இந்தியக் கடல் பகுதியில் போதைப் பொருள் கடத்தல்: இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது
இந்தியக் கடல் பகுதி வழியாக, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
உளவுத் தகவல் அடிப்படையில், இந்திய கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படையினரும், போதைப்பொருள் கட்டுப்பாடு பிரிவினரும் இடைமறித்து கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு கடந்த 8-ம் தேதி கொண்டு வந்தனர்.
படகை சோதனை செய்தபோது எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து அந்த படகில் வந்த 6 இலங்கை மீனவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, சர்வதேச கடல் எல்லை பகுதியில், பாகிஸ்தான் மீன்பிடி படகில் இருந்து 100 கிலோ ஹஷிஸ், 150 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதை மாத்திரைகள் வாங்கியதை ஒப்புக் கொண்டனர். இலங்கைக்கு திரும்பும் வழியில், இந்திய கடலோர காவல் படை கப்பலை பார்த்ததால், 5 கட்டுகளில் இருந்த 250 பாக்கெட் போதை பொருட்களை கடலில் தூக்கி எறிந்ததாக ஒப்புக் கொண்டனர்.
சேகரிக்கப்பட்ட சில பொருட்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இலங்கை மீனவர்கள் குரேரா, பெர்ணாண்டோ, தேசப்பியா, ஜெயதிசா, சாதுருவன், அருணாகுமார் ஆகியோர் இந்திய கடல் பகுதியில் போதைப் பொருள் கடத்தியதற்காக போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது மேலும் 4.6 கிலோ சாரஸ் போதைப் பொருள் பறிமுதல்: ஒருவர் கைது
சென்னையில் 4.6 கிலோ சாரஸ் என்ற போதைப் பொருளை, சென்னை மண்டல போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் பறிமுதல் செய்து, கொல்கத்தாவை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்தனர்.
உளவுத்துறையின் தகவல் அடிப்படையில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அராமெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பார்சல் அலுவலகத்தில் ஒரு அட்டை பெட்டியை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதில் இருந்த 22 பொம்மைகளில், 4.6 கிலோ சாரஸ் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது கஞ்சா செடியின் பிசினிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருளாகும்.
இந்த அட்டைப் பெட்டி மேற்கு வங்கத்திலிருந்து கத்தார் நாட்டுக்கு அனுப்பப்பட இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் தொடர்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார் என சென்னை மண்டல போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்