முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் காணொலிக்காட்சி  மூலம் தொண்டர்களுக்கு முதல்முறையாக நேற்று உரையாற்றினார்.

சிலரின் செயலுக்காக ஒரு சமூகத் தையே புறக்கணிக்கக்கூடாது, பாகுபாடின்றி உதவி செய்யுங்க ளென ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து.
ஒரு சிலரின் அச்சம், கோபத்தால் செய்த செயலுக்காக ஒரு சமூகத்தையே குறைசொல்லி புறக்கணிக்கக்கூடாது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் காணொலிக் காட்சி  மூலம் தொண்டர்களுக்கு முதல்முறையாக நேற்று உரையாற்றினார். அப்போது தப்லீக் ஜாமாத் மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கரோனா வந்தது குறித்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்யப் படுவதற்கு கண்டனம் தெரிவி்த் தார். அதுகுறித்து அவர் பேசிய தாவது:அச்சம், கோபம் காரணமாக ஒரு சிலர் செய்த செயல்களுக்கு ஒரு சமூகத்தையே நாம் குறை சொல்வதும், அவர்களை புறக்கணிப்பதும் கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யும் போது வேறுபாடு பார்க்காமல் வழங்கிட வேண்டும்.
அனைத்து சமூகத்தின் தலைவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் கோபம், அச்சம் காரணமாக எந்த விதமான செயலையும் செய்யாதீ்ர்கள் வெறுத்து ஒதுக்கும் செயலில் ஈடுபடாதீர்கள். கோபத்தையும், அச்சத்தையும் ஒதுக்கிவையுங்கள். இதை உங்கள் உறுப்பினர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதுதான்
கொரானா வைரஸால் நமக்கு உருவான சிக்கல்களை வாய்ப்பாக எடுத்துப் பயன்படுத்தி புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும், உலகை வழிநடத்த வேண்டும்.
சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததன் காரணமாக மகாராஷ்டிராவில் இரு சாதுக்கள் கொல்லப்பட்டனர். இது விவகாரத்தில் வாதங்களை ஒதுக்கி வைத்துவிடுங்கள் இந்த சம்பவம் நடந்திருக்ககூடாது . மக்களை சட்டத்தை அவர்கள் கையில் எடுக்க அனுமதித்திருக்ககூடாது இந்த சம்பவம் நடந்தபோது போலீஸார் அங்கு என்ன செய்தார்கள். பால்கர் சம்பவத்தில் கொல்லப்பட்ட இரு சாதுக்களுக்கு நான் இரங்கல் தெரிவிக்கிறேன்
ஆர் எஸ் எஸ் அமைப்பு தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஜூன் மாதம் வரை ஒத்திவைக்க மார்ச் மாதமே முடிவு செய்தது. ஆனால் சிலரோ அரசு நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு தடை விதித்துவிட்டதாக கூறுகிறார்கள்.
நெருப்பை கொழுத்திப்போட சிலர் அஞ்சமாட்டார்கள். இதனால் கோபமும், அறிவிழப்பும் ஏற்பட்டு, தீவிரவாத செயலுக்கு இட்டுச்செல்லும். அதுபோன்ற செயலிலிருந்துதான் சிலர் நன்மை அடைய காத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். இந்தியாவில் கொரானா வைரஸ் பரவியதும் இதுபோன்ற ஒரு காரணத்தால்தான்
அனைத்து இடங்களிலும் மக்கள் தவறு செய்கிறார்கள். சாதாரண மக்கள் இதை உணர்ந்து, தங்களுடைய நிலைப்பாடு என்பது கூட்டுறவாகத்தான் இருக்க வேண்டும், எதிர்ப்புத் தெரிவிப்பதல்ல என்று உணர வேண்டும். அதுபோன்ற செயலில் இருந்து நாம் விலகியிருக்க வேண்டும். 130 கோடி மக்களை மனதில் வைத்தும், அனைவரும் சகோதர, சகோதரிகள் என்ற நினைப்பில் செயல்பட வேண்டும்
கொரானா வைரஸால் நமக்கு நேர்ந்த சிக்கல்களை வாய்ப்பாகப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தி தன்னிறைவு அடைய வேண்டும். அனைத்து தேவைகளுக்கும் வெளிநாடுகளை நம்பியிருக்காமல் சுதேசிப் பொருட்களைத் தயாரிக்க வேண்டும், அதையே பயன்படுத்த வேண்டும். உள்நாட்டுத் தொழில்களுக்கு ஊக்களிக்க வேண்டும். பாரம்பரிய விவசாய முறை, பசு வளர்ப்பு போன்றவை எந்திரமயமாக்கப்பட்ட, ரசாயனமாக்கப்பட்ட வாழ்க்கையை மாற்ற உதவும்
இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...