முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவிட்-19 குறித்த அமைச்சர்கள் 17 வது கூட்டம் சுகாதார அமைச்சர் தலைமையில் நடந்தது

கோவிட்-19 குறித்த அமைச்சர்கள் குழுவின் 17ஆவது கூட்டத்திற்கு டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலைமை தாங்கினார் கோவிட் குறித்த அமைச்சர்கள் அளவிலான உயர்நிலைக்குழுவின் இன்று நடைபெற்ற 17ஆவது கூட்டத்திற்கு மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் புதுதில்லியில் நிர்மாண் பவனில் இருந்து காணொளி மாநாடு மூலம் தலைமை தாங்கினார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். எஸ் ஜெய்சங்கர், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் எஸ் பூரி, மத்திய சுகாதாரக் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு. அஸ்வினி குமார் சவ்பே ஆகியோர் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.   நாட்டில் கோவிட் நோயின் தற்போதைய நிலவரம் குறித்தும், குணம் அடைவோர் எண்ணிக்கை, உயிரிழப்போர் எண்ணிக்கை, நோய் பாதிப்பு இரட்டிப்பாக்கும் விகிதம், மேலும் அதிகரிக்கப்பட்டுள்ள பரிசோதனை ஏற்பாடுகள், வலுப்படுத்தப்பட்டுள்ள உடல் நல கட்டமைப்புகள், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள நிலைமைகள் ஆகியவை குறித்து அமைச்சர் குழுவிற்கு எடுத்துரைக்கப்பட்டது. நோய் தீவிரமாக உள்ள மாநிலங்களில் 85.5 சதவிகிதம் எட்டு மாநிலங்களில் (மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, தெலுங்கானா குஜராத் உத்திரப்பிரதேசம் ஆந்திரப்பிரதேசம் மேற்குவங்கம்) இருந்தாகும். இந்தியாவில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 87 சதவீதம் இம்மாநிலங்களில் நேரிட்டன. இதுநாள் வரை பொது சுகாதார நிபுணர்கள், பெருந்தொற்று நோய் அறிவியலாளர்கள், மருத்துவர்கள், துணைச்செயலர் அளவிலான நிபுணர்கள் கொண்ட 15 மத்திய குழுக்கள் பல்வேறு மாநிலங்களுக்கும், தொழில்நுட்ப உதவி அளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளன. கோவிட்-19 தொடர்பான பணிகளை வலுப்படுத்துவதற்காக மற்றொரு மத்தியக் குழு குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்றுள்ளது. ITIHAS மற்றும் ஆரோக்கிய சேது ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும் அமைச்சர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. நோய் தீவிரமாக உள்ள பகுதிகளை முன்கூட்டியே கண்டறிவது; நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவது ஆகியவற்றுக்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகள் இவற்றைப் பயன்படுத்துகின்றன. நோய்க் கட்டுப்பாட்டு உத்திகளுக்கு ஆயத்தம் அடைவதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.   இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ சி எம் ஆர்) மேற்கொள்ளும் பரிசோதனை உத்திகள் குறித்து விரிவான விளக்கம் ஒன்றை இக்கழகத்தின் தலைமை இயக்குநர் டாக்டர்.பார்கவா வழங்கினார். சீராலஜிகல் ஆய்வு குறித்தும், பல்வேறு பரிசோதனைகள் மூலமாக நாளொன்றுக்கு பரிசோதனை செய்யப்படும் அளவை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் அவர் விளக்கினார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சத்து 20 ஆயிரத்து 479 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன . இது நாள் வரை மொத்தம் 79,96 ,707 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன கோவிட்-19 நோய் தொடர்பாக மட்டும் மேற்கொள்ளப்பட உள்ள ஆய்வுகளுக்காக 1026 தனிப்பட்ட ஆய்வுக்கூடங்கள், தற்போது இந்தியாவில் உள்ளன. இதில் 741 ஆய்வுக்கூடங்கள் அரசுத் துறைக்குச் சொந்தமானவை. 285 ஆய்வுக் கூடங்கள், தனியார் ஆய்வுக்கூடங்கள் என்று அவர் கூறினார்.   நாட்டில் அதிகரித்து வரும் மருத்துவக் கட்டமைப்பு வசதி குறித்தும் அமைச்சர் குழுவிற்கு எடுத்துக் கூறப்பட்டது.   176275 தனிப்படுக்கைகள், 22940 தீவிர சிகிச்சைப் பிரிவுப்படுக்கைகள், 77268 பிராணவாயு உதவி வழங்க கூடிய படுக்கைகள் கொண்ட வசதிகளுடன் கூடிய கோவிட்-19 நோய் சிகிச்சைக்கான 1039  தனிப்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. 139483 தனிப் படுக்கைகள், 11539 தீவிர சிகிச்சைப் படுக்கைகள், 51321 பிராணவாயு உதவி அளிக்கக்கூடிய படுக்கைகள் கொண்ட கோவிட் சுகாதார மையங்களும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. கோவிட் நோயாளிகளுக்கு கவனம் செலுத்தும் 8958 கோவிட் கேர் மையங்கள் உள்ளன இவற்றில் 810621 படுக்கைகள் உள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைப்புகளுக்கு 185.11 லட்சம் N95 முகக்கவசங்களையும், 116 .74 தனிநபர் பாதுகாப்புக் கவசங்களையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு