முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவிட்-19 குறித்த அமைச்சர்கள் 17 வது கூட்டம் சுகாதார அமைச்சர் தலைமையில் நடந்தது

கோவிட்-19 குறித்த அமைச்சர்கள் குழுவின் 17ஆவது கூட்டத்திற்கு டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலைமை தாங்கினார் கோவிட் குறித்த அமைச்சர்கள் அளவிலான உயர்நிலைக்குழுவின் இன்று நடைபெற்ற 17ஆவது கூட்டத்திற்கு மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் புதுதில்லியில் நிர்மாண் பவனில் இருந்து காணொளி மாநாடு மூலம் தலைமை தாங்கினார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். எஸ் ஜெய்சங்கர், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் எஸ் பூரி, மத்திய சுகாதாரக் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு. அஸ்வினி குமார் சவ்பே ஆகியோர் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.   நாட்டில் கோவிட் நோயின் தற்போதைய நிலவரம் குறித்தும், குணம் அடைவோர் எண்ணிக்கை, உயிரிழப்போர் எண்ணிக்கை, நோய் பாதிப்பு இரட்டிப்பாக்கும் விகிதம், மேலும் அதிகரிக்கப்பட்டுள்ள பரிசோதனை ஏற்பாடுகள், வலுப்படுத்தப்பட்டுள்ள உடல் நல கட்டமைப்புகள், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள நிலைமைகள் ஆகியவை குறித்து அமைச்சர் குழுவிற்கு எடுத்துரைக்கப்பட்டது. நோய் தீவிரமாக உள்ள மாநிலங்களில் 85.5 சதவிகிதம் எட்டு மாநிலங்களில் (மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, தெலுங்கானா குஜராத் உத்திரப்பிரதேசம் ஆந்திரப்பிரதேசம் மேற்குவங்கம்) இருந்தாகும். இந்தியாவில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 87 சதவீதம் இம்மாநிலங்களில் நேரிட்டன. இதுநாள் வரை பொது சுகாதார நிபுணர்கள், பெருந்தொற்று நோய் அறிவியலாளர்கள், மருத்துவர்கள், துணைச்செயலர் அளவிலான நிபுணர்கள் கொண்ட 15 மத்திய குழுக்கள் பல்வேறு மாநிலங்களுக்கும், தொழில்நுட்ப உதவி அளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளன. கோவிட்-19 தொடர்பான பணிகளை வலுப்படுத்துவதற்காக மற்றொரு மத்தியக் குழு குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்றுள்ளது. ITIHAS மற்றும் ஆரோக்கிய சேது ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும் அமைச்சர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. நோய் தீவிரமாக உள்ள பகுதிகளை முன்கூட்டியே கண்டறிவது; நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவது ஆகியவற்றுக்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகள் இவற்றைப் பயன்படுத்துகின்றன. நோய்க் கட்டுப்பாட்டு உத்திகளுக்கு ஆயத்தம் அடைவதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.   இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ சி எம் ஆர்) மேற்கொள்ளும் பரிசோதனை உத்திகள் குறித்து விரிவான விளக்கம் ஒன்றை இக்கழகத்தின் தலைமை இயக்குநர் டாக்டர்.பார்கவா வழங்கினார். சீராலஜிகல் ஆய்வு குறித்தும், பல்வேறு பரிசோதனைகள் மூலமாக நாளொன்றுக்கு பரிசோதனை செய்யப்படும் அளவை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் அவர் விளக்கினார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சத்து 20 ஆயிரத்து 479 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன . இது நாள் வரை மொத்தம் 79,96 ,707 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன கோவிட்-19 நோய் தொடர்பாக மட்டும் மேற்கொள்ளப்பட உள்ள ஆய்வுகளுக்காக 1026 தனிப்பட்ட ஆய்வுக்கூடங்கள், தற்போது இந்தியாவில் உள்ளன. இதில் 741 ஆய்வுக்கூடங்கள் அரசுத் துறைக்குச் சொந்தமானவை. 285 ஆய்வுக் கூடங்கள், தனியார் ஆய்வுக்கூடங்கள் என்று அவர் கூறினார்.   நாட்டில் அதிகரித்து வரும் மருத்துவக் கட்டமைப்பு வசதி குறித்தும் அமைச்சர் குழுவிற்கு எடுத்துக் கூறப்பட்டது.   176275 தனிப்படுக்கைகள், 22940 தீவிர சிகிச்சைப் பிரிவுப்படுக்கைகள், 77268 பிராணவாயு உதவி வழங்க கூடிய படுக்கைகள் கொண்ட வசதிகளுடன் கூடிய கோவிட்-19 நோய் சிகிச்சைக்கான 1039  தனிப்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. 139483 தனிப் படுக்கைகள், 11539 தீவிர சிகிச்சைப் படுக்கைகள், 51321 பிராணவாயு உதவி அளிக்கக்கூடிய படுக்கைகள் கொண்ட கோவிட் சுகாதார மையங்களும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. கோவிட் நோயாளிகளுக்கு கவனம் செலுத்தும் 8958 கோவிட் கேர் மையங்கள் உள்ளன இவற்றில் 810621 படுக்கைகள் உள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைப்புகளுக்கு 185.11 லட்சம் N95 முகக்கவசங்களையும், 116 .74 தனிநபர் பாதுகாப்புக் கவசங்களையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...