முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சங்கராபுரம் முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் மாங்குடி வீட்டில் ஆயுதங்களுடன் மர்மநபர் கைது







சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சங்கராபுரம் முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர்  மாங்குடி   என்பவர் பெர்மாங்கனேட் காலனிப் பகுதியில் வசிக்கிறார் அவர் வீட்டுக்கு பைப் வெடிகுண்டு மற்றும் கத்தி ஆயுதங்களுடன் வந்து பணம் கோடி கேட்டு மிரட்டியவர் கைது. காவல்துறை  தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இது குறித்து விபரம் காவல்துறை  தரப்பில் கூறப்படுவதாவது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து  கற்பக விநாயகர் நகரை சேர்ந்தவர் மாங்குடி (வயது 50). சங்கராபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மற்றும்  சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவராகவும்  உள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இவரது மனைவி தேவி போட்டியிட்டு

தேர்தல் வெற்றி குறித்து இவர்களுக்கும், எதிர்த்தரப்பினருக்கும் இடையே வெற்றி முடிவு குறித்து ஏற்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையில் வியழன் காலை 6.30 மணி அளவில் மாங்குடி வீட்டில் இருந்தபோது தமிழ் தேச மக்கள் கட்சி என்ற அமைப்பில் இருந்து வருவதாகக் கூறி தமிழ்குமரன் (வயது40) என்பவர் அவரது வீட்டுக்கு வந்தார். அவர் மாங்குடியிடம், எங்களது கட்சி புத்தகத்தை உங்களுக்குக் கொடுத்து நன்கொடை பெற வந்ததாக தெரிவித்ததையடுத்து அவரை வீட்டின் வரவேற்பு அறைக்கு மாங்குடி கூட்டிச் சென்றுள்ளார். பின் நன்கொடை குறித்த விபரம்  மாங்குடி கேட்டபோது, “நான் அதற்காக வரவில்லை, எங்களது கட்சியை நடத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது. அதற்காக நீங்கள் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும்” என கூறியதாகவும் இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்.

பின்னர் தமிழ்குமரன் என்பவர் தான் கொண்டு வந்த பையிலிருந்து ஒரு பைப் வெடிகுண்டு, ஒரு நாட்டு வெடிகுண்டு, இரண்டு கத்திகள், ஒரு சுத்தியல் ஆகியவற்றை எடுத்துக் காண்பித்து, “உடனடியாக ரூ.ஒரு கோடி ரூபாய் தரவேண்டும். இல்லையென்றால் உள்ளாட்சிச் தேர்தல் சம்பந்தமாக இருக்கும் அரசியல் முன்விரோதத்தை வைத்துக் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டியதாகவும் தெரிகிறது. அதோடு முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  ப.சிதம்பரத்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்ததும் நாங்கள் தான் என்று வந்தவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதில் அதிர்ச்சியடைந்த மாங்குடி, பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக அவரிடம் கூறி விட்டு வெளியே வந்து தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவலை தெரிவித்து வரவழைத்தார். அவர்கள் வந்ததும் மாங்குடி உள்ளிட்டோர் சேர்ந்து, அங்கிருந்த தமிழ்குமரனைப் பிடித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

அங்குவந்த காரைக்குடி வடக்கு காவல்துறை  ஆய்வாளர்  சுந்தரமகாலிங்கம் மற்றும் காவலர்கள்   தமிழ்குமரனைக் கைது செய்து அவரிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின் அவரை காவல்  நிலையத்திற்கு  கூட்டிச் சென்று விசாரணை நடத்தியதில் பிடிபட்ட நபர் கல்லலைச் சேர்ந்தவராம்

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்  ரோகித்நாதன், கூடுதல் கண்காணிப்பாளர்  ராஜேந்திரன், சிவகங்கை துணை கண்காணிப்பாளர்  வரதராஜன், காரைக்குடி துணை கண்காணிப்பாளர்  அருண் மற்றும் உளவுப்பிரிவு, கியூ பிரிவு காவல்துறையினரும் வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். தமிழ்குமரன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை சிவகங்கை வெடிகுண்டுத் தடுப்பு பிரிவு நிபுணர்கள் குழு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் தமிழக சட்டமன்றக்குழு காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, மாங்குடியைச் சந்தித்து விவரம் கேட்டறிந்ததாகவும் தகவல் 

இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடக்கிறது காங்கிரஸ் கட்சியின் முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர்  வீட்டில் பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுகளுடன் புகுந்து சிக்கியவரால் காரைக்குடி பகுதியில் மக்களிடம் ஒரு பரபரப்பு காணப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...