட்டார்? எந்த ஒரு தமிழரும் அவ்வாறு செய்யமாட்டார்கள். இது அவர்களின் பண்பாட்டிற்கு எதிரானது. ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள முதல்வர் தலைகுனிந்து நிற்கிறார். ஏனெனில், மோதி, மத்திய புலனாய்வு துறையைக் கையில் வைத்திருப்பதால், தமிழக முதல்வர் அவருக்குத் தலைகுனிகிறார். அதற்கான விலையை அவர் கொடுப்பதில்லை. தமிழக மக்கள்தான் அதற்கான விலையை கொடுக்கிறார்கள். தம...
RNI:TNTAM/2013/50347