“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று” இந்தப்பாடலை எழுதியதால் இவர் ஒரு வேதியராகவோ, அந்தணராகவோ இருக்க வாய்ப்புகள் இல்லை ..வள்ளுவர் மனைவி வாசுகி என்பதால் அவர் காவி உடுத்தும் துறவிகள் வழியும் அல்லர்.பிறகு என்ன குழப்பம் தற்போதய நிலையில் உரிமை கோரப்படாத வரலாற்றுக்குப் பலரும் சொந்தம் கொண்டாடுவதால் இப்போது வரலாறு ஒரு பாடமாக அடிப்படையில் இல்லாமல் இருப்பதால் பலரும் மாறுவதால் கடை ஊழியருக்குக் கூட கலெக்டர் என போட்டுக்கொள்ள ஆசை வருவது தான் இந்த நிகழ்வு.தமிழ்ப் புலவர் திருவள்ளுவர் கடைச் சங்க காலமான பொ ஆ .400 க்கும் பொ ஆ 100 க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவர். மாமூலனார் மற்றும் மதுரையின் பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆண்ட காலத்தில் வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.திருவள்ளுவரின் அடையாளத்தை மாற்றி சிறுமைப்படுத்தக் கூடாதென பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் டுவிட்டர் பதிவு
1.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படியான எட்டாம் வகுப்பு இந்தி பாடநூலில் திருவள்ளுவரை தலையில் குடுமி வைத்து பூனூல் அணிந்தவராக அடையாளப்படுத்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை ஒரு தரப்புக்கு சொந்தமானவராக சிறுமைப்படுத்தக்கூடாது உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டாம். இப்படி கூறிய வள்ளுவரை அதற்கு எதிராக சித்தரிப்பது குரூரமானது
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சர்ச்சையான வகையில், காவி உடையுடன் புரோகிதர் ஒருவர் போல் திருவள்ளுவரின் படம் இடம்பெற்றுள்ளது. திருவள்ளுவர் உண்மையில் இப்படித்தான் இருந்திருப்பாரா என்பதும் உதாரணமாக அவர் எழுதிய குறளையே தருகிறேன்..
"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்".
அதாவது, உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டாம் என்கிறார்.
மேலும், "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா" என்கிற குறளில், மயிர் நீப்பை மானம் இழப்பிற்கு இணையாக சொல்கிறார்..
இது ஆதியில் தமிழர்களிடையே மயிரை வழித்துக் கொள்ளும் வழக்கம் இருந்ததில்லை.தமிழ் மன்னர் அணயவரும் ஜாடாமுடி கொண்ட மன்னர்கள் தான் இந்த வழக்கம் இடையில் வந்தது.
இப்படிக் குறள் எழுதிய வள்ளுவர்தான், மொட்டையடித்து, பின்பக்கம் வால் போல, அந்தணர் சிகை அலங்காரம் வைத்துக் கொண்டாரா..?
வளத்தை சுரண்டுவதோடு நிறுத்திக் கொள்வது ஒருவழி வரலாற்றுச் சுரண்டல் மற்றொரு வழியா.தெரியாத குழப்பம்.ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியை ஜாதி உரிமை கோறும் நபர்கள் உண்டு, அப்படி வந்த மரபு வா.உ சி க்கும்.கு.காமராசர்.உ.முத்துராமலிங்கத்தேவர்,என பட்டியல் வெகு நீளம் அதில் பதிதாக வந்தவர் பொல்லான் இப்படி அரசியல் நடக்கிறது. நாமும் வேறு எதாவது உண்டா என பல ஜாதிகளில் இப்போது ஒரு எழுட்சி வரக் காரணம். வரலாறு இல்லாதவர்களுககு எதாவது வேண்டும் தானே அதை பலர் அரசியலுக்காக கண்டும் காணாமல் இருக்கும் நிலை.
கருத்துகள்