முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சங்கராபுரம் முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் மாங்குடி வீட்டில் ஆயுதங்களுடன் மர்மநபர் கைது







சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சங்கராபுரம் முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர்  மாங்குடி   என்பவர் பெர்மாங்கனேட் காலனிப் பகுதியில் வசிக்கிறார் அவர் வீட்டுக்கு பைப் வெடிகுண்டு மற்றும் கத்தி ஆயுதங்களுடன் வந்து பணம் கோடி கேட்டு மிரட்டியவர் கைது. காவல்துறை  தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இது குறித்து விபரம் காவல்துறை  தரப்பில் கூறப்படுவதாவது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து  கற்பக விநாயகர் நகரை சேர்ந்தவர் மாங்குடி (வயது 50). சங்கராபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மற்றும்  சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவராகவும்  உள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இவரது மனைவி தேவி போட்டியிட்டு

தேர்தல் வெற்றி குறித்து இவர்களுக்கும், எதிர்த்தரப்பினருக்கும் இடையே வெற்றி முடிவு குறித்து ஏற்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையில் வியழன் காலை 6.30 மணி அளவில் மாங்குடி வீட்டில் இருந்தபோது தமிழ் தேச மக்கள் கட்சி என்ற அமைப்பில் இருந்து வருவதாகக் கூறி தமிழ்குமரன் (வயது40) என்பவர் அவரது வீட்டுக்கு வந்தார். அவர் மாங்குடியிடம், எங்களது கட்சி புத்தகத்தை உங்களுக்குக் கொடுத்து நன்கொடை பெற வந்ததாக தெரிவித்ததையடுத்து அவரை வீட்டின் வரவேற்பு அறைக்கு மாங்குடி கூட்டிச் சென்றுள்ளார். பின் நன்கொடை குறித்த விபரம்  மாங்குடி கேட்டபோது, “நான் அதற்காக வரவில்லை, எங்களது கட்சியை நடத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது. அதற்காக நீங்கள் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும்” என கூறியதாகவும் இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்.

பின்னர் தமிழ்குமரன் என்பவர் தான் கொண்டு வந்த பையிலிருந்து ஒரு பைப் வெடிகுண்டு, ஒரு நாட்டு வெடிகுண்டு, இரண்டு கத்திகள், ஒரு சுத்தியல் ஆகியவற்றை எடுத்துக் காண்பித்து, “உடனடியாக ரூ.ஒரு கோடி ரூபாய் தரவேண்டும். இல்லையென்றால் உள்ளாட்சிச் தேர்தல் சம்பந்தமாக இருக்கும் அரசியல் முன்விரோதத்தை வைத்துக் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டியதாகவும் தெரிகிறது. அதோடு முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  ப.சிதம்பரத்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்ததும் நாங்கள் தான் என்று வந்தவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதில் அதிர்ச்சியடைந்த மாங்குடி, பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக அவரிடம் கூறி விட்டு வெளியே வந்து தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவலை தெரிவித்து வரவழைத்தார். அவர்கள் வந்ததும் மாங்குடி உள்ளிட்டோர் சேர்ந்து, அங்கிருந்த தமிழ்குமரனைப் பிடித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

அங்குவந்த காரைக்குடி வடக்கு காவல்துறை  ஆய்வாளர்  சுந்தரமகாலிங்கம் மற்றும் காவலர்கள்   தமிழ்குமரனைக் கைது செய்து அவரிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின் அவரை காவல்  நிலையத்திற்கு  கூட்டிச் சென்று விசாரணை நடத்தியதில் பிடிபட்ட நபர் கல்லலைச் சேர்ந்தவராம்

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்  ரோகித்நாதன், கூடுதல் கண்காணிப்பாளர்  ராஜேந்திரன், சிவகங்கை துணை கண்காணிப்பாளர்  வரதராஜன், காரைக்குடி துணை கண்காணிப்பாளர்  அருண் மற்றும் உளவுப்பிரிவு, கியூ பிரிவு காவல்துறையினரும் வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். தமிழ்குமரன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை சிவகங்கை வெடிகுண்டுத் தடுப்பு பிரிவு நிபுணர்கள் குழு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் தமிழக சட்டமன்றக்குழு காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, மாங்குடியைச் சந்தித்து விவரம் கேட்டறிந்ததாகவும் தகவல் 

இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடக்கிறது காங்கிரஸ் கட்சியின் முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர்  வீட்டில் பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுகளுடன் புகுந்து சிக்கியவரால் காரைக்குடி பகுதியில் மக்களிடம் ஒரு பரபரப்பு காணப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த