முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொவிட் ஊரடங்கு காலத்தில் கல்வி இழப்பை குறைக்க, அரசு பல நடவடிக்கைகள் எடுத்தது: மாநிலங்களவையில் தகவல்

மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கொவிட் ஊரடங்கு காலத்தில் கல்வி இழப்பை குறைக்க, அரசு பல நடவடிக்கைகள் எடுத்தது: மாநிலங்களவையில் தகவல்








கொவிட் ஊரடங்கு  காலத்தில் மாணவர்களின் கல்வி இழப்பை குறைக்க அரசு பல திட்டங்களை உருவாக்கி அமல்படுத்தியதாக மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். 

மாநிலங்களவையில் அவர் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள்:

கொவிட் ஊரடங்கு காலத்தில், ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் வசதிகளை அளிக்க, தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக  பிரதமரின் இ-வித்யா என்ற விரிவான நடவடிக்கை கடந்த 2020ம் ஆண்டு மே 17ம் தேதி தொடங்கப்பட்டது. இது டிஜிட்டல்/ஆன்லைன்/ரேடியோ மற்றும் டி.வி வழியிலான கல்வி போன்றவற்றை ஒருங்கிணைக்கிறது.

திக்‌ஷா என்ற தேசிய டிஜிட்டல் கட்டமைப்பு, தரமான பள்ளி கல்வி பாடங்களை வழங்கியது. க்யூ.ஆர்  குறியீடு பாடப்புத்தகங்கள் அனைத்து வகுப்புகளுக்கும் கிடைத்தன.

ஸ்வயம் பிரபா டி.வி மூலம் ஒன்றாம் முதல் 12ம் வகுப்பு வரை தனி தனி சேனல்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  

ரேடியோ மற்றும் சமூக ரேடியோ, விரிவாக பயன்படுத்தப்பட்டன மற்றும் சிபிஎஸ்இ பாடங்களுக்கு சிக்‌ஷாவாணி செயலி பயன்படுத்தப்படுகிறது. 

பார்வையற்ற மற்றும் காது கேளாத மாணவர்களுக்கு  டைசி என்ற டிஜிட்டல் தகவல் கருவி மற்றும் NIOS இணையதளம் / யூ டியூப்பில்  சைகை மொழி இ-பாடங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த அனைத்து திட்டங்களும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கிறது.

ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பயிற்சி:

தொடக்கக் கல்வி அளவில் கற்றலை மேம்படுத்த, பள்ளி கல்வித் துறை, நிஷ்தா (NISHTHA – National Initiative for School Heads’ and Teachers’ Holistic Advancement) என்ற பெயரில் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழுமையான முன்னேற்றத்துக்கு   பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இந்த பயிற்சி மத்திய அரசின் சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.  

கொவிட்-19 சவால்கள் காரணமாக, தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு தொழில் மேம்பாட்டு வாய்ப்புகளை தொடர்ந்து வழங்க, திக்‌ஷா தளத்தை பயன்படுத்தி  நிஷ்தா ஆன்லைன் பயிற்சியை கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இந்தாண்டு ஜூன் வரை, சுமார் 24 லட்சம் ஆசிரியர்களுக்கு  இந்த டிஜிட்டல்  பயிற்சி அளிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வி வசதிகள்:

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இ-பாடங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் கடந்த ஜூன் 8ம் தேதி வழங்கப்பட்டது. அவற்றை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.  https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/CWSN_E-Content_guidelines.pdf

இந்த வழிகாட்டுதல்கள் கீழ்கண்டவற்றை பரிந்துரைத்தன:

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கற்கும் தேவைகளை நிறைவேற்ற டிஜிட்டல் பாடப்புத்தகங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். 

காது கேளாத மாணவர்களுக்கு சைகை மொழியில் வீடியோக்கள்.

இ-பாடப்புத்தகங்கள்.

காது கேளாத மாணவர்களுக்கு தனியான டிடிஎச் சேனல் இயக்கம்.

பாடத்திட்டங்கள் குறைப்பு

முழுமையான கல்வி, விவேகமான சிந்தனை, கேள்வி எழுப்புதல், கண்டுபிடிப்பு, விவாதம், பகுப்பாய்வு அடிப்படையிலான கல்விக்கு இடம் அளிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை, 2020-ல் ஒவ்வொரு பாடத்திலும் பாடத் திட்டத்தின் அளவு குறைக்கப்படும்.  கருத்துக்கள்,பயன்பாடு மற்றும் பிரச்சினைகளை தீர்த்தல் போன்ற விஷயங்களில் புதிய கல்விக் கொள்கை கவனம் செலுத்தும். கற்பித்தலும், கற்றலும் கலந்துரையாடல் முறையில் நடத்தப்படும். கேள்வி கேட்பது ஊக்குவிக்கப்படும். வகுப்பறைகள், மாணவர்களின் நகைச்சுவை, படைப்பாற்றல், ஆய்வு நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதாக இருந்து ஆழ்ந்த அனுபவமான கற்றலுக்கு வழிவகுக்கும்.  

ஊரடங்கு காலத்தில் கல்வி இழப்பை குறைக்க நடவடிக்கை:

கொவிட் முடக்க காலத்தில் மாணவர்களின் கல்வி இழப்பை குறைக்க அரசு பல திட்டங்களை உருவாக்கி அமல்படுத்தியது. ஊரடங்கு காரணமாக கல்வி இழப்பை குறைக்க தொலைதார கல்வி, திறந்த வெளி படிப்புகளை கல்வி நிறுவனங்கள் வழங்க விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.

மாற்றியமைக்கப்பட்ட தொலைதூர கல்வி திட்டங்கள், ஆன்லைன் கல்வி நிகழ்ச்சிகளுக்கான விதிமுறைகள் ஆகியவற்றை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) மாற்றியமைத்தது. இதன் விவரங்கள் யுஜிசி இணையதளத்தில் http://www.ugc.ac.in/pdfnews/221580.pdf. உள்ளன.

ஆன்லைன் கல்வி முறையை தொழில்நுட்ப நிறுவனங்கள் பின்பற்ற, விரிவான வழிகாட்டுதல்களை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வழங்கியது. 

42 புதிய பல்கலைக்கழகங்கள், 51 நிறுவனங்கள் ஆன்லைன் கல்வி திட்டங்களை வழங்க அனுமதிக்கப்பட்டன. மாணவர்களுக்கு சிறப்பான வசதிகள் வழங்க, பல மாநிலங்களில் கடந்தாண்டு அக்டோபர் முதல் இந்தாண்டு ஜூன் வரை 583 புதிய கல்வி மையங்களை, திறந்தவெளி பள்ளிகளுக்கான தேசிய மையமம் (NIOS)திறந்தது. 

பள்ளிக் கல்விக்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் கீழ்கண்ட இணைப்பில் உள்ளன. https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/DOSEL_COMPILATION_ON_COVID_ACTIVITIES.pdf

ஊரக பகுதிகளில் கல்வி மேம்பாட்டு திட்டம்:

பள்ளிக் கல்விக்கு ஒருங்கிணைந்த திட்டமாக சமக்ரா ஷிக்க்ஷா திட்டத்தை மத்திய அரசு 2018-19ம் ஆண்டில் தொடங்கியது. இதில் ஆரம்ப கல்வி முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் உள்ளன. ஊரகப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் அனைத்தும் உள்ளடங்கிய, சமமான, தரமான கல்வியை உறுதி செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.  இத் திட்டம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பள்ளிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும்,  தரமான கல்வி, ஆசிரியர்களின் ஊதியத்தில் நிதியுதவி போன்றவற்றுக்கு உதவுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...