தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி பதவியேற்றுக் கொண்டார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் துணை நிறுவனமாகச் செயல்பட்டு வரும், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அரசின் பாடப் புத்தகங்களை அச்சிட்டு விநியோகம் செய்கிறது. இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு கட்டண அடிப்படையிலும் வழங்கப்படுகின்றன
தமிழ் நாடு பாடநுால் கழக தலைவராக, தின்டுக்கல் ஐ. லியோனியை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் இரு நாட்களுக்கு முன் பதவியேற்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பாடநுால் கழக அலுவலகத்தில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அன்று மாலை வரை பதவியேற்க ஐ.லியோனி வரவில்லை. அவர் ஏன் வரவில்லை என்பததற்கான காரணமும் பாடநுால் கழகத்துக்கு அவர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை. அவர் நியமனத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதன் காரணமாக இருக்கலாமெனக் கூறப்பட்டது
ஐ.லியோனி நியமனத்திற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது. நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பெண்களை மதிக்கிற ஒருவரை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும் இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பெண்களை இழிவுபடுத்தி பேசும் ஒருவரை இப்பதவியில் அமர்த்துவதைவிட, அந்த பதவியை மோசமாக அவமதிக்க முடியாதென விமர்சித்திருந்தார் காரணம் அரசியல் தான்.
தமிழக பள்ளிக் கல்வி இயக்குநராக டி.பி.ஐ வளாகத்தில், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகத் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் ஐ.லியோனி
தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன் என பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
அவ்வாறு அவர் பதவியேற்கும் போது உடனிருந்த அவரது மனைவி அமுதா ஆனந்தக்கண்ணீர் வடித்து தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
என்னையறியாமல் கண்ணீர் வந்தது. பலரது ஏளனத்துக்கு மருந்தாகக் கிடைத்த பதவி என ஐ.லியோனி மனைவி அமுதா தெரிவித்தார்.
''எங்க சார் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக இன்று காலை பதவியேற்கும் போது என்னையறியாமல் நான் அழுதுவிட்டேன். அழுகை வந்ததற்கான காரணத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. இத்தனை ஆண்டுகால அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். 33 ஆண்டு காலம் அறிவியல் ஆசிரியராக இருந்தவருக்கு, இந்தப் பதவியை ஏன் கொடுத்தீர்கள் என கடந்த ஒரு வாரமாக சிலர் விமர்சித்ததை நினைத்து மனைவியாக மிகுந்த வருத்தப்பட்டேன்.'
பொதுவாழ்க்கையில் இது போன்ற விமர்சனங்கள் இருப்பது சகஜமென எங்க சார் எடுத்துக்கூறினார். பணத்தையோ, பதவியையோ எதிர்பார்த்து அவர் திமுகவில் இணையவில்லை. கலைஞர் மீதும் அவர் தமிழ் மீதும் எங்க சார் உயிரே வைத்திருக்கிறார். எங்கள் உறவினர்கள், நண்பர்களில் பலர் எதுக்குமா இவருக்கு இந்த வேண்டாத வேலை, அரசியல், கட்சின்னு சுத்துவதை விட்டுவிட்டு பட்டிமன்றத்தை மட்டும் கவனிக்க வேண்டியதுதானே என என்னிடமே கேட்டிருக்கிறார்கள்.
கட்சி கட்சின்னு இவரு ஓடுகிறாரே, என்ன செய்யப்போகுது கட்சின்னு எத்தனையோ பேர் சொந்தபந்த இல்ல நிகழ்ச்சிகளில் பார்க்கும் போது என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஏளனங்களுக்கெல்லாம் மருந்தாக இந்தப் பதவியைக் கொடுத்து அங்கீகரித்திருக்கிறார் முதலமைச்சர். முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.''
உண்மையான உழைப்புக்கு இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இன்று அந்த நம்பிக்கை உண்மையாகியுள்ளது. தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக இருப்பதால், பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. முதலமைச்சரிடமும், அமைச்சரிடமும் இது குறித்து பேசி அவர்களது வழிகாட்டுதலுடன் எங்க சார் செயல்படுவார்.'' என்றார்.
கருத்துகள்