முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் மேற்கோள் காட்டிய விருது பெற்ற எழுத்தாளரின் நாவல் வரிகள்

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு எழுத்தாளரின் முகநூல் பதிவை மேற்கோள் கூறி தீர்ப்பு வழங்கிய பதினோரு பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் சோ.தர்மன் பதிவை அப்படியே எடுத்து பயன்படுத்தியதோடு இல்லாமல் அரசுக்கு சில ஆலோசனைகளை‌யும் வழங்குகிறார்கள். "கண்மாய் போன்ற நீர் நிலைகளை ஆதாரங்களை ஏலம் விடும் நடைமுறைகளை மாற்றுங்கள் நுகர்வோருக்கு உள்ள உரிமைகளை உறுதிப்படுத்துங்களென அறிவுறுத்துகிறார்கள்.சாகித்திய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மனின் பதிவை பாருங்கள் என்று எடுத்துக் காட்டுகிறார்கள். சாதாரணமான ஒரு முகநூல் பதிவு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் இடம்பெற்று இதைப் பின்பற்றும்படி அரசின் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள பரிந்துரைக்கிறது.ஒரு உயர்நீதிமன்றத் தீர்ப்பு என்பது‌ இந்திய அரசின் ஆவணம். காலாகாலத்திற்கும் பாதுகாக்கப்படும்.பல்வேறு சட்டநிபுணர்கள் வழக்கறிஞர்களால் சட்டம் பயிலும் மாணவர்களால் வாசிக்கப்படும். தமிழகத்தின் நீர்நிலைகளில் நுகர்வோருக்குள்ள உரிமைகளை நிலைநாட்டி ஏலம் விடும் நடைமுறைகளை மாற்ற வேண்டும் பதிவுகள் கூறும் சம்பவம் : " நேற்று உச்சி மதியம் சுட்டெரிக்கும் வெய்யில்.கண்மாய்க் கரை மரத்தடியில் உட்கார்ந்து தூண்டில் போட்டுக் கொண்டிருந்தேன்.அந்த கண்மாயின் குத்தகைதாரர் என்னை மட்டுமே தூண்டில் போட அனுமதித்திருப்பதால் நான் மட்டுமே எப்போதும் தனித்திருப்பேன்.சில நேரம் பயமாகக் கூட இருக்கும்.இந்த தனிமை தவத்திற்காகவே நான் விரும்பி போய் தூண்டில் போடுகிறேன். திடீரென்று ஆளரவம் கேட்கவும் ஏறிட்டுப் பார்த்தால் நேராக என் தலைக்கு மேல் கரையில் திடகாத்திரமான ஒரு ஆறடி மனுஷர்.கையில் நீண்ட கம்பு.கழுத்தில் தொங்கும் நீண்ட துண்டு.மிகவும் பவ்யமாக வணக்கம் வைத்து பணிந்து கும்பிட்டார்.தூண்டிலை வாகரையில் ஊன்றி விட்டு கரையேறினேன். "ஐயா என் பேர் காளியப்பக்கோனார்.கிடை மாடுகள் மேய்ப்பவர்கள் " என்று சொல்லி விட்டு தூரத்தில் மேயும் மாடுகளைக் காட்டினார். "சரிய்யா இப்ப உங்களுக்கு என்ன வேணும்" "இந்த மாடுகளுக்கு தண்ணீர் குடிக்க நீங்க அனுமதிக்கணும் ஐயா"என்றார். அவர் இப்படிக் கேட்டதும் எனக்கு ஆச்சரியம்.அவர் முகத்தையே உற்றுப் பார்த்தேன்.அவர் சொன்னார். "ஐயா நாங்க கமுதியிலிருந்து வர்ரோம்.அப்பிடியே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் வரைப் போய் திரும்ப ஊர் போக ஆறு மாசமாகும்.எல்லாக் கண்மாய்களையும் அரசு குத்தகைக்கு விட்ருச்சு.குத்தகைதாரர்கள் மாடுகளை தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை.எங்களை அடித்து விரட்டுகிறார்கள்.மாடுகளை கற்களால் எறிந்து விரட்டுகிறார்கள்" என்று அவர் சொன்ன போது என்னால் நம்ப முடியவில்லை.இந்த குத்தகைதாரர் மிகவும் நல்லவர் தாராளமாக தண்ணீர் காட்டுங்கள் என்று சொன்னவுடன் கரையிலிருந்த படியே ஒரு விசில் கொடுத்தார்.எல்லா மாடுகளும் எங்களைச் பார்த்து வேகமாக வந்தன.கூடவே இன்னொருவரும் வந்தார்.மொத்தம் 270 மாடுகள். காளை பசு கன்றுக்குட்டிகள்.ஆனந்தமாக தண்ணீர் குடித்து நீச்சலும் அடித்தன.பல் வேறு தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார் கோனார்.சம்சாரிகளின் பம்புசெட் கிணறுகளில் வாய்க்காலில் மாடுகள் தண்ணீர் குடிப்பதை இதுவரை எந்த சம்சாரியும் தடுத்ததில்லை என்றார்.பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் இல்லை என்றவர் குளங்களில் கண்மாய்களில் குடிப்பதுமாதிரி வாய்க்காலில் குடிப்பது நிறைவாக இருக்காது என்றார். நிறையக் கண்மாய்களில் பறவைகளை மீன்பிடிக்க விடாமல் கூடுகட்ட விடாமல் குத்தகைதாரர்கள் வெடிவெடித்து விரட்டுகிறார்கள் என்று அவர் சொன்ன போது நான் மௌனித்துப் போனேன்.அரசு கண்மாய்களை குத்தகை என்ற பேரில் பாக்டரிகளாக மாற்றி விட்டது.லாபநோக்கில் வியாபாரியாக செயல்படுகிறார்கள் குத்தகைதாரர்கள். ஏற்கனவே வருவாய்த்துறை,பொதுப்பணித்துறை,வனத்துறை,கனிமவளத்துறை போன்றவற்றால் கண்காணிப்பு என்ற பேரில் ஊர் மக்களுக்கும் கண்மாய்க்கு மான உறவை நாசப்படுத்தி விட்டது அரசு.இப்போது குத்தகைதாரர்கள் பறவைகளுக்கும் கால் நடைகளுக்குமான தொடர்பை துண்டித்து விட்டார்கள்.அப்படியானால் இந்தக் கண்மாய்களை ஏரிகளை ஊருணிகளை தெப்பங்களை நீராவிகளை நம் முன்னோர்கள் யாருக்காக உருவாக்கினார்கள்.கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.மாடுகள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் தனி நாவல் தர திட்டம் இந்த எழுத்தாளர் எழுத்தில் எண்ணத்தில் தெரிகிறது சைபீரியாவிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பறந்து வந்து தமிழ்நாட்டுக்கு வருகிற ஒரு கொக்கை இங்கே கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய விடாமலும் மீன் பிடித்து பசியாற விடாமலும் நாம் விரட்டினால் அது நம்மைப்பற்றி என்ன நினைக்கும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்"என்று உலகுக்கே பொதுமறை சொன்ன மகிபாலன்பட்டி கனியன் பூங்குன்றன் வாழ்ந்த பூமியா இது?"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்"என்ற வள்ளலாரின் காலடிபட்ட மண்ணா இது?"காக்கைக் குருவி எங்கள் ஜாதி"என்றானே எட்டயபுரத்து மகாகவி பாரதி அவர் வாழ்ந்த பூமியா இது? என்று நினைக்குமா இல்லையா.பட்சி தோஷமும் தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காத வாயில்லா ஜீவன்களின் வயிற்றெரிச்சலும் இதை உருவாக்கியவர்களைச் சுட்டெரிக்கும். தயவு செய்து கண்மாய்களை குத்தகைக்கு விட்டு கம்பெனியாக்குவதை நிறுத்துங்கள்.கண்மாய்களும் நீர் நிலைகளும் ஒரு நாட்டின் இரத்த நாளங்கள் என்பதை பகுத்தறிவு உங்களுக்கு சொல்லவில்லையா.அப்படியானால் நீங்கள் பேசுகின்ற பகுத்தறிவுக்கு என்ன அர்த்தம். இது தொடர்பாக அரசின் நீர்நிலைகள் ஆக்கிரமித்துக் கொண்டதை தடுக்க அரசாணை 540 மட்டுமே உண்டு ஆனால் அதை அமல்படுத்த பலரும் போராடித்தான் தீர்வு வருகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்