முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெளிநாடு வாழ் இந்தியர் திரும்பி வந்த பின் ஒரு வில்லங்கப்புகார்

         'எப்போது போன் செய்தாலும் நர்மதா போன் பிஸிதான். அங்கதான் டவுட் வந்துச்சு.. ராஜேஷ்தான் காரணம். சில சமயம் என் போனை எடுக்கவே மாட்டார்.. இங்க தான் எனக்கு டவுட் ஆரம்பிச்சது, பணம் எல்லாமே போச்சு..   எஸ்.ஐ ராஜேஷூடன் மனைவி நர்மதாவுக்கு உள்ள கள்ளத் தொடர்பு பற்றி புலம்பும் வெளிநாட்டிலிருந்து வந்த கணவர்.. பேரதிர்ச்சியில் ! சென்னை கேகே நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மனைவி நர்மதா. இந்த தம்பதியினருக்கு இருகுழந்தைகள் உள்ளனர். ஜனார்த்தனன் துபாயில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சென்னையில் தனியாக இருந்த நர்மதாவிற்கு திருநின்றவூர் போலீஸ் எஸ்ஐயுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பும் பணம் அனைத்தையும் அந்த எஸ்ஐயிடம் கொடுத்து விட்டதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த ஜனார்தனுக்கு மனைவியின்  மீது சந்தேகம் ஏற்பட்டு தொடர்ந்து ஜனார்த்தனன்  கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில் நர்மதா எஸ்ஐ இருவரும் தனியாக சந்தித்தபோது அவரை பின்தொடர்ந்த ஜனார்த்தனன்  புகைப்படமும் எடுத்துள்ளார். பின்னர் அதைக் கொண்டு அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். எனது மனைவி நர்மதாவிற்கும், திருநின்றவூர் எஸ்ஐ ராஜேஸுக்கும் தகாத உறவு உள்ளது. அதை தட்டிக் கேட்டபோது அவர் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்.  அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்த போது நான் அவர்களை பின் தொடர்ந்து சென்று புகைப்படம்  எடுத்துள்ளேன். என் மனைவி நர்மதா குழந்தைகள் பெயரில் நான் வாங்கிய 5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை எஸ்ஐ ராஜேஷிடம் கொடுத்துவிட்டார். இந்நிலையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சொத்துகளை மீட்டு தர வேண்டும் என ஜனார்த்தனன் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜனார்த்தனன் துபாயில் வேலை பார்க்கும்.. வெளிநாடு வாழ் இந்தியர் .கடந்த  மே மாதம் சென்னைக்கு வந்திருந்த ஜனார்த்துக்கு.  மனைவியின் பல சமாச்சாரங்கள் தெரியவந்தன. "நான் துபாயில் வேலை பார்த்து வருகிறேன்..என் மனைவிக்கும் திருநின்றவூரில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் ராஜேஷூக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதை நான் கண்டித்தேன்.. அதனால் எனக்கும் என் சகோதரி குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். என் குழந்தைகளைப் பார்க்க நான் சென்றபோது, ராஜேஷ், நர்மதா 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அதைக் கண்டித்தேன்.. அப்போது ராஜேஷ் என்னை தாக்கினார். என்னைத் தாக்கிய ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ஜனார்த்தனன் வெளிநாட்டில் வேலை பார்த்தாலும், சென்னையில் சொந்தமாக ஒரு கம்பெனி தொடங்கி உள்ளார்.. அதையும் நர்மதாதான் கவனித்துக் கொள்வாராம்.. மாமியார் வீட்டு தொந்தரவு காரணமாக, குழந்தைகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் சொத்தை உயில் எழுதி வைத்து அதையும் ஏமாற்றி விட்டதாக ஜனார்த்தனன் சொல்கிறார்.. எப்போ போன் பண்ணாலும், நர்மதா போன் பிஸியாகவே இருக்குமாம்.. சில நேரம் போனே எடுக்க மாட்டாராம்  இப்படியெல்லாம் ஜனார்த்தனன் குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் இது அத்தனையையும் நர்மதா மறுக்கிறாராம். "ஜனார்த்தனனுக்கு குடிப்பழக்கம், சூதாடும் பழக்கம் உள்ளதால், அதில்தான் லட்சக்கணக்கான ரூபாயை இழந்தார். என் குடும்பத்தினர் தான் சொத்துக்களை விற்று அதை சரி செய்தனர்.. குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்தது அவரது சுயநினைவோடுதான்.
ஜனார்த்தனனின் சகோதரி, கட்சியில் இருக்கிறார்.. அவர் சொல்லிதான் போலீசில் புகார் தந்தார்.. எனக்கு மாமியார் வீட்டு தரப்பில் நிறைய மிரட்டல் வந்தது.. அந்த சமயத்தில் கேகே நகரில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த ராஜேஷ் சட்டப்படி எனக்கு உதவினார்.. ஆனால் எங்களை தவறாக ஜனார்த்தனன் பேசுகிறார்.. இப்படி தொடர் தொல்லைகள் தந்ததால், கோர்ட்டில் விவாகரத்திற்கும் விண்ணப்பித்துள்ளேன்" என அவர் தரப்பு கருத்தை எடுத்து வைக்கிறார்.
எனினும், இதில் யார் பக்கம் உண்மை என்பது சரியாகத் தெரியவில்லை.. ஆனால், போலீஸ்காரரை பற்றியே இப்படி ஒரு பகீர் புகார் கிளம்பி உள்ளதால், இரு தரப்பையும் தீர விசாரித்து உரிய முடிவை காவல்துறை எடுக்க வேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் ஒரு உண்மை வெளிநாட்டுக்குச் சென்று திரும்பிய பலர் குடும்பத்தில் விவாகரத்து வரை வருவது தற்போது ஜகஜநிலையாகிப் போக காரணம் ...உங்கள் பார்வைக்கே விட்டு விடலாம் .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த