வளைகுடா அரபு நாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர் களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படை மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.கொரானா வைரஸ் தாக்கம். உலகில் பல நாடுகளை அச்சுறுத்தி வருவதால் வளைகுடா நாடுகளி லும் பாதிப்பு அதிகரிப்பதால் கொரானா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டதால் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளிலும் , வீடுகளிலும் முடங்கியுள்ளனர். வளைகுடா பகுதிகளில் நோயின் தீவிரம் அதிகமாவதால் அங்கு இந்தியர் கள் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் உள்ளிட்ட தென்மேற்காசியாவில் பாரசீக வளைகுடா எல்லையிலுள்ள நாடுகளில் இந்திய தொழிலாளர் கள் வேலை செய்கிறார்கள். அவர்களை மீட்பதற்காக கடற்படை மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் தயாராகி வருவதாக கூறப்படு கிறது. நோயின் தாக்கம் அதிகரிப்பால் முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, குவைத் பிரதமர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-சபாவுடன் தொலைபேசியில் பேசியதில். இருநாட்டு தலைவர் களும் கொரானா பாதிப்பு குறித்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலவரங்கள் குறித்தும் விவாதித்தனர்.
அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் கூறுகையில், "வளைகுடா நாடுகளிலிருந்து இந்திய மக்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அங்கு இருக்கும் நிலைமையைக் கண்காணித்து அதற்கேற்ப தயாராகி வருகிறோம். நாங்கள் ஏர் இந்தியா மற்றும் இந்திய கடற்படையிடம் விரிவான திட்டத்தை உருவாக்க கேட்டுக் கொண்டுள்ளோம் எனக் கூறியுள்ளனர். இது தொடர்பாக துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி கூறுகையில், இங்கிருந்து இந்தியர்களை அழைத்து செல்வது தொடர்பாக டில்லியில் இருந்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதற்காக காத்திருக்கிறோம். இந்திய அரசு அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும். ஏர் இந்தியா விமானம் இந்த சேவையில் ஈடுபடும். இவ்வாறு தெரிவித்திருக்கும் நிலை பத்து மில்லியன் இந்தியர்களில் பலர் துறைமுக நகரங்களில் இருப்பதால் கடற்படை மூலம் அவர்களை மீட்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்திய கடற்படை வளைகுடா நாடுகளில் இருந்து 1,500 இந்தியர்களை மூன்று கடற்படை போர்க்கப்பல்களில் இருந்து வெளியேற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. தேவையான நடவடிக்கைகளைத் தொடங்க வெளிவிவகார அமைச்சகம் (எம்.இ.ஏ) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை களைத் தொடங்கியுள்ளது. இதுபோலவே துறைமுகங்கள் இல்லாத மற்ற பகுதிகளில் ஏர் இந்தியா விமானங்களை அனுப்பி மீட்டு வருவது குறித்து ஆலோச னைகள் நடந்து வருகின்றன. அவ்வாறு மீட்கப்படும் போது முதலில் வசதி குறைந்த தொழிலாளர்களை முன்னுரிமை அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்