நீதிமன்றங்கள் வழக்கம்போல் செயல்படுவது குறித்து ஏப்ரல் 29 ஆம் தேதி தெரியும்.
சென்னை உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் உள்பட மீண்டும் எப்போது வழக்கம்போல் செயல்பட அனுமதிப்பதென சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, ஏப்ரல் 29 ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் நடவடிக்கையாக, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றில் வழக்கமான முறையிலான வழக்கு விசாரணைகள் கடந்த ஒரு மாதத்துக்கு மேல் நடைபெறவில்லை.
முக்கியமான, அவசர வழக்குகள் மட்டும் காணொளிக் காட்சி முறையில் நடத்தப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றங்களை மீண்டும் வழக்கம்போல் செயல்பட அனுமதிப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, வரும் 29 ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
உயர் நீதிமன்றம் உள்ளிட்டவற்றின் நீதிபதிகளுடன் அவர், காணொளிக் காட்சி முறையில் நடத்தவுள்ள இந்த ஆலோசனைக்குப் பின் இறுதி முடிவு எடுக்கப்படுமெனத் தெரிகிறது.
நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருமா, இல்லையா என தெரியாத பட்சத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்