முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஐடி நிறுவன நிர்வாகிகளுடன் ஆலோசனை

கோவிட் 19 காலகட்டத்தில் முதல்வர் உள்பட எங்களை போன்றவர்கள் மக்கள் பணியாற்றி வரும் நிலையில், எதிர்கட்சி தலைவர் அறிக்கை மட்டும் விட்டுவிட்டு எந்த சேவையும் செய்வது இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார் சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள தமிழ்நாடு மின்ஆளுமை முகமை அலுவலகத்தில் சென்னனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்குகின்ற ஐடி நிறுவன நிர்வாகிகளுடன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனைமேற்கொண்டார் . காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐடி நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? அரசின் விதிமுறைகளை எப்படி கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்டவற்றை அமைச்சர் வலியுறுத்தினார். மேலும் ஐடி நிறுவனங்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா தொற்றின் காரணமாக 6வதுமுறையாக ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்குஉத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஐடி நிறுவனங்கள் செயல்படுவதற்கான வழிமுறைகள், விதிகளை அரசு வகுத்துள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிற நேரங்களில் எல்லாம் ஐடி நிறுவனங்களுடன் தொடர்ந்து அரசு ஆலோசனை நடத்துகிறது. அதன்அடிப்படையில் ஐடி நிறுவனங்களுடன் நாஸ்காம் உதவியுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினேன். இந்த ஆய்வின் போது சில கோரிக்கைகளை நிறுவனங்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்த படியே பணியாற்ற நிறுவனங்களுக்கு அறிவுரைகள்வழங்கப்பட்டது. அரசு முழுஒத்துழைப்பு அளிக்கும் வகையில் வீடுகளிலிருந்து ஐடி நிறுவன ஊழியர்கள் திறம்பட பணியாற்றி வியாபார தொடர்புகளை தடையின்றி செய்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத ஊழியர்களுடனும், பிற மாவட்டங்களில் 100 சதவீத ஊழியர்களுடனும் வரும் 6-ம் தேதி முதல் செயல்பட தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார். அப்படி பணியாற்றும் போது சமூக இடைவெளியை பின்பற்றுவது, முககவசம் அணிவது, கிருமிநாசினி தொளிப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் ஐடி நிறுவனங்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். இதை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்து பேசுகையில்: முதல்வர் உட்பட நாங்கள் சேவை மனபான்மையுடன் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறோம். அதே மூத்த அரசியல்வாதியான ஐ.பெரியசாமி மற்றும் எதிர்கட்சி தலைவர் எவ்வாறு மக்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போதைய காலகட்டத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டு விடும் எனும் அச்சம் அனைவருக்கும் உள்ளது. இருந்தபோதிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் உள்பட பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள என்னை போன்றவர்கள் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் மக்களை உயிரை காக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வரின் ஆணைக்கிணங்க செயல்பட்டு வருகிறோம். ஆனால் எதிர்கட்சி தலைவர் உட்பட அவரது கட்சியை சார்ந்தவர்கள் வீட்டிற்குள்ளேயை அமர்ந்து கொண்டு அறிக்கை மேல் அறிக்கை மட்டும் விட்டு கொண்டு அரசியல் செய்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் நான் எத்தனை பணிகளில் நேரடியாக மேற்கொண்டு வருகிறேன். முதல்வர் எத்தனை பணிகளை நேரடியாக சென்று செய்து வருகிறார். அதே போன்று எதிர்கட்சி தலைவரே அல்லது அவரது கட்சியை சார்ந்தவர்களே எத்தனை களப்பணியாற்றியிருக்கிறார் என்பது எல்லாம் மக்களுக்கு நன்றாக தெரியும். எதிர்கட்சி தலைவரை பொறுத்தவரை இந்த இக்கட்டண சூழ்நிலையை அரசியலுக்காக பயன்படுத்தி கொண்டு அறிக்கை மேல் அறிக்கை மட்டும் தான் விட்டு வருகிறார். 10 அறிக்கை எதிர்கட்சி தலைவர் தனது பெயரிலும், சில அறிக்கைகளை தங்களது கட்சியின்மூத்த தலைவர்கள் பெயரிலும் வெளியிடுகிறார். கோவிட் 19 காலக்கட்டத்தில் எங்களை போன்றவர்கள் மக்கள் சேவை செய்து வரும் வேளையில், எதிர்கட்சி தலைவர் அறிக்கையை மட்டும் விட்டு விட்டு எந்த வேலையும் செய்வது கிடையாது. 2015-ம் ஆண்டு பெருவெள்ளம் போன்று இனிவரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என ஐஐடி தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களான நவம்பர், செப்டம்பர், டிசம்பர் ஆகிய காலகட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி மாவட்ட நிர்வாகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்அடிப்படையில் பாதிக்கப்பட்டக்கூடிய பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் காலத்திற்கு முன், பேரிடர் காலம், அதற்கு பின் என 3 பிரிவாக பிரித்து இந்த காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து 32 வருவாய் மாவட்ட நிர்வாகத்திற்கு, குறிப்பாக கடலோர மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கஜாபுயல், வர்தா புயல் ஆகிய நேரங்களில் தமிழக அரசு முன்கூட்டியே மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தான் ஒரு உயிரிழப்புக்கூட ஏற்படவில்லை,அதே போன்று மழைகாலத்திற்கு முன்பாக அனைத்து நடவடிக்கைகளும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்தார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்