சொத்து குவிப்பு வழக்கில் சிக்கப்போகிறார் முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 2006 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை
வருமானத்திற்கு அதிகமாக தனது மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் அதிகமான சொத்துக்கள் வாங்கிக் குவித்த முன்னாள் முதல்வரும் அதன் பின்னர் துணை முதல்வரும் மற்றும் முன்னாள் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் மீது பல ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையில் 2017 ஆம் ஆண்டு அளித்த புகாரை விசாரித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தி 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்தப் புகார் மீது விரைவாக முதல் கட்ட விசாரணையை நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த புகார் விரைவில் விசாரிக்கப்படுமெனத் தெரிகிறது.சட்டம் தன் கடமையை செய்யும் போது தவறிழைத்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை வரும். ஓட்டக்கார தேவர் பன்னீர்செல்வம் எனும் ஓ. பன்னீர்செல்வம்
6 வது தமிழக முதலமைச்சர் 1996 ஆம் ஆண்டில் தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவர்
பெரியகுளம் நகராட்சி, (1996–2001) இவருக்கு விஜயலட்சுமி என்னும் மனைவியும், இரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்னும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவருக்கு ராஜா என்ற தம்பியும் உள்ளார். இவரது மூத்த மகன் இரவீந்திரநாத் குமார், 2019 ஆம் ஆண்டு முதல் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
கருத்துகள்