"சீராரும் காஞ்சி நகர் சித்ரகுப்தரது
தாராரும் பாதமலர் சார்ந்தோர்கள் பேரார்
புகழுமுயர் பொன்பொருளும் பூதலத்தில் எய்தித்
தகவுடனே வாழ்வோர் தழைத்து",
எனத்
திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் வழிபாடு செய்த சித்திரகுப்தர்
மனிதர்களின் பாப புண்யங்களுக்கு தக்கபடி தண்டனைகள் வழங்கி வந்த யமதர்மராஜன். அதர்மங்கள் அதிகரித்ததால். சிவபெருமானை அணுகி உதவ ஒருவர் தேவையானதெனக் கூற ஏற்ற சிவபெருமான் அதேநேரத்தில் பார்வதி தேவியார் தங்கப் பேழையில் வரைந்த உருவத்தில் கையில் ஒரு பணைஏட்டையும், எழுத்தாணியையும் வைத்திருக்க இதைப்பார்த்த சிவன் லோக மாதாவிடம் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுக்கும்படி கேட்க பார்வதியும் தான் தங்க தாம்பாளத்தில் எழுதி வைத்திருந்த சித்திரத்தை காற்றில் அசைக்க உருவம் உயிர்பெற்றது. சிவன் அந்த உருவத்திற்கு ரகசியத்தை காக்கும் சக்தியை கொடுத்து எமதர்மராஜனுக்கு உதவியாக இருக்க பணித்தார். அவரும் மனிதர்களின் பாப புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி ரகசியத்தையும் காத்து வந்தார்.
சித்திரத்திலிருந்து வந்ததாலும் ரகசியத்தை காப்பவராக இருந்ததாலும் அவர் சித்திரகுப்தனாகும்.
இவ்வாறு உருவான சித்திரகுப்தன் பாப புண்ணிய கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது பூலோகத்தில் பலர் அறியாமல் செய்த பாபங்களின் கணக்கு மிக அதிகமாக இருந்தது.
அறியாமல் செய்த பாபங்களுக்கு விமோசனம் சிவபெருமான் மக்களுக்கு வழங்கி சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வேண்டுபவர்களுக்கு அறியாமல் செய்த பாவங்களிலிருந்து விலக்கு அளிக்கும் சக்தியை அளித்ததாக ஐதீகம். சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வணங்கினால் அறியாமல் செய்த பாவம் மாறும். அதுபோலவே அன்று செய்யும் தானம் சிறியதானாலும் அது பெரிதாக மாறுவதும் நிகழும்
சித்ரா பவுர்ணமியன்று தானங்கள் பல செய்யவேண்டும். முக்கியமாக நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் முதலிய எழுத பயன்படும் பொருட்களை தானமாக வழங்கலாம்.
சித்திரகுப்தனுக்கென்று தனி கோவில் காஞ்சிபுரத்தில் இருக்கிறது. முடிந்தவர் நேரில் அந்த கோவிலுக்கு சென்றும் முடியாதவர் மனதளவிலும் இன்று வரும் சித்ரா பவுர்ணமியில் சித்திரகுப்தனை வணங்கி நாம் அறியாமல் செய்த பாபங்களிலிருந்து விமோசனம் பெறுவோம்.
" சித்திரனார் புத்திரனார் சிவனார் திருக்கணக்கர் அத்திசூழும் அந் நாட்டிற்கு அவரே பெருங் கணக்கு,' எனும் நிகழ்வுகள் மூலம் பலர் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது மதுரை பகுதியில் மரபு வழி நடந்து வருகிறது. வசந்தக்காலத்தின் துவக்கம் சித்திரை மாதம். அதில் சித்திரா பௌர்ணமி மிக விசேஷமானது.
வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வருகை தந்த தெய்வம் இந்த சித்திரகுப்தன் எனபது தவறாகும். சமண மதத்தின் தெய்வ வழிபாடு புத்த பூர்ணிமாவுக்கும் இதற்கும் சிலர் தொடர்பு படுத்தி சொல்லப்படுகிறது. சமண மதம் மட்டும்தான் இறப்பை முன்னிறுத்தி அறம் கூறுவதால், மேலோர் மரபில் கணக்கு வழக்கிற்கான தெய்வமாகச் சித்திரகுப்தன் தோன்றியதாகவும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
இது சரியா என்பது தெரியாது.
தென் இந்தியாவில்
கோடிக்கணக்கான மக்களின் பாவ புண்ணியத்தை நிர்வகிக்க , தனக்கு துணையாக ஒருவர் வேண்டுமென எமதர்மன் வேண்டி சிவப்பெருமானிடம் முறையிட்ட சிவன் பிரம்மாவிடம் கட்டளையிட, சிவன் கட்டளையை சூரியன் மூலமாக நிறைவேற்ற சூரியனுக்குள் அக்னியை உருவாக்கினார். சூரியன் வானில் தோன்றும்போது ஒரு வானவில் உண்டானது. அந்த வானவில் நீளாவதி என்ற அழகிய பெண்ணாய் உருமாற அவளை மணந்த பின் சித்திரகுப்தன் பிறந்ததாகவும் சித்திரை மாதத்தில் பிறந்ததால் சித்திரகுப்தன் என்று பெயர் உண்டாயிற்று. ஏடும், எழுத்தாணியும் கொண்டு பிறந்ததாய் சொல்கின்றனர். சித்திரை என்றால் மனம், அப்தம் என்றால் மறைவு என்று பெயர். மனிதர்களின் மனதில் மறைவாய் உள்ள விசயங்களை எழுதுவதால் இவருக்கு இப்பெயர் உண்டானதாய் சொல்கின்றனர். இவருக்கு துணையாக புறா, ஆந்தை, நான்கு கொண்ட நாய்களை எமதர்ம ராஜா நியமித்தார். பிரபாவதி, நீலாவதி, கர்ணீகைன்னு மூன்று தேவியரோடு, மனிதர்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப அவர்களின் விதியை வெகு துல்லியமாய் கணக்கிட்டு வருகின்றார் என புராணங்கள் சொல்கிறது
அனைத்து ஜீவராசிகளின் பாவ, புண்ணியத்தை கணிக்க ஒருவரை நியமிக்க ஈசன் யோசித்துக்கொண்டிருந்த வேளையில், பார்வதிதேவி ஒரு பலகையில் அழகான ஒரு ஏடும் எழுத்தாணியும் கொண்ட குழந்தையின் படத்தை வரைந்துக்கொண்டிருந்தாள். அப்படத்தை கண்ட ஈசன் அப்படத்திற்கு உயிர் கொடுத்து மனிதர்களின் பாவ புண்ணியத்துக்கேற்ப என்ன தீர்ப்பை வழங்கலாமென எமதர்ம ராஜாவுக்கு கணக்காளர் பதவியில் அமர்த்தினார். சித்திரத்துக்கு உயிர் கொடுத்ததால் சித்திரகுப்தன் எனப்பெயர் பெற்றதாய் பரவலாய் சொல்லப்படும் கதைகளில் ஒன்று.
காமதேனு மகனாய்....
அகலிகையின் சாபத்தால் இந்திரனுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போனது. இக்குறை தீர சிவப்பெருமானை நோக்கி இந்திராணியும்,இந்திரனும் கடுந்தவம் இருந்தனர். அவர்களின் தவத்துக்கு இரங்கினாலும், பத்தினி சாபத்தை தன்னால் போக்க முடியாததால் சித்திரகுப்தனை காமதேனுவின் வயிற்றில் கருவாய் வளரச்செய்தார். குழந்தை பிறந்ததும் இந்திரனும், இந்திராணியும் சித்திரகுப்தனை வாங்கி சென்றதாகவும் சொல்லப்படுது. இதனாலாயே இவரின் அபிஷேகத்துக்கும், நைவேத்தியத்துக்கும் பசும்பால், தயிர், நெய் ஆகியவை பயன்படுத்துறதில்லை.
சித்திரகுப்தனை தரிசிக்கும்போதே நமது வினைகள் நம் மனதில் நிழலாடும். இதுவரை மனதறிந்து நாம் செய்த பாவ வினைகள் நினைவிற்கு வரும். இனி இப்படிப்பட்ட பாவங்கள் செய்யக்கூடாதென நம்மை உணர வைக்கும். இதேப்போல தெரிந்தும், தெரியாமல் செய்த புண்ணியத்தையும் இம்மி பிசகாமல் எழுதி வைக்கும் இவரின் செயலை எண்ணி வியக்க வைக்கும். இவர்தான் கேது பகவானுக்கு அதிபதியாகும்.
சித்ரகுப்தனை வழிபட்டில்
பூஜையறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானையும் அவருக்கு அருகில் தேங்காய்க்கு பதிலாய் மாங்காய் வைத்த கும்பம் வைத்து அருகில் வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து சர்க்கரைப்பொங்கல், வெண் பொங்கல், பச்சரிசிக் கொழுக்கட்டை, இனிப்புப் பலகாரங்கள், பலாச்சுளை, திராட்சை, மாம்பழம், பனங்காய் வைத்துப் படைக்க வேண்டும். தட்டைப் பயிறும், மாங்காயும் சேர்த்து குழம்பு வைப்பது நல்லது. ஜவ்வரிசி பாயாசம், அப்பளம் வைத்து, இளநீர், பானகம், மற்றும் நீர்மோர் வைத்து படைக்க வேண்டும். நம் வாழ்வு இனிமையாய் இருக்க இனிப்புகளும். கனிவாக வாழ்வமைய கனிகளும் படைக்க வேண்டும்.. நவதான்யம் மற்றும் அனைத்துச் செல்வத்திற்கும் அதிபதியான குபேரனுக்கு இணையானவர் என்பதாலும் தட்டைப் பயறு வைக்கின்றோம். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறனும்ன்னு மாவிலை, கிரகங்கள் சாதகமாக விளங்க கரகம் வைத்து வழிபாடு செய்கின்றோம். மா தேவியால் பயிர் விளைவதால் தினமும் உணவு கிடைக்கவே வெண்கல சொம்பில் நீரும், செம்பின்மீது மாவிலைக் கொத்தும், மாங்காயும் வைப்பது வழக்கம். மற்ற கும்பங்களில் தேங்காய் வைப்பது வழக்கம். ஆனால் சித்ரகுப்தன் வழிபாட்டில் மாங்காய் வைப்பது தான் நல்லது.
இவரை, பக்கம் பக்கமாய் மந்திரங்கள் கொண்டு ஜெபிக்கவேண்டாம் ஒரே ஒரு பாடல் ஏட்டில் எழுதி வைத்து வழிபாடு செய்ய 'சித்திரனார் புத்திரனார் சிவனார் திருக்கணக்கர் அத்திசூழும் அந்நாட்டிற்கு அவரே பெருங்கணக்கர், ... . கடம்பூர், கோடங்கிப்பட்டி உட்பட 14 இடங்களில் சித்திரகுப்தனுக்குக் கோவில்கள் உண்டு காஞ்சீபுரத்தில் இருக்கும் சித்திரகுப்தன் ஆலயம் மிக பிரசித்தியகும்.
கருத்துகள்