முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொவிட் ஊரடங்கு காலத்தில் கல்வி இழப்பை குறைக்க, அரசு பல நடவடிக்கைகள் எடுத்தது: மாநிலங்களவையில் தகவல்

மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கொவிட் ஊரடங்கு காலத்தில் கல்வி இழப்பை குறைக்க, அரசு பல நடவடிக்கைகள் எடுத்தது: மாநிலங்களவையில் தகவல்








கொவிட் ஊரடங்கு  காலத்தில் மாணவர்களின் கல்வி இழப்பை குறைக்க அரசு பல திட்டங்களை உருவாக்கி அமல்படுத்தியதாக மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். 

மாநிலங்களவையில் அவர் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள்:

கொவிட் ஊரடங்கு காலத்தில், ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் வசதிகளை அளிக்க, தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக  பிரதமரின் இ-வித்யா என்ற விரிவான நடவடிக்கை கடந்த 2020ம் ஆண்டு மே 17ம் தேதி தொடங்கப்பட்டது. இது டிஜிட்டல்/ஆன்லைன்/ரேடியோ மற்றும் டி.வி வழியிலான கல்வி போன்றவற்றை ஒருங்கிணைக்கிறது.

திக்‌ஷா என்ற தேசிய டிஜிட்டல் கட்டமைப்பு, தரமான பள்ளி கல்வி பாடங்களை வழங்கியது. க்யூ.ஆர்  குறியீடு பாடப்புத்தகங்கள் அனைத்து வகுப்புகளுக்கும் கிடைத்தன.

ஸ்வயம் பிரபா டி.வி மூலம் ஒன்றாம் முதல் 12ம் வகுப்பு வரை தனி தனி சேனல்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  

ரேடியோ மற்றும் சமூக ரேடியோ, விரிவாக பயன்படுத்தப்பட்டன மற்றும் சிபிஎஸ்இ பாடங்களுக்கு சிக்‌ஷாவாணி செயலி பயன்படுத்தப்படுகிறது. 

பார்வையற்ற மற்றும் காது கேளாத மாணவர்களுக்கு  டைசி என்ற டிஜிட்டல் தகவல் கருவி மற்றும் NIOS இணையதளம் / யூ டியூப்பில்  சைகை மொழி இ-பாடங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த அனைத்து திட்டங்களும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கிறது.

ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பயிற்சி:

தொடக்கக் கல்வி அளவில் கற்றலை மேம்படுத்த, பள்ளி கல்வித் துறை, நிஷ்தா (NISHTHA – National Initiative for School Heads’ and Teachers’ Holistic Advancement) என்ற பெயரில் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழுமையான முன்னேற்றத்துக்கு   பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இந்த பயிற்சி மத்திய அரசின் சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.  

கொவிட்-19 சவால்கள் காரணமாக, தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு தொழில் மேம்பாட்டு வாய்ப்புகளை தொடர்ந்து வழங்க, திக்‌ஷா தளத்தை பயன்படுத்தி  நிஷ்தா ஆன்லைன் பயிற்சியை கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இந்தாண்டு ஜூன் வரை, சுமார் 24 லட்சம் ஆசிரியர்களுக்கு  இந்த டிஜிட்டல்  பயிற்சி அளிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வி வசதிகள்:

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இ-பாடங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் கடந்த ஜூன் 8ம் தேதி வழங்கப்பட்டது. அவற்றை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.  https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/CWSN_E-Content_guidelines.pdf

இந்த வழிகாட்டுதல்கள் கீழ்கண்டவற்றை பரிந்துரைத்தன:

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கற்கும் தேவைகளை நிறைவேற்ற டிஜிட்டல் பாடப்புத்தகங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். 

காது கேளாத மாணவர்களுக்கு சைகை மொழியில் வீடியோக்கள்.

இ-பாடப்புத்தகங்கள்.

காது கேளாத மாணவர்களுக்கு தனியான டிடிஎச் சேனல் இயக்கம்.

பாடத்திட்டங்கள் குறைப்பு

முழுமையான கல்வி, விவேகமான சிந்தனை, கேள்வி எழுப்புதல், கண்டுபிடிப்பு, விவாதம், பகுப்பாய்வு அடிப்படையிலான கல்விக்கு இடம் அளிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை, 2020-ல் ஒவ்வொரு பாடத்திலும் பாடத் திட்டத்தின் அளவு குறைக்கப்படும்.  கருத்துக்கள்,பயன்பாடு மற்றும் பிரச்சினைகளை தீர்த்தல் போன்ற விஷயங்களில் புதிய கல்விக் கொள்கை கவனம் செலுத்தும். கற்பித்தலும், கற்றலும் கலந்துரையாடல் முறையில் நடத்தப்படும். கேள்வி கேட்பது ஊக்குவிக்கப்படும். வகுப்பறைகள், மாணவர்களின் நகைச்சுவை, படைப்பாற்றல், ஆய்வு நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதாக இருந்து ஆழ்ந்த அனுபவமான கற்றலுக்கு வழிவகுக்கும்.  

ஊரடங்கு காலத்தில் கல்வி இழப்பை குறைக்க நடவடிக்கை:

கொவிட் முடக்க காலத்தில் மாணவர்களின் கல்வி இழப்பை குறைக்க அரசு பல திட்டங்களை உருவாக்கி அமல்படுத்தியது. ஊரடங்கு காரணமாக கல்வி இழப்பை குறைக்க தொலைதார கல்வி, திறந்த வெளி படிப்புகளை கல்வி நிறுவனங்கள் வழங்க விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.

மாற்றியமைக்கப்பட்ட தொலைதூர கல்வி திட்டங்கள், ஆன்லைன் கல்வி நிகழ்ச்சிகளுக்கான விதிமுறைகள் ஆகியவற்றை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) மாற்றியமைத்தது. இதன் விவரங்கள் யுஜிசி இணையதளத்தில் http://www.ugc.ac.in/pdfnews/221580.pdf. உள்ளன.

ஆன்லைன் கல்வி முறையை தொழில்நுட்ப நிறுவனங்கள் பின்பற்ற, விரிவான வழிகாட்டுதல்களை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வழங்கியது. 

42 புதிய பல்கலைக்கழகங்கள், 51 நிறுவனங்கள் ஆன்லைன் கல்வி திட்டங்களை வழங்க அனுமதிக்கப்பட்டன. மாணவர்களுக்கு சிறப்பான வசதிகள் வழங்க, பல மாநிலங்களில் கடந்தாண்டு அக்டோபர் முதல் இந்தாண்டு ஜூன் வரை 583 புதிய கல்வி மையங்களை, திறந்தவெளி பள்ளிகளுக்கான தேசிய மையமம் (NIOS)திறந்தது. 

பள்ளிக் கல்விக்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் கீழ்கண்ட இணைப்பில் உள்ளன. https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/DOSEL_COMPILATION_ON_COVID_ACTIVITIES.pdf

ஊரக பகுதிகளில் கல்வி மேம்பாட்டு திட்டம்:

பள்ளிக் கல்விக்கு ஒருங்கிணைந்த திட்டமாக சமக்ரா ஷிக்க்ஷா திட்டத்தை மத்திய அரசு 2018-19ம் ஆண்டில் தொடங்கியது. இதில் ஆரம்ப கல்வி முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் உள்ளன. ஊரகப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் அனைத்தும் உள்ளடங்கிய, சமமான, தரமான கல்வியை உறுதி செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.  இத் திட்டம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பள்ளிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும்,  தரமான கல்வி, ஆசிரியர்களின் ஊதியத்தில் நிதியுதவி போன்றவற்றுக்கு உதவுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த