கன்னியக் குறைவான வீடியோ வெளியான விவகாரத்தில் பாஜகவிலிருந்து கே.டி.ராகவன் ராஜினாமா காவல்துறையில் காங்கிரஸ் சார்பில் புகார்
தமிழக பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன். இவர் பா.ஜ.க.விற்கு ஆதரவாக பல்வேறு விவாத மேடைகளில் பங்கேற்று பேசி வருகிறார். இந்த நிலையில், பெண் ஒருவருடன் வீடியோ காலில் மிகவும் ஆபாசமாக கே.டி.ராகவன் நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கே.டி.ராகவன் தனது மாநில பொதுச்செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், கே.டி.ராகவன் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க தனி குழு
அமைக்கப்பட்டுள்ளது கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரம்: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கையில் மாநில பாஜக பொதுச்செயலாளராக இருக்கும் கே.டி.ராகவன் தொடர்பான சர்ச்சைக்குரியஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக அவர் பதவி விலகிய நிலையில், இந்த பிரச்சனையை சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
பாஜக தலைவர் கே.டி.ராகவன் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கே.டி ராகவன் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு குறித்து, தமிழக பாஜக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், ‘இன்று காலை சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு கே டி ராகவன் அவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த செய்திகளை அறிந்தேன். இந்த வீடியோவை வெளியிட்ட யூ டியூபர் மதன் ரவிச்சந்திரன் அவர்கள் என்னை சந்தித்துப் பேசியது உண்மை.
முதல் முறையாக என்னை கட்சி அலுவலகத்தில் அவர் சந்தித்துப் பேசியபோது கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் உடனடியாக அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றங்களால் மட்டும் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விடக்கூடாது. அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன்.
ஆகவே அந்த வீடியோ பதிவுகளை எங்களிடம் காட்சிப்படுத்தினால் அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினேன். மறுத்துவிட்டார். ஆனால் அவர் பதிவுகளளை என்னிடம் ஒப்படைக்க அடுத்த நாள் மறுபடி என்னை அலுவலகத்தில் சந்தித்த மதன் ரவிச்சந்திரன் அவர்கள் வலுவான வீடியோ பதிவுகள் உள்ளன. அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.
ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ பதிவை நம்பி மட்டும் அதன் உண்மைத்தன்மையை அறியாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் அதன் மேல் விசாரணை செய்யாமல் குற்றம் சாட்டும் நபரின் வாய் வார்த்தையை மட்டும் நம்பி எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? ஆகவே மதன் ரவிச்சந்திரன் இரண்டாம் முறை வலியுறுத்திய போதும் ஆதாரமாக அவர் சுட்டும் பதிவுகளை சமர்ப்பிக்க கூறினேன்.
அதன்பின் மூன்றாவது முறையாக அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி, நான் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி எனக்கு உடனடியாக நியாயம் கிடைக்குமா? நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டு இருந்தார். கட்சி ரீதியான நடவடிக்கை என்ற முடிவையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் வீடியோ பதிவுகளை வெளியிடப் போவதாக குறுஞ்செய்தியில் கூறியிருந்தார்.
முன்னர் இரண்டு முறை நேரில் சந்தித்தபோது நான் கூறியபடி குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல், நடவடிக்கை எடுக்க முடியாது என்ற என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். ஆகவே என் பதிலில் “செய்து கொள்ளுங்கள் என்று சுருக்கமாக முடித்து விட்டேன்.
இன்று காலை திரு K.T.ராகவன் அவர்களிடம் பேசினேன் 30 ஆண்டு காலத்திற்கு மேலாக உண்மையாகவும் நேர்மையாகவும் கட்சி பணியாற்றிய தன் மீது களங்கம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், கட்சியின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் எண்ணத்துடன், உயர் தொழில்நுட்பத்தில் தனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும், இதை தான் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் கே டி ராகவன் தெரிவித்தார். மேலும் கட்சியின் மாண்பையும், செம்மையையும் கருதி, தான் கட்சியின் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.
நானும் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டேன். திரு கே டி ராகவன் அவர்கள் இந்த பிரச்சனையை முறைப்படி சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக வீடியோ ஆதாரத்துடன் பா.ஜ.க வின் கே.டி. ராகவன் மீது எழுந்துள்ள புகாரில் அவரை கைது செய்து முறையாக விசாரணை நடத்திட வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி
சார்பாக இன்று மாலை 4 மணிக்கு தமிழக காவல் துறை தலைவரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார் கரூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி தனது புகாரில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பாஜகவின் கே.டி ராகவனை உடனடியாக கைது செய்ய வேண்டும்.என்று டிஜிபியிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று வலியுறுத்தப்பட்டது.
இதற்குமுன்பும் பாஜக தலைவர்கள் கலிவரதன், சண்முக சுப்பையா இருவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு குறித்த புகார்கள் எழுந்துள்ளன. அதை அன்றைய அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அரசு மூடி மறைத்துவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் மிரட்டப்பட்டனர்.
பாஜக தலைவர்களை பாலியல் குற்றங்களில் இருந்து காப்பாற்றியதற்கு பிரதியுபகாரமாக,அதிமுகவைச் சேர்ந்த கொடூரமான பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளை ஒன்றிய பாஜக அரசு இன்றுவரை காப்பாற்றி வருகிறது.பாதிக்கப்பட்ட தமிழக சகோதரிகளுக்கு உடனடியாக தமிழக அரசு நீதி வழங்கும் என்று நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்