முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செங்கல்பட்டில் உடனே தடுப்பூசி உற்பத்தியைத் துவங்க தமிழக முதல்வர் நேரில் ஆய்வு

செங்கல்பட்டில் உடனே தடுப்பூசி உற்பத்தியைத் துவங்க நேரில் ஆய்வு





நடத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு HLL Biotech நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கிடும் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

 தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று (25 மே 2021) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் HLL Biotech நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை நேரில் ஆய்வு செய்தார்.

 கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தியை உடனடியாகத் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேவைப்படும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

​மேலும், மத்திய அரசின் நிறுவனமான HLL Biotech நிறுவனத்திற்கு உற்பத்தியை தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், HLL Biotech நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் விஜயன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

"தமிழ்நாட்டில் நன்மையின் ஒளியை தற்போது ஏற்றியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்" -தடுப்பூசி உற்பத்தியைத் தடை செய்து, சுகாதாரத்துறையை சூறையாடி, 

இன அழிப்புக்கு, முக்கியக் காரணமானவர் யார்.என்பதை நாம் அறிவோம் அதை

அம்பலப்படுத்திய, "பிசினஸ்  ஸ்டேண்டர்டு" ஆங்கில ஏடு.

இந்தக் கொரோனா காலத்தில், இத்தனை மரணங்கள். அதிலும் இளம் வயது மரணங்கள், பொதுவாக, மக்களை அதிகமாகவே பாதித்திருக்கிறது.

இன்று இத்தனை மரணங்களுக்கும், முக்கிய காரணமானவர், மருத்துவம் படித்த, முன்னால் மத்திய சுகாதார மந்திரி,  என்றால், அது உண்மை தானா.என்று பலருக்கு ஆச்சரியம் 

2004 முதல் 2009 வரை உள்ள ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்த கட்சி,, சுகாதாரத் துறையில், மந்திரியாக இருந்த போது, பில்கேட்ஸ்சை சந்தித்த பிறகு, அவரின் ஆலோசனையின் அடிப்படையில், , அழிக்கப்பட்டதாக மக்கள் பேசும் இமாச்சல் பிரதேசத்திலுள்ள "சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் குன்னூரில்‌ உள்ள பாஸ்டா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா", ஆகிய, பொதுத்துறை நிறுவனங்கள், இன்று, செயல்படாமல் போனதன் விளைவு தான், இவ்வளவு இறப்புகளுக்கும், பாதிப்புகளுக்கும், காரணம்.

கடந்த, மே மாதம் 8 ஆம் தேதி,மதுரை கிளை சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல  வழக்கு பதிய, "பெட்டிஷன்" போடப்பட்டது.

அதில், எப்படி பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களை அழித்தார்கள் என்றும், அதனால் இன்று மக்கள் படும் அவதிகளுக்கும்,

மரணங்களுக்கும் காரணம் என்று, எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

எப்படி, தனியார் நிறுவனங்கள், மத்திய அரசு சுகாதாத்துறையினுல், நுழைந்தது என்பதையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, மனுவில், தெளிவாக, குறிப்பட்டுள்ளதாம்.

 மூடப்பட்ட அல்லது முடக்கப்பட்ட,

பொதுத்துறை நிறுவனங்கள், 

பல கோடி குழந்தைகளை, பி.ஸி.ஜி தடுப்பூசியின் மூலம் காப்பாற்றி இருக்கிறது.

அதே போல "கிங் இன்ஸ்டியூட்", மற்றும் "பாஸ்டர்", நிறுவனங்களின் தடுப்பூசிகள், வெறிநாய் கடி நோயிலிருந்து, பல லட்சக்கணக்கானோர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது.

இந்த, மத்திய அரசின் தடுப்பூசி நிறுவனங்கள், தரமற்றவை என்று, தன் பதில் மனுவில் தெரிவித்துள்ள நிலையில்

சொந்த மக்களின் தேவைக்குதான், தடுப்பூசியே  தவிர, ஏற்றுமதி, இறக்குமதிக்கல்ல.

மேற்க் கண்ட, பொதுத்துறை நிறுவனங்களை செயல்படாமல் செய்துவிட்டு,  சுகாதாரத்துறையால், இறக்குமதி செய்த, பி.ஸி.ஜி தடுப்பூசியால், நூற்றுக்கணக்கான குழந்தைகள், பாதிக்கப்பட்டார்கள் என்பது மறைக்கப்பட்ட செய்தி.(அது வெளியே வராமல் அப்போது தடுக்கப்பட்டதாக பேச்சுண்டு)

2007 முதல் 2008 வரை "பாஸ்டர்" நிறுவனத்தை புதுப்பிக்க, 330 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில்,  அதை பெறவிடாமல் தடுத்து, அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்குச் சம்பளமே கிடைக்காமல், அப்போது வேலை நிறுத்தம் நடைபெற்று, 

அந்த நிறுவனம், முடக்கப்பட்டது அல்லது மூடப்பட்டது, யார் காலத்தில் என்பதை மக்கள் நன்கறிவார்கள்.

"ஆதார் பூனாவாலா" என்பவர், இந்தியாவின் மொத்த அரசியல்வாதிகளின் ஊழல் பணத்தை, நிர்வகிக்கும்,  ஒரு நபர்...?

அந்த நபரால் தான், ஓரு ரூபாய் கூட தாயாரிப்புக்கு செலவாகாத, சரியாக நிரூபிக்கப்படாத, தடுப்பூசி, இன்று, "ஆயிரம்" ரூபாய்க்கு, விற்க்கப்படுவது குறித்து விவாதம் நடந்தது* 

அப்படிப்பட்டவர்களுக்காகத்தான்,  மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அன்று முடக்கப்பட்டு, அல்லது மூடப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு, வரவேற்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இன்று, நாட்டின், இத்தனையாயிரம் மரண ஓலங்களுக்கும்,  நாட்டின் இன அழிப்புக்கும், முக்கிய, காரணகர்த்தா, சமூக நீதி காவலர் என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக்கொண்டவரின்  வாரிசு தான், என்பது, தெளிவாகிறது.      சென்னை கிண்டியிலுள்ள பி.சி.ஜி லேபராட்டரியானது குழந்தைகளுக்கான டி.பி எனப்படும் காச நோய்க் கிருமியால் ஏற்படும் முளைக்காய்ச்சல் நோயை தடுக்க பி.சி.ஜி என்ற தடுப்பு மருந்தை தயாரிக்கும் இந்தியாவின் ஒரே ஏகபோக நிறுவனமாக திகழ்ந்த பெருமைக்குரியது. அதுவும் ஆண்டுக்கு 80 மில்லியன் டோசஸ் தயாரிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த நிறுவனமாக திகழ்ந்தது! மேலும் சிறுநீரகப்பை புற்று நோய்க்கு மருந்தாக பயன்படும் வீரியமிக்க பி.சி.ஜி மருந்தும் இங்கு தயாரானது நீலகிரி மாவட்டத்தில்

குன்னூரில் இயங்கிய பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ‘டெட்னஸ் டாக்சிட்’ என்ற மிக அவசியமான மருந்தை ஆண்டுக்கு 180 மில்லியன் டோசஸ் தயாரித்து வந்தது. பாஸ்டர் இன்ஸ்டிடிய்யூட்டும் போல ஹிமாச்சலில் உள்ள சி.ஆர்.ஐயும் இந்தியாவின் பெரும்பானமை மக்களுக்கான பல மில்லியன் டோசஸ் DPT என்ற முத்தடுப்பு மருந்துகளை தயாரித்து வந்தன! தென் கிழக்கு ஆசியாவிலேயே மஞ்சள் காமாலைக்கு சிறப்பு மருந்து தயாரித்ததும் இந்த நிறுவனம் தான்!

மொத்தத்தில் diphtheria, pertussis, tatanas, poliomyelitis, typhoid மற்றும் குழந்தைகளுக்கு வரும் காச நோய்க்கான மருந்து, நாய்க்கடிகான ஆண்டி ராபிஸ் வாசின், பாம்புக்கடிக்கான மருந்து.. இப்படி நிறைய அத்தியாவசியமானவற்றை தயாரித்து மக்களுக்கு மிகக் குறைந்த விலைக்கும் ,இலவசமாகவும் தந்த நிறுவனங்களே இந்த மூன்றும்! குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் புதிதாக இந்தியாவில் பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளின் நலனுக்கு மட்டுமல்ல, குழந்தை பிறப்புக்கு முன்பு அவற்றின் கர்பிணித் தாய்மார்களுக்கும் இந்த நிறுவனங்களே ஆபத்பாந்தனாக அன்று திகழ்ந்தன.

இத்தகைய அரிய சேவைகளை செய்யும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தந்து அவற்றை வளர்த்தெடுக்கும் பொறுப்புக்கானது தான் சுகாதார அமைச்சர் பதவி என்ற தார்மீக உணர்வு அவருக்கு சிறிதளவாவது இருந்திருந்தால் 2004 ஆம் ஆண்டிலிருந்தே அவற்றுக்கு போதுமான நிதியை ஒதுக்கி வசதிகளை மேம்படுத்தி இருக்க வேண்டும். அல்லது அவற்றை வேறொரு இடத்தில்  நவீன வசதிகளுடன் செயல்படத்தக்க வகையில் புதிய கட்டுமானத்தை உருவாக்கிவிட்டு, அவற்றை இடமாற்றம் செய்திருக்க வேண்டும். அது வரையிலும் அவற்றை தடையின்றி செயல்பட அனுமதித்திருக்க வேண்டும். அவ்விதமாகச் செய்யாமல், அதன் உரிமங்களை ரத்து செய்தது பஞ்சமா பாதகம்! அப்படி உரிமத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என அப்போதே இந்தியாவின் புகழ்பெற்ற அறிவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்துக் கூறியுள்ளனர். முடக்கப்பட்ட இந்தப் பொதுத் துறை நிறுவனங்கள் மிக லாபகரமாகவும் இயங்கியவையாகும்..

இது குறித்து அப்போதே ‘பிரண்ட் லைன்’ ஆங்கில ஏடு 11 ஏப்ரல் 2008 ல்  சிறப்பான கட்டுரை எழுதியது.அத்துடன் இப்படி இந்த மூன்று நிறுவனங்கள் முடக்கப்பட்டதால் அடுத்தடுத்த ஆண்டுகளில் நாட்டில் தரமான தடுப்பூசிகளின்றி பற்றாகுறைகளும்,பச்சிளங் குழந்தைகள் மரணங்களும் நிகழ்ந்தன. இப்படி தடை செய்யப்பட்ட ஆண்டே திருவள்ளூர் அருகே தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட மூன்று குழந்தைகள் மரணித்தன. கடந்த 13 ஆண்டுகளாக இப்படி கணக்கில்லாமல் உயிரிழந்த குழந்தைகள் எத்தனை எத்தனையோ…? தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட கர்ப்பிணிகள் எத்தனையோ…? தனியார் துறையில் அனைத்தையும் கொள்முதல் செய்வதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் எவ்வளவோ…? தற்போது தமிழக முதல்வர் மூலம் ஒரு விடியல் செங்கற்பட்டில் திருக்கழுக்குன்றத்திலிருந்து துவங்கி இருக்கும் நிலையில் நாம் வரவேற்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...