மேற்கு வங்க
முதல்வர் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக மீண்டும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட இருக்கிறார். மம்தா பானர்ஜி தீவிரமாக பிரசாரமும் செய்து வருகிறார். நேற்றுப் பிரசாரத்தில் மம்தா பானர்ஜி தாக்குதலுக்கு உள்ளாளார்.
பிருளியா பஜார் அருகே கோவில் ஒன்றில் மம்தா பானர்ஜி வழிபாடு நடத்தி வெளியே வந்தவர் தனது காருக்கு அருகே நின்று செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். மாலை 6.28 மணி அளவில் காரின் முன் கதவு திறந்து இருந்தது.
திறக்கப்பட்ட கதவுக்கு அருகே நின்று மம்தா பானர்ஜி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வேகமாக அவரை நோக்கி ஓடி வந்த நான்கு பேர் காரின் கதவை அடித்து சாத்தினார்கள்.இதனால் அங்கே நின்று கொண்டு இருந்த மம்தா பானர்ஜி அப்படியே கீழே விழுந்த மம்தா பானர்ஜி காலில் அடிபட்டததையடுத்து மம்தா உடன் காலில் கட்டு போடப்பட்டு, உதவியாளர்களின் உதவியோடு தூக்கிச் செல்லப்பட்டார். காரில் ஏறும்போதே வலியில் துடித்தார்.
எனக்கு வலிக்கிறது.. என் கால் வீங்கிவிட்டது.. எனக்கு படபடப்பாக இருக்கிறது. என்னை கொஞ்சம் தனியாக விடுங்கள் என்று மம்தா பானர்ஜி மிகவும் உருக்கமாக குறிப்பிட்டபடி காரில் ஏறினார். இதையடுத்து எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு எமர்ஜென்சி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.இவருக்கு காலில் காயமும் உடலில் சிராய்ப்பும் ஏற்பட்டுள்ளது. எலும்பு முறிவு ஏற்படவில்லை..இதுகுறித்து பேசிய மம்தா இது திட்டமிட்ட தாக்குதல். வேண்டுமென்றே என் பிரசாரத்தை நிறுத்த வேண்டும் என இப்படிச் செய்கிறார்கள். காவலர் அருகில் இல்லாததைப் பயன்படுத்தி, கோவிலுக்குச் சென்று வந்த என்னை தாக்கி உள்ளனர்.
கூட்டத்திலிருந்து வெளியே வந்த நான்கு பேர் என்னைத் தாக்கி உள்ளனர், என்று கூறியுள்ளார். ஆளும் முதல்வர் இப்படி தாக்குதலுக்கு உள்ளானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மம்தா தீவிரக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்