பாதுகாப்பு அமைச்சகம் ராணுவப் பணியாளர் (உத்தி) பிரிவு துணைத் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் குமார் சர்மா பொறுப்பேற்பு
ராணுவ பணியாளர்(உத்தி) பிரிவு துணைத் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் குமார் சர்மா பொறுப்பேற்கிறார். இவர் இந்தப் பொறுப்பை, ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங்கிடம் இருந்து பெறுகிறார்.
லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் குமார், இந்திய ராணுவத்தின் பல பிரிவுகளில் முக்கியப் பதவிகளில் இருந்துள்ளார். இந்த முக்கிய பொறுப்பை ஏற்கும் முன்பு அவர், ராணுவத்தின் உளவுப் பிரிவில் தலைமை இயக்குனராக இருந்தார்.
ராணுவத்தின் ராஜ்புதனா ரைபிள்ஸ் பிரிவில் கடந்த 1983ம் ஆண்டு, சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் குமார், பல படைப்பிரிவுகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.
கருத்துகள்