முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்75-வது சுதந்திர தின. புகைப்பட கண்காட்சி


நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் பிரம்மாண்ட புகைப்பட கண்காட்சியை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மண்டல கூடுதல் ரயில்வே மேலாளர் திரு சச்சின் புனேதா தொடங்கி வைத்தார்

மத்திய அரசின் 'விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தை' குறிக்கும் வகையில் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தால் மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டுவரும் கண்காட்சி வரிசையில் இது பத்தாவது ஆகும்

வரவிருக்கும் 75-வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில், 'விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்'  கொண்டாட்டங்களை, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத்தில் உள்ள தண்டி வரை மகாத்மா காந்தி மேற்கொண்ட உப்பு சத்தியாகிரக யாத்திரையை நினைவுபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட  பாதயாத்திரைக்கு  மார்ச் 12 அன்று கொடியசைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வை சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில், மத்திய அரசோடு இணைந்து 2021 மார்ச் 12 ஆம் தேதி தொடங்கி 75 வாரங்களுக்கு கண்காட்சிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகின்றன.       

இத்தகைய கண்காட்சி ஒன்றை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  மண்டல கூடுதல்  ரயில்வே மேலாளர் திரு சச்சின் புனேதா தொடங்கி வைத்தார். பத்திரிகை தகவல் அலுவலகம்/மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜெ காமராஜ், நிலைய இயக்குநர் திரு உமாசங்கர் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் ரயில்வே ஆகியவற்றின் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் வாழ்வையும், நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் இந்த புகைப்பட கண்காட்சி விளக்குகிறது.

சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வரும் தினசரி பயணிகளின் சராசரி எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த ஐந்து நாள் கண்காட்சி நடைபெறுகிறது.

கடுமையான கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு கொவிட்-19 தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ளுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் கைப்பிரதிகள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், சென்னை, இத்தகைய கண்காட்சிகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு நகரங்களில் நடத்தியுள்ளது.

சென்னையில் உள்ள காந்தி மண்டபம், திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூரில் மார்ச் 12 அன்று கண்காட்சிகளை மாநில அரசோடு இணைந்து மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் நடத்தியது. இதைத் தொடர்ந்து, புதுச்சேரி, மதுரை, ராமநாதபுரம், தர்மபுரி, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலியில் உள்ள அதன் கள அலுவலகங்களில் மார்ச் மாதத்தில் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் கண்காட்சிகளை நடத்தியது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் கண்காட்சி இந்த வரிசையில் பத்தாவது ஆகும்.

கோயம்புத்தூரில் உள்ள கள மக்கள் தொடர்பு அலுவலகம் இதே போன்றதொரு  கண்காட்சியை அந்நகரத்தில் இன்று தொடங்கியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...