கம்பம் சட்டமன்ற தொகுதியில், கொரானா வைரஸ் நோய் தடுப்புப் பணிகள் குறித்தும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மற்றும் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று சின்னமனூர் நகராட்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,தலைமையி லும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ்,IAS, அதிமுக மாவட்ட செயலாளர் சையதுகான் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி,IPS, திட்ட இயக்குனர் திலகவதி, வருவாய் கோட்டாட்சியர் முத்தையன், சின்னமனூர் நகராட்சி ஆணையர் சியாமலா, மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்