இரணியூர் கோவிலில் எட்டு சிலைகள் மாயமானது குறித்து சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரணியூர் கோவிலில் எட்டு சிலைகள் மாயமானது குறித்து சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மன்னர்களால் இக்கற்சிற்பக் கோவில்கள் கட்டப்பட்டு. பின் மகுட தனவைசியர் எனும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் ஒரு பிரிவினரான திருவேட்பூருடையார் என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டகோவிலைச் சுற்றிலும் பாண்டிய மன்னர் கால சிற்பக் கல்வெட்டுகள் உள்ளன. ஹிரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் ஹிரணியன் மார்பை கீறி வழுந்தோர் வேகம் மாற ஹிரணியூர் ஈசனை வணங்கினான். இங்கே நாராயணன் நரசிம்மன் உருக்கொண்டு ஹிரணியனை அழித்தபின் அடங்காத உக்கிரம் கொண்டு விளங்கியதால் அவரை ஆட்கொண்ட சிவனையும் சேர்த்து இரணியூர் ஈசன் ஆட்கொண்ட நாதராக அழைக்கப்படுகிறார்.அதிகமான சிற்பங்கள் அமைந்திருப்பதால் இவ்லயத்தினை சிற்பக் கோயில் என்றும் அழைக்கின்றார்கள்.ஆலையத் தூண்களில் அஷ்டலட்சுமி, வல்லப கணபதி, வீரபத்திரர், முப்புரம் எரித்தவர், நவதுர்க்கை, இரணிய சம்ஹாரம் போன்ற சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
மூலவர் ஆட்கொண்ட நாதர் எனவும், அம்பிகை சிவபுரந்த தேவி எனவும் அழைக்கப்படுகிறார். ஆலயத்திற்கு சிவாகமப் படி பூசைகள் செய்யப்படுகின்றன. தலவிருட்சமாக வில்வ மரம் அமைந்துள்ளது. கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி, திருவாதிரை, கார்த்திகை மற்றும் சிவராத்திரி போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.
ஸ்தல வரலாறாக
திருமால் இரணியன் எனும் அசுரனை அழிக்க நரசிம்மர் அவதாரத்தினை எடுத்தார். அந்த அவதாரத்தில் மனித உடலும், சிங்க தலையையும் கொண்டிருந்தார். இரணியனை கூரிய நகங்களால் கிழித்து அழித்தார். மிகவும் உக்கிரமாக இருந்த காரணத்தால் பிரகலநாதன் அவரை பாடல்கள் பாடி குளிர்வித்தான். இரணியனைக் கொன்ற பாவத்திற்காக இத்தலத்தில் சிவபெருமானை நரசிம்மர் வழிபட்டார். திருமாலின் உக்கிரம் கண்டு அம்பிகையும் உக்கிரமடைந்தார். அதனால் நவகாளியாக வெளிபட்டு சிவனை வணங்கினார் சிவனை வழிபட்டு சாந்தம் அடைந்தமையால் சிவபுரந்த தேவி என்று அழைக்கப்படுகிறார்.
பாண்டிய மன்னர்கள் கட்டிய பின்னர் நகரத்தாரின் பராமரிப்புக்கு வழங்கிய 9 கோயில்களில் ஒன்றாக இரணியூர் ஆட்கொண்டநாதர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் 1941 முதல் 1944-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் புதுப்பித்துக் கட்டினர்.
தற்போது இக்கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் செயல் அலுவலர் உள்ளார்.
இந்நிலையில் அவர் 1948-ம் ஆண்டு இரணியூர் கோயில் பதிவேடுகளை ஆய்வு செய்தபோது, சோமஸ்கந்தர் , ஸ்கந்தர் , பிரியாவிடை அம்மன் , தனி அம்மாள் , ஞானசம்பந்தர் , சுந்திர மூர்த்தி , நித்திய உற்சவ சுவாமி , மற்றும் நித்திய உற்சவ அம்பாள் ஆகிய 8 பழமையான சிலைகளைக் காணாதது தெரியவந்ததையடுத்து அவர் சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார். அதன்படி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்