முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஐடி நிறுவன நிர்வாகிகளுடன் ஆலோசனை

கோவிட் 19 காலகட்டத்தில் முதல்வர் உள்பட எங்களை போன்றவர்கள் மக்கள் பணியாற்றி வரும் நிலையில், எதிர்கட்சி தலைவர் அறிக்கை மட்டும் விட்டுவிட்டு எந்த சேவையும் செய்வது இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார் சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள தமிழ்நாடு மின்ஆளுமை முகமை அலுவலகத்தில் சென்னனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்குகின்ற ஐடி நிறுவன நிர்வாகிகளுடன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனைமேற்கொண்டார் . காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐடி நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? அரசின் விதிமுறைகளை எப்படி கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்டவற்றை அமைச்சர் வலியுறுத்தினார். மேலும் ஐடி நிறுவனங்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா தொற்றின் காரணமாக 6வதுமுறையாக ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்குஉத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஐடி நிறுவனங்கள் செயல்படுவதற்கான வழிமுறைகள், விதிகளை அரசு வகுத்துள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிற நேரங்களில் எல்லாம் ஐடி நிறுவனங்களுடன் தொடர்ந்து அரசு ஆலோசனை நடத்துகிறது. அதன்அடிப்படையில் ஐடி நிறுவனங்களுடன் நாஸ்காம் உதவியுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினேன். இந்த ஆய்வின் போது சில கோரிக்கைகளை நிறுவனங்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்த படியே பணியாற்ற நிறுவனங்களுக்கு அறிவுரைகள்வழங்கப்பட்டது. அரசு முழுஒத்துழைப்பு அளிக்கும் வகையில் வீடுகளிலிருந்து ஐடி நிறுவன ஊழியர்கள் திறம்பட பணியாற்றி வியாபார தொடர்புகளை தடையின்றி செய்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத ஊழியர்களுடனும், பிற மாவட்டங்களில் 100 சதவீத ஊழியர்களுடனும் வரும் 6-ம் தேதி முதல் செயல்பட தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார். அப்படி பணியாற்றும் போது சமூக இடைவெளியை பின்பற்றுவது, முககவசம் அணிவது, கிருமிநாசினி தொளிப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் ஐடி நிறுவனங்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். இதை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்து பேசுகையில்: முதல்வர் உட்பட நாங்கள் சேவை மனபான்மையுடன் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறோம். அதே மூத்த அரசியல்வாதியான ஐ.பெரியசாமி மற்றும் எதிர்கட்சி தலைவர் எவ்வாறு மக்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போதைய காலகட்டத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டு விடும் எனும் அச்சம் அனைவருக்கும் உள்ளது. இருந்தபோதிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் உள்பட பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள என்னை போன்றவர்கள் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் மக்களை உயிரை காக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வரின் ஆணைக்கிணங்க செயல்பட்டு வருகிறோம். ஆனால் எதிர்கட்சி தலைவர் உட்பட அவரது கட்சியை சார்ந்தவர்கள் வீட்டிற்குள்ளேயை அமர்ந்து கொண்டு அறிக்கை மேல் அறிக்கை மட்டும் விட்டு கொண்டு அரசியல் செய்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் நான் எத்தனை பணிகளில் நேரடியாக மேற்கொண்டு வருகிறேன். முதல்வர் எத்தனை பணிகளை நேரடியாக சென்று செய்து வருகிறார். அதே போன்று எதிர்கட்சி தலைவரே அல்லது அவரது கட்சியை சார்ந்தவர்களே எத்தனை களப்பணியாற்றியிருக்கிறார் என்பது எல்லாம் மக்களுக்கு நன்றாக தெரியும். எதிர்கட்சி தலைவரை பொறுத்தவரை இந்த இக்கட்டண சூழ்நிலையை அரசியலுக்காக பயன்படுத்தி கொண்டு அறிக்கை மேல் அறிக்கை மட்டும் தான் விட்டு வருகிறார். 10 அறிக்கை எதிர்கட்சி தலைவர் தனது பெயரிலும், சில அறிக்கைகளை தங்களது கட்சியின்மூத்த தலைவர்கள் பெயரிலும் வெளியிடுகிறார். கோவிட் 19 காலக்கட்டத்தில் எங்களை போன்றவர்கள் மக்கள் சேவை செய்து வரும் வேளையில், எதிர்கட்சி தலைவர் அறிக்கையை மட்டும் விட்டு விட்டு எந்த வேலையும் செய்வது கிடையாது. 2015-ம் ஆண்டு பெருவெள்ளம் போன்று இனிவரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என ஐஐடி தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களான நவம்பர், செப்டம்பர், டிசம்பர் ஆகிய காலகட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி மாவட்ட நிர்வாகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்அடிப்படையில் பாதிக்கப்பட்டக்கூடிய பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் காலத்திற்கு முன், பேரிடர் காலம், அதற்கு பின் என 3 பிரிவாக பிரித்து இந்த காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து 32 வருவாய் மாவட்ட நிர்வாகத்திற்கு, குறிப்பாக கடலோர மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கஜாபுயல், வர்தா புயல் ஆகிய நேரங்களில் தமிழக அரசு முன்கூட்டியே மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தான் ஒரு உயிரிழப்புக்கூட ஏற்படவில்லை,அதே போன்று மழைகாலத்திற்கு முன்பாக அனைத்து நடவடிக்கைகளும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்தார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...