காவல்துறை உதவி ஆய்வாளர் மிரட்டுவதாக நடிகை ராதா மீண்டும் புகார்
காவல் நிலையத்தில் முன்பு எழுதிக் கொடுத்தபடி வசந்த ராஜா என்னுடன் சேர்ந்து வாழவில்லை. எஸ் ஐ வசந்தராஜா எழுதி கொடுத்த மன்னிப்புக் கடிதத்தையும் உதவி ஆய்வாளர்களான பாரதி, இளம்பரிதி ஆகிய இருவரும் மறைத்து விட்டதாக குற்றச்சாட்டும் தெரிவித்துள்ளார்.
குடும்ப முறைப்படி மதுரை மீனாட்சி சொக்கநாதர் படம் பொறித்த தாலியை கட்டிவிட்டு வாழ்வதாக கூறி இரண்டு வருடம் லிவிங் டூ ஹெதர் இருந்து விட்டு ஏமாற்றிய உதவி ஆய்வாளர் தற்போது கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை ராதா கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.
சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ராதா. இவரும் காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.
ராதாவுக்கு யாராவது செல்போனில் அழைப்பு விடுத்தாலோ அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பினாலோ சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்தும். பின்னர் வசந்த ராஜா நடிகை ராதாவை அடிக்கடி, அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் கண்ணகி நகரில் உள்ள குற்றவாளிகள் அனைவரும் தனக்கு தெரிந்தவர்களென்றும் 500 ரூபாய் கொடுத்தால் உன்னை தீர்த்துக்கட்டி விடுவார்கள் என்றும் கூறி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி செய்திருந்த
புகார் தொடர்பாக வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணை மாற்றப்பட்டு காவல்துறை விசாரணைக்கு அழைத்திருந்தனர். நடிகை ராதா மற்றும் உதவி ஆய்வாளர் வசந்த ராஜாவிடம் விசாரணை செய்த பெண் உதவி ஆய்வாளர் பாரதி, உதவி ஆய்வாளர் இளம்பரிதி ஆகியோர் வசந்த ராஜாவின் எதிர்காலம் பாழாகிவிடுமெனவும் இருவரின் நலன்கருதி சமாதானமாகி இணைந்து வாழுங்கள் என அறிவுரை கூறியதையடுத்து மனம் மாறி நடிகை ராதா கொடுத்த புகாரை வாபஸ் பெற்றதாகவும். ஆனால் காவல் நிலையத்தில் எழுதிங் கொடுத்தபடி வசந்த ராஜா என்னுடன் சேர்ந்து வாழவில்லை. காவல் நிலையத்தில் வசந்தராஜா எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதத்தையும் உதவி ஆய்வாளர்கள் பாரதி, இளம்பரிதி ஆகிய இருவரும் மறைத்து விட்டனர்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இதை அறிந்து கொண்ட நடிகை ராதா தான் மீண்டும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுபற்றி வசந்த ராஜாவிடம் கேட்டபோது, அவர் கொலை செய்து விடுவேன் என நடிகை ராதாவை மீண்டும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் நரேந்திரன் நாயரிடம் அலுவலகத்தில் நடிகை ராதா ஜூலை 2 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அதில் தன்னுடன் சேர்ந்து வாழ்வதாகக் கூறி ஏமாற்றிய உதவி ஆய்வாளர் வசந்தராஜா, அவருக்கு உடந்தையாக இருந்த உதவி ஆய்வாளர்கள் பாரதி இளம்பரிதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார்.
அவர்களை இதுதொடர்பாக வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்தனர். 11:30 மணியிலிருந்து சுமார் 2 30 மணி வரை மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர் மீண்டும் பாதிக்கப்பட்ட முழு விவரங்கள் புகாராக பெறப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை ராதா, தான் நம்பி ஏமாந்து விட்டதாகவும், வசந்த ராஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். தற்போது நிலையில் எஸ் ஐ வசந்த ராஜைவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். அதன் பின்னர் உண்மை நிலவரம் வெளிவரும்.
கருத்துகள்