முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர் விஜய் வழங்கிய நிதியுதவி.தென் மாநிலங்களில் வரவேற்பு. 

நடிகர் விஜய் வழங்கிய நிதியுதவி.தென் மாநிலம் முழுவதும்  வரவேற்பு. 
நடிகர் விஜய் கொரானா நிவாரண நிதியை தென்னிந்திய மாநிலங்களுக்கு பிரித்து உதவியது மக்களிடம் பெரிய வரவேற்பாக  மாறியுள்ளது.
ஒரு கோடியே முப்பது இலட்சம் நிதி கொரானாவால் உலகம்  முழுவதும் பாதிப்புள்ளது.  தென்னிந்திய மாநிலங்களில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய் வட இந்திய நடிகர்களுக்கு ஈடாக நிவாரண நிதியளித்துள்ளார்.
தமிழகத்திற்கு ஐம்பது லட்சம் நிவாரண நிதி பிரதமரின் சிறப்புக் கொரானா நிவாரண நிதிக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாயும் கேரளாவிற்கு பத்து இலட்சமும், சினிமாவின் பெப்சி சங்கத்திற்கு இருபத்தைந்து  இலட்சமும் புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குச் சராசரியாக ஐந்து இலட்சமும் வழங்கி. மொத்தமாக 1கோடியே30 இலட்சம் ரூபாய் நிவாரண நிதியை நடிகர் விஜய் வழங்கி உள்ளார். விஜயின் இந்த உதவி மக்கள் மத்தியில் நல்ல  வரவேற்பைப் பெற்றுள்ளது.ஒருமாதம் முன்பு நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.  சோதனையில்  வீட்டில் இருந்து எந்த விதமான பொருளோ, பணமோ பறிமுதல் செய்யப் படவில்லை. விஜய்  நடித்த படத்திற்கு  சரியாக வரி கட்டியுள்ளதாக வருமான வரித் துறை சான்று  கொடுத்தது.இப்படி சோதனைக்குப்  பின் கூட பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் நிதியளித் துள்ளார். தமிழகப் பங்கான ஐம்பது இலட்சத்தில் பாதி விஜயின் செயல் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.   அரசியல் எதையும் பார்க்காமல் உதவி செய்துள்ளார். என்பது பலர் பார்வையில் இருந்தாலும் சோதனை நடத்தாமல் இருந்திருந்தால் தமிழகத்திற்கு வழங்கியது போல இந்தியாவிற்கு ஐம்பது கொடுத்திருப்பார் என்ற பேச்சும் அரசியல் சினிமா வட்டாரத்திலும் பேச்சாகவே வலம் வருகிறது.புதுச்சேரியின் முதல்வர் நாராயணசாமி நடிகர் விஜயதசமி மனம் திறந்து பாராட்டியுள்ளார்.


கருத்துகள்