முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி பதவியேற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி பதவியேற்றுக் கொண்டார்.


தமிழக பள்ளிக் கல்வித் துறையின் துணை நிறுவனமாகச் செயல்பட்டு வரும், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அரசின் பாடப் புத்தகங்களை அச்சிட்டு விநியோகம் செய்கிறது. இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு  கட்டண அடிப்படையிலும் வழங்கப்படுகின்றன

தமிழ் நாடு பாடநுால் கழக தலைவராக, தின்டுக்கல் ஐ. லியோனியை நியமித்து,  தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் இரு நாட்களுக்கு முன் பதவியேற்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பாடநுால் கழக அலுவலகத்தில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அன்று மாலை வரை பதவியேற்க ஐ.லியோனி வரவில்லை. அவர் ஏன் வரவில்லை என்பததற்கான காரணமும் பாடநுால் கழகத்துக்கு அவர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை. அவர் நியமனத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதன் காரணமாக இருக்கலாமெனக் கூறப்பட்டது




ஐ.லியோனி நியமனத்திற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது. நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அஇஅதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  பெண்களை மதிக்கிற ஒருவரை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும் இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.  பெண்களை இழிவுபடுத்தி பேசும் ஒருவரை இப்பதவியில் அமர்த்துவதைவிட, அந்த பதவியை மோசமாக அவமதிக்க முடியாதென விமர்சித்திருந்தார் காரணம் அரசியல் தான்.

தமிழக பள்ளிக் கல்வி இயக்குநராக டி.பி.ஐ வளாகத்தில், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகத் இன்று  பொறுப்பேற்றுக் கொண்டார் ஐ.லியோனி 

தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன் என பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

அவ்வாறு அவர் பதவியேற்கும் போது உடனிருந்த அவரது மனைவி அமுதா ஆனந்தக்கண்ணீர் வடித்து தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

என்னையறியாமல் கண்ணீர் வந்தது.  பலரது ஏளனத்துக்கு மருந்தாகக் கிடைத்த பதவி என ஐ.லியோனி மனைவி அமுதா தெரிவித்தார்.

''எங்க சார் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக இன்று காலை பதவியேற்கும் போது என்னையறியாமல் நான் அழுதுவிட்டேன். அழுகை வந்ததற்கான காரணத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. இத்தனை ஆண்டுகால அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். 33 ஆண்டு காலம் அறிவியல் ஆசிரியராக இருந்தவருக்கு, இந்தப் பதவியை ஏன் கொடுத்தீர்கள் என கடந்த ஒரு வாரமாக சிலர் விமர்சித்ததை நினைத்து மனைவியாக மிகுந்த வருத்தப்பட்டேன்.'

பொதுவாழ்க்கையில் இது போன்ற விமர்சனங்கள் இருப்பது சகஜமென எங்க சார் எடுத்துக்கூறினார். பணத்தையோ, பதவியையோ எதிர்பார்த்து அவர் திமுகவில் இணையவில்லை. கலைஞர் மீதும் அவர் தமிழ் மீதும் எங்க சார் உயிரே வைத்திருக்கிறார். எங்கள் உறவினர்கள், நண்பர்களில் பலர் எதுக்குமா இவருக்கு இந்த வேண்டாத வேலை, அரசியல், கட்சின்னு சுத்துவதை விட்டுவிட்டு பட்டிமன்றத்தை மட்டும் கவனிக்க வேண்டியதுதானே என என்னிடமே கேட்டிருக்கிறார்கள்.

கட்சி கட்சின்னு இவரு ஓடுகிறாரே, என்ன செய்யப்போகுது கட்சின்னு எத்தனையோ பேர் சொந்தபந்த இல்ல நிகழ்ச்சிகளில் பார்க்கும் போது என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஏளனங்களுக்கெல்லாம் மருந்தாக இந்தப் பதவியைக் கொடுத்து அங்கீகரித்திருக்கிறார் முதலமைச்சர். முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.''

உண்மையான உழைப்புக்கு இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இன்று அந்த நம்பிக்கை உண்மையாகியுள்ளது. தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக இருப்பதால், பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. முதலமைச்சரிடமும், அமைச்சரிடமும் இது குறித்து பேசி அவர்களது வழிகாட்டுதலுடன் எங்க சார் செயல்படுவார்.'' என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...