தமிழ்நாட்டில் 33 பேரூராட்சிகள். நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் குன்றத்தூர், மாங்காடு, மாடம்பாக்கம், பெருங்களத்தூர், அவினாசி, பெருந்துறை, கருமத்தம்பட்டி உள்ளிட்ட 33 பேரூராட்சிகளை, நகராட்சிகளாகத் தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டதாகத் தகவல்கள் உள்ளது.
தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன், அதிக வருவாய் கொண்ட ஊர்களை நகராட்சிகளாக அறிவிக்கப்படும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 148 நகராட்சிகள் உள்ள நிலையில் ஒரு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டுமெனில் அந்தப் பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை வேண்டும். தமிழ்நாட்டில் 33 பேரூராட்சிகள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகையை பெற்றிருப்பதால் அந்த பேரூராட்சிகள் அனைத்தையும் நகராட்சிகளாக தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்
பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது குறித்த பட்டியல் வெளியானது. குன்றத்தூர், மாங்காடு, திருக்கழுக்குன்றம், கூடுவாஞ்சேரி, திருநீர்மலை, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர். பொன்னேரி.
வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர். சோழிங்கர். சங்ககிரி, தாரமங்கலம், இடங்கனசாலை. பள்ளப்பட்டி. பெருந்துறை-கருமாண்டி செல்லிபாளையம், திருமுருகன்பூண்டி, அவினாசி,கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை. கோத்தகிரி, அதிராமபட்டினம், உத்தமபாளையம்.
மானாமதுரை, திருச்செந்தூர், களக்காடு, பணகுடி, வடக்கு வள்ளியூர், கொள்ளங்கோடு ஆகிய 33 பேரூராட்சிகள், நகராட்சிகளாகத் தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது . 33 பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டால் ஒவ்வொரு மாவட்டத்திலும் நகராட்சிகளின் எண்ணிக்கை உயரும். அங்கு வளர்ச்சி பணிகள் அதிகரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகிறது.
கருத்துகள்