தமிழ்நாட்டில் ஜூலை 19 ஆம் தேதியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
கொரோனா பரவலால், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில்லாமல் மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டதன் பரிந்துரைப்படி, 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மற்றும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்படுமென தமிழ்நாடு அரசு அறிவித்ததன்படி, மாவட்ட வாரியாக மாணவர்களுக்கான மதிப்பெண் நிர்ணயப் பணிகள் முடிந்துள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும், முந்தைய தேர்வு அடிப்படையிலான மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு, அரசுத் தேர்வு துறைக்கு அனுப்பப்பட்டதையடுத்து, மதிப்பெண் வழங்குவதற்கான முறைகள் குறித்து, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, அரசாணை வெளியிட்டது. முதன்மைச் செயலர் காகர்லா உஷா பிறப்பித்த அரசாணையில், மதிப்பெண்களை எப்படிக் கணக்கிடுவது என்ற விபரம் இடம் பெற்றுள்ளது. இந்த அரசாணை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில்.
19 ஆம் தேதி பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முடிவுகள் ஜூலை 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மதிப்பெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் முடிவுகளை அறியலாம் , www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge.tn.gov.in வழியாக முடிவுகளை அறியலாம்.
மதிப்பெண் பட்டியலை ஜூலை 22 ஆம் தேதி முதல், www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கருத்துகள்