சென்னை விமான நிலையத்தில் 1.35 கிலோ தங்கம் பறிமுதல் : ஒருவர் கைத
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.35 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு ரூ. 62.35 லட்சம்.
உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் துபாயிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்த சென்னையைச் சேர்ந்த அபுபக்கர் 49 என்பவரை சுங்க அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர்.
அவரது சாக்ஸில் இருந்து 4 பிளாஸ்டிக் பைகளில் தங்கப் பசையும், கால் முட்டியில் அணியும் உறையிலிருந்து 2 பிளாஸ்டிக் பைகளில் தங்கப் பசையும் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் 6 பிளாஸ்டிக் பைகளில் இருந்து 1.52 கிலோ தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றிலிருந்து 24 கேரட் தங்கம் 1.35 கிலோ பிரித்தெடுக்கப்பட்டது.
இவற்றின் மதிப்பு ரூ.62.35 லட்சம். இதை கடத்தி வந்த அபுபக்கர் என்ற பயணி கைது செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடப்பதாக சென்னை சர்வதே விமான நிலைய சுங்க ஆணையர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்