விற்பனைப் பழங்களை வீதியில் கொட்டிய நகராட்சி ஆணையர். வாணியம்பாடி பழ விற்பனை செய்த மூன்று கடைகளில் நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் பழங்களைக் கீழே தள்ளிக் கடைகளை மூடிய காட்சி வீடியோ பதிவாகி வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
வாணியம்பாடியில் பொது ஊரடங்கு காலத்தில் திறக்கப்பட்ட பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வந்தார்.
ஆணையரின் வீடியோவை தமது டிவிட்டர் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது பதிவில், ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதன்பின், இன்று காலை 10 மணி அளவில் நேரில் சென்ற நகராட்சி ஆணையர், பழக்கடை உரிமையாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் விற்பனை செய்யும் போது சமூக இடைவெளி விட்டு மீண்டும் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்தித்தபோது காய்கறி, பழ வியாபாரிகளை நாங்கள் பலமுறை எச்சரித்தும், அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் அதே இடங்களில் காய்கறி, பழங்களை விற்பனை செய்து வருவதாக புகார் வரவே ஆய்வுக்கு சென்ற போதும் இதுகுறித்து அவர்களிடம் சொல்லி வந்தேன். ஆனாலும் வியாபாரிகள் கேட்கவில்லை. கோயம்பேடு சந்தையில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது போல் உருவாகிவிடக் கூடாது என்ற அச்சத்தால் நடவடிக்கை எடுத்தேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தோம். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் நலனுக்காகத்தான் நாங்கள் கஷ்டப்பட்டு வருகிறோம். தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக கடந்த ஒன்றரை மாதமாக இரவு பகலாக கண்விழித்து பாடுபட்டு வருகிறோம் என விளக்கம் அளித்தார். உடன் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் வாணியம்பாடி காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.வாணியம்பாடி நகராட்சி ஆணையர் நடமாடும் பழக்கடையில் உள்ள பழங்களை எடுத்து சாலையில் வீசிய காட்சி பலரும் பார்க்க நேர்ந்தது இந்த மனிதத்தன்மை யற்ற செயலை வன்மையாகப் பலரும் கண்டித்த போதும் . ஏழை வியாபாரிகளுக்கு யாரும் நியாயம் வழங்க இயலாது. எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும் செயல். முதலில் எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை அள்ளி வீச இவருக்கு அதிகாரம் ஏது.
இவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் கோரிக்கை. வைத்த நிலையில் பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது வழக்கு பதிவு செய்தது
மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு அவர் பழங்களைச் சேதப்படுத்தும் காட்சிகள் வெளியானதன் அடிப்படையில் வழக்குப்பதிவு.
நகராட்சி நிர்வாக ஆணையர், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் இரண்டு வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவு.
மாநில மனித உரிமை ஆணையத்தின் பொறுப்பு ஆணையர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ள நிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்