மதுரை மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் பணிபுரிந்த தீயணைப்பு பணி வீரர் உள்பட மூவருக்கு கொரானா தொற்று காரணமாக மதுரையில் தீயணைப்பு நிலையம் மூடப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் ஒருநாளில் மட்டும் 15 பேருக்கு கொரானா தொன்று ஏற்பட்ட நிலையில் இதில் மீனாட்சி அம்மன் கோவிலில் பணிபுரிந்த பட்டரின் தாயார் முதுமை காரணமாக ஊரடங்கு காலத்தில் உயிரிழந்த நிலையில் , அதே கோவிலில் பணிபுரிந்த எலக்ட்ரீசியன் , கணினி ஆப்ரேட்டர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆகிய மூவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை மேலச் சித்திரை வீதியில் உள்ள தீயணைப்பு நிலையம் மூடப்பட்டது, தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் இன்று கொரானா பரிசோதனை செய்து வருகின்றனர்.
மதுரை தெற்குவாசல் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக மதுரை மாநகரில் ஏற்கனவே தெற்குவாசல் காவல்நிலையம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது
மதுரை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் காவல்துறையினர் இருவர் தீயணைப்பு வீரர் ஒருவரென மூவர் ஒப்பந்த சுகாதார பணியாளர்கள் , ஒரு அரசு மருத்துவமனை செவிலியர் என தடுப்பு பணிகளில் ஈடுபட்டோருக்கும் கொரானா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மதுரையில் சமூக தொற்றுக்கான நிலைக்கு சென்றுவிட்டதோ என பொதுமக்கள் கருதும் நிலை இருந்துவருகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்