முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களின் கலகக்குரல்களால் கலக்கத்தில் தொண்டர்கள்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி கடந்த இரு தேர்தல்களாக சுருங்கியதால் இப்போது கலகக் குரல்கள் எழும் நிலை. சோனியா காந்தியின் தலைமையை எதிர்த்து குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த சர்மா, முகுல் வாஸ்னிக், மணீஷ் திவாரி உட்பட 23 தலைவர்கள் ஒன்றாகி ‘கட்சிக்கு தேர்தெடுக்கப்பட்ட, முழு நேரமும் பணியாற்றக் கூடிய செயல்பாடுகள் நிறைந்த தலைமை வேண்டுமென தலைமைக்குக் கடிதம் எழுதி. தகவல் காங்கிரஸ் செயற்குழுவுக்கு முதல் நாளில் ஆங்கில மீடியாக்களில் பிரதிபலிக்கவே. ஆளுங்கட்சி பாஜக, ‘காங்கிரஸ் முக்த் பாரத்’ (காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்) எனச் சொல்லி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இப்படி மூத்த தலைவர்களின் போர்க்கொடிகள் கிளம்பவே ஆகஸ்ட் 24 ஆம் தேதி கூடிய செயற்குழுவில் கடிதம் எழுதியவர்களில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்க காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் சிலர் மட்டும் காங்கிரஸ் தலைமையகத்தில் இருக்கவே கூட்டத்தில் கலந்துகொண்டு கடுமையான விமர்சனங்களை சந்தித்த குலாம் நபி ஆசாத் மற்றும் கபில் சிபல் ஆகியோர் மீண்டும் தலைமை மீது விமர்சனங்களை வைக்கத் தொடங்கியுள்ளனர். கட்சி குறித்த விமர்சனங்களை செயற்குழுவில்தான் வைக்க வேண்டும், ஊடகங்களிலோ பொதுவெளியிலோ அல்ல என்று ஆகஸ்ட் 24 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழுவில் கண்டிப்பாக அனைவருக்கும் சொல்லப்பட்ட பின் குலாம் நபி ஆசாத், ‘உட்கட்சித் தேர்தல் நடத்தவில்லை என்றால் காங்கிரஸ் இன்னும் 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாகத்தான் இருக்குமென்று பேட்டி கொடுத்து அதில் ’எங்கள் கடிதம் கண்டு கொள்ளப்படவில்லை. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிறதென்று பாஜக மீது நாம் குற்றம் சாட்டுகிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சியில் கட்சியின் அரசியலமைப்பு சாசனமே பின்பற்றப்படுவதில்லையே?’ எனப் பேட்டி வர அந்த 23 தலைவர்களின் குரல் மாறத் தொடங்கிய நிலையில் காங்கிரஸ் செயற்குழுவில் குலாம் நபி ஆசாத்தை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகள், அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு செயற்குழு உறுப்பினரிடம் இருந்து புறப்பட்ட கேள்விகள் அன்று கூட்டத்தையே உலுக்கியெடுத்தனவாமென டெல்லி அரசியல் தரப்பில் பேசும் நிலை. ‘ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடந்த செயற்குழுக் கூட்டத்தில் தலைமைக்குக் கடிதம் எழுதிய 23 பேரையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் கண்டித்ததாகவும். அம்பிகா சோனியோ அவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் எனக் கூறினாரென தகவல் உண்டு. இந்தச் செயற்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவரும், கிருஷ்ணகிரி எம்.பி.யும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான டாக்டர் செல்லகுமாரும் கலந்துகொண்டு. அவர் பேச்சில் ராகுலும், சோனியாவும் மற்ற தலைவர்களுமே கூட அதிர்வாகவே செல்லகுமாரை யாரும் தடுத்து நிறுத்தவில்லையாம். பத்து நிமிடம் வரை பேசிய டாக்டர் செல்லகுமாரின் கேள்விகள் குலாம் நபி ஆசாத்தை உலுக்கி விட்டதாம். அப்படி என்னதான் பேசினார் ‘காங்கிரஸை வைத்து நேரு குடும்பம் அனுபவித்தது கொடுமைகளும், துயரங்களும்தானாம். நேரு குடும்பத்தின் தலைவர்களை வைத்துதான் காங்கிரஸும், நாடும் நன்மைகளை அனுபவித்து வந்திருக்கின்றன. கடந்த வருடம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீரில் 370 ஆவது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு மத்திய அரசால் மாநிலமாகவும், லடாக் யூனியனாகவும் பிரிக்கப்பட்ட மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட எல்லா கட்சித் தலைவர்களையும் மோடி அரசு கைது செய்து இன்று வரை கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஆனால், உங்களை மட்டும் (குலாம் நபி ஆசாத்) மட்டும் மோடி அரசு கைது செய்யாமல் டெல்லிக்குச் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதில் என்ன மர்மம்? இத்தனைக்கும் 370 ஆவது சிறப்பு அந்தஸ்தை காஷ்மீருக்கு வழங்கியதே காங்கிரஸ்தானே. காஷ்மீரை துண்டாடி விட்டார்களென்று இன்னமும் காஷ்மீரிலும், காஷ்மீருக்கு வெளியேயும் உரக்கப் பேசுவது காங்கிரஸ்தானே. இந்த காங்கிரஸைச் சேர்ந்த காஷ்மீரின் முன்னாள் முதல்வரான உங்களை மட்டும் மோடி அரசு கைது செய்யாமல் விட்டு வைத்திருப்பது எப்படி? உங்களுக்கெல்லாம் டெல்லியில் 5 ஏக்கரில் பத்து ஏக்கரில் பங்களா வேண்டும். ராஜ வாழ்க்கை வேண்டும். அதெல்லாம் இருந்தால் சோனியா காந்தி வேண்டும் என்பீர்கள். ராகுல் காந்தி வேண்டும் என்பீர்கள். அதெல்லாம் கிடைக்காத போது கட்சி நினைவு வந்துவிடும். தலைமையை மாற்ற வேண்டும் என்பீர்கள். காங்கிரஸின் முதல் குழந்தை நேரு குடும்பத்தில் தான் பிறக்கிறது. நாமெல்லாம் அடுத்த குழந்தைகள் தான்’ என செல்லகுமாரின் பேச்சு செயற்குழுவில் புயலைக் கிளப்ப ராகுல் இந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்க. காஷ்மீர் விஷயத்தில் அமித் ஷா, குலாம் நபி ஆசாத்தை ஏன் மென்மையாக நடத்தினார் என்ற கேள்வி இன்று வரை அரசியல் அரங்கில் எழுப்பப்படாத கேள்வியானது. அதை கடந்த 24 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழுவிலேயே செல்லகுமார் கேட்டதும் குலாம் நபி ஆசாத் முகம் மாற்றம் கண்டதாம். அவருடைய அடுத்தடுத்த தாக்குதல்களுக்கு இதுவே காரணமாகச் சொல்லப்படுகிறது. செயற்குழுக் கூட்டம் முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகுதான் டெல்லியின் மூத்த பத்திரிகையாளர்களுக்கு இந்தத் தமிழக அட்டாக் பற்றிய தகவலே கிடைத்த விபரம் ஒரு தலைவர் மூலம் தெரியவரவே. காஷ்மீர் விஷயத்தில் பாஜகவுடன் குலாம் நபி ஆசாத் ஏதேனும் சமரசம் செய்துகொண்டாரா? அதன் விளைவாகத்தான் இந்த கடிதமும் அதற்கடுத்த பேட்டிகளும் அரங்கேறுகின்றனவா என்ற சந்தேகத்தில் இருக்கிறதாம் காங்கிரஸ் தலைமை. இன்னும் இந்த விவகாரம் வெடிக்கும் என டெல்லி வட்டாரத்தில்” ஹாட் நியூஸாகிரது. மராட்டிய சரத்பவார்,மேற்கு வங்க மம்தா அசாம் சங்மா ஆந்திராவில் ராஜசேகரரெட்டி மகன் போல காஷ்மீருக்கு ஒரு குலாம் நபி ஆஷாத் எனப் பேச்சு துவக்க நிலை தானே. கடைத்தெருவர கத்தரிக்காய் முற்ற வேண்டும்.அதுவரை காத்திருக்கலாமே.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...