ஜல்சக்தி அமைச்சகத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இணைப்பு குறித்து அரசின் பொதுப்ணித்துறை முதன்மைச் செயலாளர் விளக்கம்.
காவேரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தில்சேர்ப்பு குறித்து தமிழகப் பொதுப்பணித் துறையின் விளக்கம்
தமிழ்நாடு அரசின்தொடர் சட்டபோராட்டத்தால் காவேரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் 2018 ம் ஆண்டு ஜூன் முதல் தேதி மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியானது ஆணையத்தின் அதிகாரங்கள், பணிகளனைத்தும் காவேரி நடுவர் மன்றம் 2007 ஆண்டு பிப்ரவரி ஐந்தாம் தேதி பிறப்பித்த இறுதியுத்தரவின் படி செயல்படும் என தெளிவுபடுத்திய நிலையில் காவேரி நீர் மேலாண்மை ஆணையம் பிரிவு 15 ன்படி எடுக்கும் முடிவுகள் இறுதியானது. காவிரி படுகை மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது.
மத்திய அரசு 2019 ம் ஆண்டு மே மாதம் நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்புறவு அமைச்சகம் ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கியது. இதனை அடுத்து மத்திய அரசு ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்துள்ள பொருண்மைகள் குறித்துள்ள விதிகளுக்குத் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதில் ஜல் சக்தி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் அமைச்சகத்தால் கோதாவரி, கிருஷ்ணா நதி நீர் வாரியமும், உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள காவேரி நீர் மேலாண்மை ஆணையமும் சேர்கிறது. ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகள், நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகள் ஆகியவைகளை கையாளக்கூடிய விவகாரங்கள் மற்றும் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு நிர்வாக நடவடிக்கை தான் பணியாளர்களுக்குச் சம்பளம் மற்றும் இதர நிர்வாகங்களை மேற்கொள்வதற்கான ஒரு வழக்கமான நடைமுறையாகும்.
இதனால், காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களில்வேறு மாற்றமில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மத்திய அரசின் துறை சார்ந்த அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். காவேரி நதிநீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலன்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தப்படுகிறது.
கருத்துகள்