முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேதகு டாக்டர் ஜோசப் மார் தோமா 90 வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் உரையாற்றுவார்

மேதகு 'டாக்டர். ஜோசப் மார் தோமா மெட்ரோபாலிடனின் 90 வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா கோவிட் -19 உடன் உறுதியாக போராடுகிறது என்று பிரதமர் கூறுகிறார். இந்தியாவின் சுயசார்பு வேலைவாய்ப்புத் திட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் பொருளாதார வலிமையையும், செழிப்பையும் உறுதி செய்கிறது: பிரதமர். ‘உள்நாட்டில் உற்பத்தி செய்யுங்கள் உள்ளூர்த் தயாரிப்புகளை வாங்குங்கள்’ என்ற அழைப்பு பலரின் வீடுகளில் செழிப்பின் விளக்கை ஏற்றி வைக்கும்: பிரதமர் பிரதமர் திரு நரேந்திர மோடி, மேதகு. டாக்டர்.ஜோசப் மார் தோமா மெட்ரோபாலிட்டன் 90 வது பிறந்த நாள் விழாவில் இன்று உரையாற்றினார். அப்போது அவருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெறவும் வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நமது சமூகம் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை டாக்டர்.ஜோசப் மார் தோமா அர்ப்பணித்துள்ளார் என்றும் குறிப்பாக பெண்கள் முன்னேற்றம் மற்றும் வறுமையை அகற்றுதல் குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்று குறிப்பிட்டார். கர்த்தராகிய கிறிஸ்துவின் அப்போஸ்தலரான செயிண்ட் தாமஸின் உன்னதமான கொள்கைகளுடன் மார் தோமா தேவாலயம் நெருக்கமாக தொடர்புடையது. ” இந்தியாவில் பல்வேறு மதங்களின் ஆன்மீகச் செல்வாக்குகளுக்கு எப்போதும் வாசல் திறந்திருக்கும் என்று பிரதமர் கூறினார். டாக்டர்.ஜோசப் மார் தோமா பற்றி குறிப்பிடும் போது, நல்லொழுக்கமும், பணிவும் நல்ல செயல்களில் எப்போதும் பலனளிக்கும். இந்த மனப்பாங்குடன் தான் மார் தோமா சர்ச், நமது சக இந்தியர்களின் வாழ்க்கையில், குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் சாதகமான மாற்றத்தைக் கொண்டு வர பணியாற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மார் தோமா சர்ச், ஒரு முக்கிய பங்காற்றியது என்றும், தேசிய ஒருங்கிணைப்புக்கு உழைப்பதில் முன்னணியில் இருப்பதாகவும் அவர் கூறினார். கோவிட்-19 என்பது மக்களின் உயிருக்கு ஆபத்தான ஒரு உடல் நோய் மட்டுமல்ல, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளில் கொண்டு வர வேண்டிய மாற்றத்தை நோக்கியும் நம் கவனத்தை திருப்பியது என்று பிரதமர் தெரிவித்தார். உலகளாவியத் தொற்று நோயிலிருந்து ஒட்டு மொத்த மனிதகுலமும் மனிதம் மூலமாக மட்டுமே குணமடைய முடியும் என்பதை இந்த சூழல் உணர்த்துகிறது என்றும், மேலும் புவியில் நல்லிணக்கமும், மகிழ்ச்சியும் பரவ முடிந்த அனைத்தையும் செய்யும் படி பார்வையாளர்களைக் கேட்டுக்கொண்டார். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா, கோவிட் -19 உடன் உறுதியாகப் போராடுகிறது என்றும் அவர் கூறினார். ஊரடங்கு காலத்தில், அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல முயற்சிகள் மற்றும் மக்களின் கொரானாவுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின் காரணமாக, இந்தியா மற்ற நாடுகளை விட மிகச் சிறந்த இடத்தில் உள்ளது என்றும், இந்தியாவில் நோயிலிருந்து மீள்பவர்கள் விகிதம் உயர்ந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். இதன் காரணமாக வைரசின் தீவிரம் எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளது. கோவிட் காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கு 12 என்ற அளவில் இருப்பதையும், இத்தாலியில் இது ஒரு மில்லியனுக்கு 574 ஆக இருப்பதையும் அவர் சுட்டி காட்டினார். மேலும், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவை விட மிக அதிகம் என்றும் கூறினார். 85 கோடி மக்கள் வசிக்கும் லட்சக்கணக்கான கிராமங்கள் கொரோனா வைரஸால் கிட்டத்தட்ட தீண்டத்தகாத நிலையில் உள்ளன என்று கூறினார். கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் மக்களும் ஈடுபடுவதால், இதுவரை நல்ல பலன்களைத் தந்துள்ளதாகவும், இருப்பினும் நமது பாதுகாப்பைக் குறைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். இப்போது நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும், முகக்கவசங்கள் அணிவது, தனி நபர் விலகல், ( இரண்டடி இடைவெளி दो गज की दूरी’), நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது, ஆகியவை மிக முக்கியமானது என்று தெரிவித்தார். கடந்த சில வாரங்களில், பொருளாதாரம் தொடர்பான குறுகிய கால மற்றும் நீண்ட கால பிரச்சினைகள் குறித்து இந்திய அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பிரதமர் கூறினார். கடலில் இருந்து விண்வெளி வரை, பண்ணைகள் முதல் தொழிற்சாலைகள் வரை மக்களை நேசத்துடன் அரவணைத்து, வேகமான வளர்ச்சியைக் காண முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். சுயசார்பு வேலைவாய்ப்பு, தன்னம்பிக்கை இந்தியாவுக்கான அழைப்பு என்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் பொருளாதார வலிமையையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதம மந்திரியின் மீன் வளத்திட்டம் குறித்து பேசிய பிரதமர், இருபதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்ட இந்தத் திட்டம் மீன்வளத் துறையை மாற்றவும், ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும், ஐம்பத்தைந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்கவும் உள்ளதாக தெரிவித்தார். தொடர் சந்தை வாய்ப்புகளை வலுவாக மாற்றுவதற்கான சிறந்த தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதி உறுதி செய்யப்படும். இந்தத் திட்டங்களால் கேரளாவில் உள்ள மீனவர்கள் பல்வேறு வகையிலும் லாபம் பெறுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று சீர்திருத்தங்கள் விண்வெளிச் சொத்துக்கள் மற்றும் செயல்பாடுகளை அதிக அளவில் பயன்படுத்துவதை உறுதி செய்யும் என்று பிரதமர் கூறினார். தரவுகள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அணுகல் மேம்படும். கேரளாவிலும் குறிப்பாக தென்னிந்தியாவிலும் பல இளைஞர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளவர்கள் இந்த சீர்திருத்தங்களால் பயன் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார். இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கான உணர்திறன் மற்றும் நீண்டகாலப் பார்வை ஆகியவற்றால் அரசாங்கம் வழிநடத்தப்படுகிறது என்று பிரதமர் கூறினார். அது மட்டுமன்றி மக்கள் நலம் சார்ந்த முடிவுகள் அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் எடுக்கப்படுவதாகவும், டெல்லியில் உள்ள வசதியான அரசு அலுவலகங்களிலிருந்து எடுக்கப்படுவது அல்ல என்றும் தெரிவித்தார். இது ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு வங்கிக் கணக்கை அணுகுவதை உறுதி செய்துள்ளது, 8 கோடிக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு புகை இல்லாத சமையலறைகள் கிடைத்துள்ளன, 1.5 கோடிக்கும் அதிகமான வீடுகள் வீடற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, மேலும் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான இந்தியாவும் ஆயுஷ்மான் பாரத் மூலம் இலவசமாக கழிப்பிடங்களைக் கட்டித் தந்துள்ளது. ஏழைகளுக்கு, ஒரு நாடு - ஒரு ரேஷன் கார்டு திட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் ரேஷன்களைப் பெற உதவியது என்று பிரதமர் கூறினார். நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை, எளிதாக வாழ்வதை அதிகரிக்க பல முயற்சிகள் கொண்டு வரப்பட்டன. விவசாயிகளைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அதிகரிக்கப்பட்டு அவை சரியான விலையைப் பெறுவதை உறுதிசெய்தன. பெண்களைப் பொறுத்தவரை, பல்வேறு திட்டங்கள் மூலம் அவர்களின் உடல்நலத்தில் சரியான கவனம் செலுத்தப்படுவதுடன், மகப்பேறு விடுப்பை விரிவாக்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைப் பாதை சமரசம் செய்யப்படுவதை தவிர்க்க உதவுகிறது. இந்திய அரசு தனி மனித நம்பிக்கை, பாலினம், சாதி, மதம் அல்லது மொழி ஆகியவற்றை கொண்டு பாகுபாடு காட்டவில்லை என்றும் 130 கோடி இந்தியர்களுக்கும் அதிகாரம் அளிக்கும் எண்ணத்தால் வழிநடத்தப்படுகிறது என்றும் நமது வழிகாட்டும் ஒளி இந்திய அரசியலமைப்பு என்றும் பிரதமர் கூறினார். நமது நடவடிக்கைகள் தேசிய வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கும் என்பதைப் பற்றி சிந்திக்க அவர் அழைப்பு விடுத்தார். நாங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்வோம், உள்ளூர் தயாரிப்புகளையே வாங்குவோம் என்று இப்போது இந்தியா கூறுவதாக தெரிவித்தார். இது பலரின் வீடுகளில் செழிப்பின் விளக்கை ஏற்றி வைக்கும். பின்னணி மார் தோமா தேவாலயம் என்று அழைக்கப்படும் மலங்கரா மார் தோமா சிரிய தேவாலயம் கேரளாவின் பழங்கால, பூர்வீக தேவாலயங்களில் ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவின் சீடரான புனித தாமஸ் கி.பி 52இல் இந்தியா வந்து இந்த திருச்சபையை நிறுவினார் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. தற்போது, 21வது மலங்கரா மெட்ரோபலிட்டன், மேதகு. டாக்டர் ஜோசப் மார் தோமா இந்த திருச்சபைக்கு தலைமை தாங்குகிறார், இவர் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக திருச்சபையின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போதும், அதன் பிறகு அவசர காலத்திலும் மார் தோமா சர்ச் ஜனநாயக விழுமியங்களையும், தேசியவாதத்தின் உணர்வையும் நிலைநிறுத்தியுள்ளது. இத்திருச்சபை மனிதகுலத்திற்கு சேவை செய்வதில் உறுதியாக உள்ளதுடன், பல்வேறு சமூக நல நிறுவனங்கள், ஆதரவற்றோர் வீடுகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. பூகம்பம், வெள்ளம், சுனாமி போன்ற நெருக்கடியான காலங்களில் சர்ச் பல்வேறு மாநிலங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளில் பங்கேற்றது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.