முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களின் கலகக்குரல்களால் கலக்கத்தில் தொண்டர்கள்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி கடந்த இரு தேர்தல்களாக சுருங்கியதால் இப்போது கலகக் குரல்கள் எழும் நிலை. சோனியா காந்தியின் தலைமையை எதிர்த்து குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த சர்மா, முகுல் வாஸ்னிக், மணீஷ் திவாரி உட்பட 23 தலைவர்கள் ஒன்றாகி ‘கட்சிக்கு தேர்தெடுக்கப்பட்ட, முழு நேரமும் பணியாற்றக் கூடிய செயல்பாடுகள் நிறைந்த தலைமை வேண்டுமென தலைமைக்குக் கடிதம் எழுதி. தகவல் காங்கிரஸ் செயற்குழுவுக்கு முதல் நாளில் ஆங்கில மீடியாக்களில் பிரதிபலிக்கவே. ஆளுங்கட்சி பாஜக, ‘காங்கிரஸ் முக்த் பாரத்’ (காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்) எனச் சொல்லி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இப்படி மூத்த தலைவர்களின் போர்க்கொடிகள் கிளம்பவே ஆகஸ்ட் 24 ஆம் தேதி கூடிய செயற்குழுவில் கடிதம் எழுதியவர்களில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்க காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் சிலர் மட்டும் காங்கிரஸ் தலைமையகத்தில் இருக்கவே கூட்டத்தில் கலந்துகொண்டு கடுமையான விமர்சனங்களை சந்தித்த குலாம் நபி ஆசாத் மற்றும் கபில் சிபல் ஆகியோர் மீண்டும் தலைமை மீது விமர்சனங்களை வைக்கத் தொடங்கியுள்ளனர். கட்சி குறித்த விமர்சனங்களை செயற்குழுவில்தான் வைக்க வேண்டும், ஊடகங்களிலோ பொதுவெளியிலோ அல்ல என்று ஆகஸ்ட் 24 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழுவில் கண்டிப்பாக அனைவருக்கும் சொல்லப்பட்ட பின் குலாம் நபி ஆசாத், ‘உட்கட்சித் தேர்தல் நடத்தவில்லை என்றால் காங்கிரஸ் இன்னும் 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாகத்தான் இருக்குமென்று பேட்டி கொடுத்து அதில் ’எங்கள் கடிதம் கண்டு கொள்ளப்படவில்லை. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிறதென்று பாஜக மீது நாம் குற்றம் சாட்டுகிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சியில் கட்சியின் அரசியலமைப்பு சாசனமே பின்பற்றப்படுவதில்லையே?’ எனப் பேட்டி வர அந்த 23 தலைவர்களின் குரல் மாறத் தொடங்கிய நிலையில் காங்கிரஸ் செயற்குழுவில் குலாம் நபி ஆசாத்தை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகள், அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு செயற்குழு உறுப்பினரிடம் இருந்து புறப்பட்ட கேள்விகள் அன்று கூட்டத்தையே உலுக்கியெடுத்தனவாமென டெல்லி அரசியல் தரப்பில் பேசும் நிலை. ‘ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடந்த செயற்குழுக் கூட்டத்தில் தலைமைக்குக் கடிதம் எழுதிய 23 பேரையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் கண்டித்ததாகவும். அம்பிகா சோனியோ அவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் எனக் கூறினாரென தகவல் உண்டு. இந்தச் செயற்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவரும், கிருஷ்ணகிரி எம்.பி.யும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான டாக்டர் செல்லகுமாரும் கலந்துகொண்டு. அவர் பேச்சில் ராகுலும், சோனியாவும் மற்ற தலைவர்களுமே கூட அதிர்வாகவே செல்லகுமாரை யாரும் தடுத்து நிறுத்தவில்லையாம். பத்து நிமிடம் வரை பேசிய டாக்டர் செல்லகுமாரின் கேள்விகள் குலாம் நபி ஆசாத்தை உலுக்கி விட்டதாம். அப்படி என்னதான் பேசினார் ‘காங்கிரஸை வைத்து நேரு குடும்பம் அனுபவித்தது கொடுமைகளும், துயரங்களும்தானாம். நேரு குடும்பத்தின் தலைவர்களை வைத்துதான் காங்கிரஸும், நாடும் நன்மைகளை அனுபவித்து வந்திருக்கின்றன. கடந்த வருடம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீரில் 370 ஆவது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு மத்திய அரசால் மாநிலமாகவும், லடாக் யூனியனாகவும் பிரிக்கப்பட்ட மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட எல்லா கட்சித் தலைவர்களையும் மோடி அரசு கைது செய்து இன்று வரை கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஆனால், உங்களை மட்டும் (குலாம் நபி ஆசாத்) மட்டும் மோடி அரசு கைது செய்யாமல் டெல்லிக்குச் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதில் என்ன மர்மம்? இத்தனைக்கும் 370 ஆவது சிறப்பு அந்தஸ்தை காஷ்மீருக்கு வழங்கியதே காங்கிரஸ்தானே. காஷ்மீரை துண்டாடி விட்டார்களென்று இன்னமும் காஷ்மீரிலும், காஷ்மீருக்கு வெளியேயும் உரக்கப் பேசுவது காங்கிரஸ்தானே. இந்த காங்கிரஸைச் சேர்ந்த காஷ்மீரின் முன்னாள் முதல்வரான உங்களை மட்டும் மோடி அரசு கைது செய்யாமல் விட்டு வைத்திருப்பது எப்படி? உங்களுக்கெல்லாம் டெல்லியில் 5 ஏக்கரில் பத்து ஏக்கரில் பங்களா வேண்டும். ராஜ வாழ்க்கை வேண்டும். அதெல்லாம் இருந்தால் சோனியா காந்தி வேண்டும் என்பீர்கள். ராகுல் காந்தி வேண்டும் என்பீர்கள். அதெல்லாம் கிடைக்காத போது கட்சி நினைவு வந்துவிடும். தலைமையை மாற்ற வேண்டும் என்பீர்கள். காங்கிரஸின் முதல் குழந்தை நேரு குடும்பத்தில் தான் பிறக்கிறது. நாமெல்லாம் அடுத்த குழந்தைகள் தான்’ என செல்லகுமாரின் பேச்சு செயற்குழுவில் புயலைக் கிளப்ப ராகுல் இந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்க. காஷ்மீர் விஷயத்தில் அமித் ஷா, குலாம் நபி ஆசாத்தை ஏன் மென்மையாக நடத்தினார் என்ற கேள்வி இன்று வரை அரசியல் அரங்கில் எழுப்பப்படாத கேள்வியானது. அதை கடந்த 24 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழுவிலேயே செல்லகுமார் கேட்டதும் குலாம் நபி ஆசாத் முகம் மாற்றம் கண்டதாம். அவருடைய அடுத்தடுத்த தாக்குதல்களுக்கு இதுவே காரணமாகச் சொல்லப்படுகிறது. செயற்குழுக் கூட்டம் முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகுதான் டெல்லியின் மூத்த பத்திரிகையாளர்களுக்கு இந்தத் தமிழக அட்டாக் பற்றிய தகவலே கிடைத்த விபரம் ஒரு தலைவர் மூலம் தெரியவரவே. காஷ்மீர் விஷயத்தில் பாஜகவுடன் குலாம் நபி ஆசாத் ஏதேனும் சமரசம் செய்துகொண்டாரா? அதன் விளைவாகத்தான் இந்த கடிதமும் அதற்கடுத்த பேட்டிகளும் அரங்கேறுகின்றனவா என்ற சந்தேகத்தில் இருக்கிறதாம் காங்கிரஸ் தலைமை. இன்னும் இந்த விவகாரம் வெடிக்கும் என டெல்லி வட்டாரத்தில்” ஹாட் நியூஸாகிரது. மராட்டிய சரத்பவார்,மேற்கு வங்க மம்தா அசாம் சங்மா ஆந்திராவில் ராஜசேகரரெட்டி மகன் போல காஷ்மீருக்கு ஒரு குலாம் நபி ஆஷாத் எனப் பேச்சு துவக்க நிலை தானே. கடைத்தெருவர கத்தரிக்காய் முற்ற வேண்டும்.அதுவரை காத்திருக்கலாமே.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த