நடிகர் எஸ் வி.சேகர் வீட்டில் காய்ச்சிய பால் கெட்டுப் போய் வீட்டிற்கே வந்து மாற்றித்தந்த ஆவின் அதிகாரி
சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு ட்விட்டர் பதிவு காலை வாங்கிய ஆவின் பால் 13 பாக்கெட்டுகளில் 9 பாக்கெட்டுகள் பால் குக்கரில் காச்சும் போது திரிந்து விட்டது. வீட்டில் 90 வயது தாயார் 7 வயது 2 வயது குழந்தைகள் உள்ளது. நான் என்ன செய்வது' என்று கேள்வி எழுப்பி இருந்தார். நடிகர் எஸ்.வி சேகரின் ட்விட்டர் பக்கத்தில் இந்த ட்வீட்டை பார்த்ததும் ட்விட்டர்வாசிகள் ஏகப்பட்ட கமெண்ட்களை பதிவிட ஆரம்பித்தனர்
இப்போது இன்னொரு ட்வீட் போட்டுள்ளார் எஸ்வி சேகர்.. அதில், ‘நான் தங்களுக்கு பதிவு பண்ணிய 3 மணி நேரத்துக்குள் 9 புதிய double toned பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கு வந்து மாற்றிக்கொடுத்து சென்றார். தங்களுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்' என தெரிவித்துள்ளார்.
இந்த ட்வீட்டை பார்த்ததும் திரும்பவும் ட்விட்டர்வாசிகள் திரண்டு வந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. கொரானா நேரத்தில் மக்களின் உயிரை காக்க வேண்டிய ஆயிரக்கணக்கான வேலைகள் இருக்கும் நிலையில் எஸ்.வி சேகருக்கு பால் பாக்கெட்டுக்கள் மாற்றி கொடுப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது என்று கண்டனங்கள் ஒரு பக்கம் எழுந்து வருகின்றன.
அதேபோல, ஒருசிலர் கிண்டலடித்தும் பதிவிட்டு வருகின்றனர். 'என் வீட்டில் 2 பாக்கெட் ஆவின்பால் கெட்டு போய் விட்டது. ஏஜெண்ட் உங்களது தவறுக்கு பொறுப்பேற்க முடியாது என்று சொல்லி விட்டார். எனக்கும் சொல்லி வேறு பாக்கெட் வாங்கி தர இயலுமா? நான் பென்சனில் வாழ்க்கை நடத்தறவன்' என்று ஒருவர் கேட்டுள்ளார். 'இதுக்கு எல்லாம் முதலமைச்சரிடம் புகார் செய்வதா? ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு இதுதான் வேலையா ? என்று எஸ்.வி. சேகரை கலாய்த்தும் வருகின்றனர்.
கருத்துகள்