முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை மன்னர்கள் விருப்பத்தில் நடந்த திருவிழாக்களில் மாற்றங்கள் பல

மதுரை மன்னர்கள் விருப்பத்தில் நடந்த திருவிழாக்களில் மாற்றங்கள் ..18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்த சித்தர் பீடம் விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு, தேவாரப்பாடல் பெற்ற 274 வது சிவாலயம், 192வது தேவாரஸ்தலம். தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் பாண்டியநாட்டில் ஒன்றான
தேவலோக அரசன் இந்திரனால் கட்டப்பட்ட மதுரைக் கோவிலாகும் என நம்பிக்கை. இராமபிரான் , இலட்சுமணர், வருணன், இந்திரன், தேவர்களும் முனிவர்களும் வழிபட்ட சிவாலயம் இங்கு பிரசாதம் தாழம்பூவில் தரும் குங்குமமாகும்.மூன்றாம் தமிழ்ச் சங்கம் தோன்றிய காலத்தில் மதுரை நகரம் முறையாக நிர்மாணிக்கப்பட்டது என தமிழ்ச் சங்க வரலாற்று தகவல் மதுரை யில் மீனாட்சி பிறப்பானதாகக் கருதுவதால், மீனாட்சியம்மனை வணங்கிய பின்பே சிவபெருமா னை வணங்கும் முறை கடை பிடிக்கும் நிலை . மீனாட்சி, சுந்தரேஸ்வரரை முதன்மை விக்கிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள் ஸ்தலம்.பாண்டிய மன்னன் குலசேகரபாண்டியன் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனக்காட்டையழித்து மதுரை மாநகரையும் ஆலயத்தி னையும்அமைத்து வரலாறு.
மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி நான்கு மாடங்களமைத் துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயருமுண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்புவட்டமாக தன் வாலை வாயினால்கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்றும் பெயர்  ஏற்பட்டதாக வரலாறு.
மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் எட்டுக் கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் கொண்ட கருவறை விமானங்கள், இந்திர விமானமென அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகிறது.
மீனாட்சி அம்மன் திருக்கோவில்  கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடைய.கோவிலின் ஆடி வீதி களில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையிலிருக்கிறது. கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல்1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின் 1878 ஆம் ஆண்டில் முடிந்தது.  தெற்குக் கோபுரம் மிக உயரமானது 160 அடியாக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் புதுப்பித்துக்  கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை சமஸ்தானத்தின் மன்னர் துரைசிங்க சண்முகராஜாவால் திருப்பணி செய்யப் பெற்றது.
சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளமும் உள்ளன. நாயக்கர் மன்னர்கள் காலத்தில் 
கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சியில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பானது.
இது தவிர கோயிலின் கிழக்குக்கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புதுமண்டபமாகும்  கோவிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத்தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைப்பு பாண்டிய  மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் வீதிகளில் நடைபெறும்.மதுரை நாயக்கர் மன்னர்கள் 1545 முதல் 1740 வரை  ஆட்சி செய்தவர்கள் திருமலை நாயக்கர் (1623-1659) மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் பல விழாக்கள் ஏற்படுத்தியவர் அவர் காலத்தில் தான் சைவர்கள் விழாவாக மட்டுமே  பாண்டிய நாட்டில் நடந்த பங்குனி-சித்திரை திருவிளையாடல் புராணத்தின்படி நடந்த மதுரை  மீனாட்சியம்மன் ஆலயத் திருவிழா வைணவம் கலந்த சித்திரைத் திருவிழாவானதும் அதில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் சேர்த்து நடத்தியதில் தான் சைவத்தில் வைணவம் கலந்தது. பெரும்பாலும் நாயக்கர் மன்னர்கள் அனைவரும் இராமம் போடுவதும் பெருமாள் வழிபாடும் உள்ளவர்கள் அப்போது தான் சித்திரைத் திருவிழா மாற்றமானது.மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்  மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் வலைதளங்களிலும் இன்று நேரடியாக ஒளிபரபரப்பு செய்யப்பட்டது
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளம்,மற்றும் மூலநூல்  உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று (மே 4) காலை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள பிரபலமான அனைத்து கோயில்களிலும் பக்தர்கள தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரசித்த பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் இந்த தடை உள்ளது.
இந்த நிலையில், சித்தரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று (மே 4 ) காலை 8:30 மணி முதல் 10:15 மணி வரை நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் தங்களது வீட்டிலிருந்தே பார்க்க வசதியாக, இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnhrce.gov.in, கோயிலின் இணையதளமான www.maduraimeenakshi.org ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.
அத்துடன், திருக்கோயிலின் முகநூல் (ஃபேஸ்புக்) பக்கத்தில், youtube அலைவரிசையிலும் நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. இதை ஏற்கனவே இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்து இருந்தது.
இந்த வைபவத்தின்போது, காலை 9:05 முதல் 9:29 மணிக்குள், தாய்மார்கள் மங்கள நாண் மாற்றிக்கொண்ட. நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...