வந்தேபாரத் மிஷன், சமுத்திர சேது திட்டம் மூலம் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்டு சென்னை வந்த விமானம்
வந்தேபாரத் மிஷன் மற்றும் சமுத்திர சேது திட்டம் மூலம் வெளிநாடுகலில் சிக்கிய இந்தியர்களை மீட்டு வரும் விமானம் மற்றும் கப்பல்கள் . துபாயிலிருந்து 179 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் அதிகாலை சென்னை விமானநிலையம் வந்தது.
கொரனோ வைரஸ் பரவுல் கட்டுப்படுத்தும் ஊரடங்கு காரணமாக இந்தியா வரமுடியாமல் துபாயில் தவித்த இந்தியர்களில் முதல்கட்டமாக 3 குழந்தைகள் உள்பட 179 பயணிகளை அழைத்துக்கொண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை 1.10 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்து சேர்ந்தது
ஊரடங்கால் இந்தியாவுக்கு வரமுடியாமல் பல்வேறு நாடுகளில் சிக்கிய இந்தியர்களை தாயகம் அழைத்துவர வந்தேபாரத் மிஷன் தி்ட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. கடல்மார்க்கமாக கப்பற்படைக் கப்பல்கள் சமுத்திர சேது திட்டப்படி வெளிநாடுகளில் சி்க்கியவர்களை மீட்டு வருகிறது
ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதிவரை பல்வேறு கட்டங்களாக வெளிநாடுகளிலிருந்து இந்தியர்கள் வந்தேபாரத் மிஷன் திட்டம் மூலம் தாயகம் அழைத்துவரப்படுகின்றனர். கேரளாவில் இதுவரை 4 விமானங்கள் மூலம் மக்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். வங்கதேசத்திலிருந்து இந்திய மாணவர்களை அழைத்துக்கொண்டு ஸ்ரீநகருக்கு நேற்று விமானம் சென்றது
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில் கடந்த ஒருவாரமாக தனி இணையதளம் உருவாக்கப்பட்டு, தாயகம் திரும்ப விருப்பமுள்ள இந்தியர்கள் அதில் பதிவு செய்யக் கோரப்பட்டது. அதில் ஏறக்குறைய 3 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.
இந்த 3 லட்சம் பேரில் கர்ப்பிணிகள், பச்சிளங்குழந்தைகள், முதியோர், மருத்துவ உதவி தேவைப்படுவோர், வேலையிழந்தோர் என வகைப்படுத்தப்பட்டு முன்னுரிமை படி அழைத்து வரப்படுகின்றனர்.
அந்த வகையில் 3 பச்சிளங்குழந்தைகள் உள்பட 179 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 612 இன்று அதிகாலை 1.10 துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது.
சென்னைக்கு பத்து விமானங்கள் வரவுள்ளன. நாள் தோறும் இரு விமானங்கள் வீதம் வருகின்றன. அந்த வகையில் இன்று மற்றொரு விமானம் துபாயிலிருந்து புறப்பட்டு சென்னை வந்து சேரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவி்க்கப்பட்டது
விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட பயணிகள் அனைவருக்கும் விமானநிலையத்தில் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டபடி சுகாதாரப்பணிகளில் 60 பேர் கொண்டகுழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர். அதன்பின் அவரவர் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.
கருத்துகள்