முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சேரமான் செங்குட்டுவனுக்கு இமயமலைக் கல் தெய்வமான மங்கலதேவி சித்ராபௌர்ணமி விழா

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல, வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், 
குன்றக்குரவை என்னும் காதையுள், கண்ணகி மலைமேல், வேங்கை மர நிழலில் நின்று தெய்வமான இடத்தினையும், அவ்விடத்தில் சேரன் செங்குட்டுவன் அமைத்த பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகிக் கோயிலையும் கண்டுபிடித்த பேராசிரியர் ஆய்வறிஞர் கோவிந்தராஜன்.
’’மண்டிக்கிடந்த புதருக்குள் சிறிய கோட்டைச் சுவர் போன்ற கல் கட்டடத்திற்குள் கண்ணகி சிலை இருந்தது. அந்த கற்களில் தமிழ் வட்டெழுத்தும், முற்கால பாண்டியர் காலத்து தமிழ் எழுத்துகளும் காணப்பட்டன. அங்கு சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பழங்கால மலைவாழ் மக்கள் மட்டும் இல்லையே தவிர, எஞ்சிய வன விலங்குகள், இயற்கை காட்சிகள், வேங்கை மரங்கள் என அத்தனை அடையாளங்களும் ஒருங்கே காணப்பட்டன. என குறிப்பிட்ட அந்தக் கோட்டம் தான் கண்ணகி கோவில்.
மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா ரத்து
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டுள்ளது. பவுர்ணமி நாளில் கோவிலில் பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.மங்கலதேவி கண்ணகி கோட்டம
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் தெற்கு எல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் கூடலூர் அருகிலுள்ள பளியன்குடியிலிருந்து வனப்பகுதிக்கு நடந்து சென்றால் 6 கிலோ மீட்டர் தூரம்  கேரள எல்லை குமுளியிலிருந்து வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பழமையான வண்டிப்பாதை வழியாகச் சென்றால் 16 கிலோமீட்டர் தொலைவிலும் மங்கலதேவி கண்ணகி கோட்டம்
சோழநாட்டின் பெரும்வணிகர் மாசாத்துவான் செட்டியாரின் மகளாகப் பிறந்த கண்ணகியும் அவளது கணவனான மானாயக்கன் செட்டியார் மகன்  கோவலனும் சிறப்புற வாழ்ந்த கதை கூறும்  சிலப்பதிகாரத்தில் சோழநாட்டு புகார் காண்டம் முடிந்து, மதுரையில் திட்டமிட்டு திருட்டுக்  குற்றம் சுமத்தப்பட்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனால் மரண தண்டனையால் கொலை செய்யப்பட்ட  செய்தி அறிந்த கண்ணகி நீதிதவறிய பாண்டிய மன்னர் முன் கணவன் குற்றமற்றவன் என நிரூபித்து அறநெறி கொன்ற பாண்டிய மன்னனையும், துணை நின்ற தீயோரையும், அவர்கள் வாழ்ந்த மதுரை மாநகரையும் தன் கற்பின் சக்தியால்  சாபமிட அவள் சாபத்தால் மதுரை மாநகரமே தீப்பற்றி எரிந்து சாம்பலானது. மதுரையை எரித்த கண்ணகி அங்கிருந்து வைகை ஆற்றின் தென்கரை வழியாக, நடந்து சென்றது வரை மதுரைக்காண்டம் கூறுகிறது அதன் பின் சேரநாட்டு எல்லையான விண்ணோத்திப் பாறை வந்தடைகிறாள். அங்கு பளியர்கள் வசித்த தற்போதய பளியங்குடி மலைவாழ்மக்களாக வசித்து வந்த குன்றக் குறவர்கள் ஆடிய குன்றக் குறவை நடனத்தினைப் பார்த்து அவளது கோபம் குறைந்து அவர்களிடம் தன வாழ்க்கையையும் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணில் பிரகாசமான ஒளி தோன்ற அவ்வொளிக்கிடையே தேவர்களுடன் தோன்றிய கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து பூந்தேரில்  அழைத்துச் சென்றதால் தானே  மங்கலதேவி என்ற பெயர் பெற்றாள் தேவதை கண்ணகியின் 
இந்த நிகழ்ச்சி வஞ்சிக்காண்டம் கூறும் கதை 
இதைக் கண்டு வியப்படைந்த குன்றத்துக் குறவர்கள் முல்லையாரும்  பெரியாறும் சேறும்  ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சேரநாட்டின் மன்னன் செங்குட்டுவனிடம் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் கூற விசாரித்தறிந்த மன்னன் சேரன் செங்குட்டுவன் அந்த இடத்தில் கண்ணகிக்கு இமயமலை சென்ற வெற்றியில் அங்கிருந்து கொண்டு வந்த கல் மூலம் கண்ணகி சிலை வடித்து கோயில் ஒன்றைக் கட்டினான். இந்த கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதி மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது. செங்குட்டுவன் சேரனுக்கு இமயமலைக்ல் தெய்வமாக வந்தது தான் 
மங்கலதேவி கண்ணகி கோயில். அந்த வரலாறு சேரமன்னர் செங்குட்டுவன் உடன் பிறந்த சகோதரர் துறவியாக இருந்த இளங்கோவடிகள் தான் அந்தக் கதையை காதையாக்கிய கவித்துவமே சிலப்பதிகாரக் காவியம் 
இந்த மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோயிலில் இருந்த சிலை காணாமல் போய்விட்டதால் சந்தனத்தில் சிலை போன்ற அமைப்பு செய்யப்பட்டு வெள்ளியிலான முகம் அதில் பொருத்தப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இந்தக் கோயிலில் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலின் அருகில் சிவபெருமான் ஆலயம் ஒன்று இருக்கிறது. இதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலில் வழிபடுபவர்கள்  கண்ணகி கோட்டம் பகுதியில் துர்கையம்மன் கோயில்  உள்ளது. கோயிலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலின் பின்புறம் திறந்த வெளியில் விநாயகர் சிலை ஒன்று இருக்கிறது. இதற்கும் கேரளமாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகின்றனர். இக்கோயிலில் வழிபடுபவர்களுக்கு மஞ்சள்தூள், குங்குமம், சந்தனம் கேரள மாநிலத்துப் பிரசாதமாக அவல் பொங்கல்  வழங்கப்படுகிறது.
இந்த கண்ணகி கோயிலில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு சித்திரை மாதத்தில் ஒரு வாரம் வரை நடத்தப்பட்ட விழா கேரள மாநில வனத்துறையின் கட்டுப்பாடுகளால் மூன்று நாட்களாகக் குறைக்கப்பட்டு தற்போது சித்திரை மாதம் முழுநிலவு (பவுர்ணமி) தினத்தன்று மட்டும் ஒரு நாள் விழாவாக காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை வழிபாடுக்கு அனுமதிக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர் கண்ணகி கோயில் வழிபாட்டுக் குழுவினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றனர். இந்தக் கோட்டம் அல்லது கோயில் இருப்பிடம் குறித்து தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளுக்கிடையே எல்லைப் பிரச்சனை இருந்து வருவதால் இந்த ஒரு நாள் மட்டும்  கோவிலுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும், கேரள மாநில அரசின் சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் முன்பே பேசி சில கட்டுப்பாடுகளுடன்  வழிபாட்டிற்கு அனுமதிக்கின்றனர். கண்ணகி கோயிலுக்கு 1976 ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு கேரள அரசு ஒரு சாலையை அமைத்துள்ளது. இந்த சாலையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோவிலுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இந்த சாலையை வைத்து, கேரள அரசு கண்ணகி கோவில் தங்கள் மாநில எல்லைக்குள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஆனால், 1817 ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகப் பழமையானது.  சர்வேயில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896ல் நடத்திய சர்வேயும், 1913, 1915ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்தியுள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976 ல், தமிழக, கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தொலைவு தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. இருப்பினும் கேரள மாநில அரசு பின்னால் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறது என்ற நிலை.
சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு அமைக்கப்பட்ட 2000 வருடப் பழமையான கோயில் 
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் எல்லையில் சுருளி அருவிக்கு மேலே
வருடத்திற்கு ஒரு முறை சித்திரை மாதத்தில் பௌர்ணமி அன்று மட்டுமே செல்ல முடியும் கடந்த 2000 வருடமாக பளியங்குடி மக்கள் காப்புக்கட்டி கண்ணகியின் வழிபாடு செய்யும் நிலை. .........🙏.   "என்றீங்கு,
அலர்பாடு பெற்றமை யானுரைப்பக் கேட்டுப்
புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன
மலர்தலை வெற்பன் வரைவானும் போலும்
முலையினால் மாமதுரை கோளிழைத்தாள் காதல்
தலைவனை வானோர் தமராரும் கூடிப்
பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த
நிலையொன்று பாடுதும் யாம்
பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால்
மாமலை வெற்பன் மணவணி வேண்டுதுமே
பாடுற்றுப்
பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாளோர்
பைத்தர வல்குல்நம் பைம்புனத் துள்ளாளே
பைத்தர வல்குல் கணவனை வானோர்கள்
உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே
வானக வாழ்க்கை யமரர் தொழுதேத்தக்
கான நறுவேங்கைக் கீழாளோர் காரிகையே
கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ வில்லாளே
மறுதர வில்லாளை ஏத்திநாம் பாடப்
பெறுகதில் லம்மஇவ் வூருமோர் பெற்றி
பெற்றி யுடையதே பெற்றி யுடையதே
பொற்றொடி மாதர் கணவன் மணங்காணப்
பெற்றி யுடையதிவ் வூர்
என்றியாம்
கொண்டு நிலைபாடி ஆடும் குரவையைக்
கண்டுநம் காதலர் கைவந்தா ரானாது
உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர்
வில்லெழுதிய இமயத்தொடு
கொல்லி யாண்ட குடவர் கோவே.'' ....சிலம்பு காவியம் இயம்பும் நடை இது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...