முதன்முறையாக ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொண்டு, தனது சிறப்பான ஆதிக்கமிகுந்த ஆட்டத்தால் டோக்கியோ ஒலிம்பிக்கில்
இந்தியாவுக்கு ஆறாவது பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ள மற்போர் வீரர் பஜ்ரங் பூனியாவுக்கு வாழ்த்துக்கள் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்
டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“டோக்கியோ 2020-ல் இருந்து மகிழ்ச்சிகரமான செய்தி! சிறப்பாக சண்டையிட்டீர்கள் பஜ்ரங் புனியா. ஒவ்வொரு இந்தியரையும் பெருமை மற்றும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ள உங்கள் சாதனைக்காக உங்களுக்கு வாழ்த்துகள்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்