சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான, சி.எம்.டி.ஏ.வின் தவறான அணுகுமுறையால், 37 ஆண்டுகளில், 2,389 ஏக்கர் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள், கட்டு மானப்பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளதாக, கணக்குத் தணிக்கை துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில்
சென்னையில், 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் குறித்து, மத்தியக் கணக்குத் தணிக்கை துறையின் அறிக்கையில் சென்னை மாநகரின் ஒழுங்கான வளர்ச்சிக்காக, நில பயன்பாடு, கட்டிடம் கட்டுதல் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டியது, சி.எம்.டி.ஏ.,வின் பணியாகும். இதற்காக, 1976 ஆம் ஆண்டில், முதலாவது, 'மாஸ்டர் பிளான்' அறிவிக்கப்பட்டது. இது, 1996 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
முறைகேடாக அந்தச் சமயத்தில் தயாரிக்கப்பட்ட, இரண்டாவது மாஸ்டர் பிளான், 13 ஆண்டுகள் தாமதத்துக்கு பின், 2008 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த மாஸ்டர் பிளான், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, சீராய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்; இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.நிலப் பயன்பாடு குறித்த வரையறையை உள்ளடக்கியதாக, மாஸ்டர் பிளான்களுக்கு, நகர், ஊரமைப்புத் துறை சட்டப்படி, அரசு ஒப்புதலளிப்பதன் படி அரசு கொள்கை முடிவாக, ஒப்புதல் அளித்த, மாஸ்டர் பிளானிலுள்ள, நிலப் பயன்பாட்டு வரையறைகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தவறான வகையில் மாற்றியுள்ளனர்.
இதற்கு பொதுப்பணித்துறை, சில நிபந்தனைகள் விதித்து, தடையின்மைச் சான்று வழங்கியுள்ளது. இந்த நிபந்தனைகளை, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் நிறைவேற்றினாரா என்பதை கண்காணிப்பதற்கான பொறுப்பை, யாரும் ஏற்கவில்லை. மழை வெள்ளப் பாதிப்புகள் தடுப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு போன்ற அடிப்படைக் கூறுகளை ஆராயாமல், 1979 ஆம் ஆண்டுக்கும், 2016 ஆம் ஆண்டுக்கும் இடைபட்ட, 37 ஆண்டு காலங்களில், சென்னைப் பெருநகரப் பகுதியில், 2,389 ஏக்கர் நிலத்தை நீர் நிலைப் பகுதி உள்ளதைக் கட்டுமானப் பகுதிகளாக மாறியுள்ளன. பராமரிப்புஅக்கறையின்மையால். சி.எம்.டி.ஏ.,வின் தவறான அணுகுமுறையால், நீர் நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில், அதிக அளவில் கட்டுமானத் திட்டங்கள் வந்துள்ளன. இதுவே, 2015 ஆம் ஆண்டில், பெரும்பாலான பகுதிகள், வெள்ளத்தில் மிதக்க அடிப்படை காரணமானது. திட்டமிட்ட நகர்ப்புற மயமாதலை உறுதி செய்வதில், சி.எம்.டி.ஏ.,வுக்கு உள்ளார்ந்த அக்கறை இல்லை என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தணிக்கைத் துறையின் இந்த பகீர் குற்றச்சாட்டு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகிரங்க குற்றச்சாட்டுக்குப் பிறகாவது, சி.எம்.டி.ஏ.,வின் அணுகுமுறை மாற வேண்டும். நீர் நிலைகள் பாதுகாப்பையும் உள்ளடக்கியதே, நகர்ப்புற வளர்ச்சி என்பது கூட தெரியாத அதிகாரிகளை வைத்து, சி.எம்.டி.ஏ.,வை நடத்துவது, சென்னைக்கு மேலும் பெரிய ஆபத்துகளையே ஏற்படுத்தும்.எனவே, சி.எம்.டி.ஏ.,வின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும்,அதிகாரிகளின் பணித் திறனையும் ஆராய்ந்து, உரிய மாறுதல்களை, அரசு மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பரிந்துரைகள் சட்டத்திற்கு முரணாக மனைப்பிரிவுகளை அனுமதிப்பது, கட்டுமானத் திட்டங்களை அனுமதிப்பது போன்ற செயல்பாடுகளை, சி.எம்.டி.ஏ., நிறுத்த வேண்டும். மாஸ்டர் பிளானில், வெள்ளத் தடுப்புக்கான செயல் திட்டத்தை முறையாக வகுத்து, அதற்கு ஏற்ப வளர்ச்சி விதிகளை மாற்றி அமைப்பது அவசியம். அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் கரையோரங்களில், 15 மீட்டர் அகலத்துக்கு, வெள்ளப் பாதிப்பு தாங்கு பகுதிகளாக அறிவிக்க வேண்டும். நீர் நிலைப் புறம்போக்கு என உள்ள பகுதிகளை, வகைபாடு மாற்றும் நடைமுறையை சட்டத்துக்கு உட்பட்டு திருத்தி அமைக்க வேண்டும்
காசு கொடுத்தால், சி.எம்.டி.ஏ, வில் எதுவும் நடக்கும். என்ற நிலை உள்ளது. வருவாய் துறை செட்டில்மென்ட் நில ஆவணங்களுக்கும் நத்தம் சர்வே வரும் முன்பாக கிராமங்களில் பரம்பரை கர்ணங்கள் இருந்நவரை என்றுமே வளமை குன்றாத வகையில் தான் தமிழகம் இருந்தது. சுதந்திரகாலத்திற்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட எம் எம் டி எ தான். தமிழ் நாட்டின் சீரழிவுக்குக் காரணம். எனவே சி.எம்.டி.ஏ.,வால் அழிந்த ஏரிகள், குளங்கள் 2,389 ஏக்கர் . இச்சூழலில் நகர், ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி., பகுதிகளில், நில வகைப்பாடு மாற்றம் தொடர்பாக, உள்ளூர் திட்டக் குழும அளவில் முடிவுகள் எடுக்க அதிகாரம் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெருநகருக்கு வெளியிலுள்ள பகுதிகள், டி.டி.சி.பி., நிர்வாகத்தில் வருகின்றன. இப்பகுதிகளில், கட்டுமானத் திட்ட அனுமதி வழங்குவதில், டி.டி.சி.பி., தான் முடிவுகள் எடுக்கும். இதில், 27 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு, உள்ளூர் அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகை, அதிகாரப் பகிர்வு சமீபத்தில் வழங்கப்பட்டதை அமல்படுத்தும் பணிகள் நடக்கின்ற நிலையில், நில வகைப்பாடு மாற்றம் தொடர்பான கோப்புகளில், சென்னையிலுள்ள டி.டி.சி.பி., தலைமை அலுவலகம் தான் முடிவெடுத்து வருகிறது. அது அரசின் அறிவிக்கையாக வெளியிடப்படுவதில் ஏற்படும் கால தாமதத்தைத் தடுக்க, உள்ளூர் திட்டக் குழும நிலையிலேயே நில வகைப்பாடு மாற்றம் தொடர்பான முடிவுகளை எடுக்க, அரசு முடிவு செய்துள்ளதன்படி, நில வகைப்பாடு மாற்றக் கோப்புகள் விரைவாக முடிக்கப்படும். இந்த முடிவுகள் குறித்து, உள்ளூர் திட்டக் குழுமங்கள், தலைமை அலுவலகத்துக்கு விபரம் தெரிவித்து, அறிவிக்கை வெளியிடலாம். இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை பிறப்பித்துள்ளது. பிரபலமான ஜக்கிக்கு ஆதரவாக, அப்பகுதியில் இருந்த "ராஜ வாய்க்கால்" என்ற நீர் பாசன கால்வாய் அப்போது இல்லவே இல்லை என்று பொய் கூறி, அந்த இடத்தில் கட்டுமானத்துக்கு அனுமதி அளித்தது அப்போது கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டி.என்.ஹரிஹரன்
ஐஏஎஸ் ஆகும் அது குறித்து வழக்கும் உண்டு.
கருத்துகள்