சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சங்கராபுரம் முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் மாங்குடி என்பவர் பெர்மாங்கனேட் காலனிப் பகுதியில் வசிக்கிறார் அவர் வீட்டுக்கு பைப் வெடிகுண்டு மற்றும் கத்தி ஆயுதங்களுடன் வந்து பணம் கோடி கேட்டு மிரட்டியவர் கைது. காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இது குறித்து விபரம் காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து கற்பக விநாயகர் நகரை சேர்ந்தவர் மாங்குடி (வயது 50). சங்கராபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மற்றும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவராகவும் உள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இவரது மனைவி தேவி போட்டியிட்டு
தேர்தல் வெற்றி குறித்து இவர்களுக்கும், எதிர்த்தரப்பினருக்கும் இடையே வெற்றி முடிவு குறித்து ஏற்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையில் வியழன் காலை 6.30 மணி அளவில் மாங்குடி வீட்டில் இருந்தபோது தமிழ் தேச மக்கள் கட்சி என்ற அமைப்பில் இருந்து வருவதாகக் கூறி தமிழ்குமரன் (வயது40) என்பவர் அவரது வீட்டுக்கு வந்தார். அவர் மாங்குடியிடம், எங்களது கட்சி புத்தகத்தை உங்களுக்குக் கொடுத்து நன்கொடை பெற வந்ததாக தெரிவித்ததையடுத்து அவரை வீட்டின் வரவேற்பு அறைக்கு மாங்குடி கூட்டிச் சென்றுள்ளார். பின் நன்கொடை குறித்த விபரம் மாங்குடி கேட்டபோது, “நான் அதற்காக வரவில்லை, எங்களது கட்சியை நடத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது. அதற்காக நீங்கள் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும்” என கூறியதாகவும் இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்.
பின்னர் தமிழ்குமரன் என்பவர் தான் கொண்டு வந்த பையிலிருந்து ஒரு பைப் வெடிகுண்டு, ஒரு நாட்டு வெடிகுண்டு, இரண்டு கத்திகள், ஒரு சுத்தியல் ஆகியவற்றை எடுத்துக் காண்பித்து, “உடனடியாக ரூ.ஒரு கோடி ரூபாய் தரவேண்டும். இல்லையென்றால் உள்ளாட்சிச் தேர்தல் சம்பந்தமாக இருக்கும் அரசியல் முன்விரோதத்தை வைத்துக் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டியதாகவும் தெரிகிறது. அதோடு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்ததும் நாங்கள் தான் என்று வந்தவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதில் அதிர்ச்சியடைந்த மாங்குடி, பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக அவரிடம் கூறி விட்டு வெளியே வந்து தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவலை தெரிவித்து வரவழைத்தார். அவர்கள் வந்ததும் மாங்குடி உள்ளிட்டோர் சேர்ந்து, அங்கிருந்த தமிழ்குமரனைப் பிடித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்குவந்த காரைக்குடி வடக்கு காவல்துறை ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் மற்றும் காவலர்கள் தமிழ்குமரனைக் கைது செய்து அவரிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின் அவரை காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்று விசாரணை நடத்தியதில் பிடிபட்ட நபர் கல்லலைச் சேர்ந்தவராம்
இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ரோகித்நாதன், கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், சிவகங்கை துணை கண்காணிப்பாளர் வரதராஜன், காரைக்குடி துணை கண்காணிப்பாளர் அருண் மற்றும் உளவுப்பிரிவு, கியூ பிரிவு காவல்துறையினரும் வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். தமிழ்குமரன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை சிவகங்கை வெடிகுண்டுத் தடுப்பு பிரிவு நிபுணர்கள் குழு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் தமிழக சட்டமன்றக்குழு காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, மாங்குடியைச் சந்தித்து விவரம் கேட்டறிந்ததாகவும் தகவல்
இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடக்கிறது காங்கிரஸ் கட்சியின் முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுகளுடன் புகுந்து சிக்கியவரால் காரைக்குடி பகுதியில் மக்களிடம் ஒரு பரபரப்பு காணப்பட்டது.
கருத்துகள்