முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உள்ளூர் திட்டக் குழும நிலையிலேயே நில வகைப்பாடு மாற்றம் தொடர்பான முடிவுகளை எடுக்க, அரசு முடிவு

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான, சி.எம்.டி.ஏ.வின் தவறான அணுகுமுறையால், 37 ஆண்டுகளில், 2,389 ஏக்கர் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள், கட்டு மானப்பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளதாக, கணக்குத் தணிக்கை துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில்



சென்னையில், 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் குறித்து, மத்தியக் கணக்குத் தணிக்கை துறையின் அறிக்கையில்  சென்னை மாநகரின் ஒழுங்கான வளர்ச்சிக்காக, நில பயன்பாடு, கட்டிடம் கட்டுதல் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டியது, சி.எம்.டி.ஏ.,வின் பணியாகும். இதற்காக, 1976 ஆம் ஆண்டில், முதலாவது, 'மாஸ்டர் பிளான்' அறிவிக்கப்பட்டது. இது, 1996 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

முறைகேடாக அந்தச் சமயத்தில் தயாரிக்கப்பட்ட, இரண்டாவது மாஸ்டர் பிளான், 13 ஆண்டுகள் தாமதத்துக்கு பின், 2008 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த மாஸ்டர் பிளான், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, சீராய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்; இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.நிலப் பயன்பாடு குறித்த வரையறையை உள்ளடக்கியதாக, மாஸ்டர் பிளான்களுக்கு, நகர், ஊரமைப்புத் துறை சட்டப்படி, அரசு ஒப்புதலளிப்பதன் படி அரசு கொள்கை முடிவாக, ஒப்புதல் அளித்த, மாஸ்டர் பிளானிலுள்ள, நிலப் பயன்பாட்டு வரையறைகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தவறான வகையில் மாற்றியுள்ளனர்.

இதற்கு பொதுப்பணித்துறை, சில நிபந்தனைகள் விதித்து, தடையின்மைச் சான்று வழங்கியுள்ளது. இந்த நிபந்தனைகளை, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் நிறைவேற்றினாரா என்பதை கண்காணிப்பதற்கான பொறுப்பை, யாரும் ஏற்கவில்லை. மழை வெள்ளப் பாதிப்புகள் தடுப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு போன்ற அடிப்படைக் கூறுகளை ஆராயாமல், 1979 ஆம் ஆண்டுக்கும், 2016 ஆம் ஆண்டுக்கும் இடைபட்ட, 37 ஆண்டு காலங்களில், சென்னைப் பெருநகரப் பகுதியில், 2,389 ஏக்கர் நிலத்தை நீர் நிலைப் பகுதி உள்ளதைக் கட்டுமானப் பகுதிகளாக மாறியுள்ளன. பராமரிப்புஅக்கறையின்மையால். சி.எம்.டி.ஏ.,வின் தவறான அணுகுமுறையால், நீர் நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில், அதிக அளவில் கட்டுமானத் திட்டங்கள் வந்துள்ளன. இதுவே, 2015 ஆம் ஆண்டில், பெரும்பாலான பகுதிகள், வெள்ளத்தில் மிதக்க அடிப்படை காரணமானது. திட்டமிட்ட நகர்ப்புற மயமாதலை உறுதி செய்வதில், சி.எம்.டி.ஏ.,வுக்கு உள்ளார்ந்த அக்கறை இல்லை என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தணிக்கைத் துறையின் இந்த பகீர் குற்றச்சாட்டு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகிரங்க குற்றச்சாட்டுக்குப் பிறகாவது, சி.எம்.டி.ஏ.,வின் அணுகுமுறை மாற வேண்டும். நீர் நிலைகள் பாதுகாப்பையும் உள்ளடக்கியதே, நகர்ப்புற வளர்ச்சி என்பது கூட தெரியாத அதிகாரிகளை வைத்து, சி.எம்.டி.ஏ.,வை நடத்துவது, சென்னைக்கு மேலும் பெரிய ஆபத்துகளையே ஏற்படுத்தும்.எனவே, சி.எம்.டி.ஏ.,வின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும்,அதிகாரிகளின் பணித் திறனையும் ஆராய்ந்து, உரிய மாறுதல்களை, அரசு மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பரிந்துரைகள் சட்டத்திற்கு முரணாக மனைப்பிரிவுகளை அனுமதிப்பது, கட்டுமானத் திட்டங்களை அனுமதிப்பது போன்ற செயல்பாடுகளை, சி.எம்.டி.ஏ., நிறுத்த வேண்டும். மாஸ்டர் பிளானில், வெள்ளத் தடுப்புக்கான செயல் திட்டத்தை முறையாக வகுத்து, அதற்கு ஏற்ப வளர்ச்சி விதிகளை மாற்றி அமைப்பது அவசியம். அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் கரையோரங்களில், 15 மீட்டர் அகலத்துக்கு, வெள்ளப் பாதிப்பு தாங்கு பகுதிகளாக அறிவிக்க வேண்டும். நீர் நிலைப் புறம்போக்கு என உள்ள பகுதிகளை, வகைபாடு மாற்றும் நடைமுறையை சட்டத்துக்கு உட்பட்டு திருத்தி அமைக்க வேண்டும்

காசு கொடுத்தால், சி.எம்.டி.ஏ, வில் எதுவும் நடக்கும். என்ற நிலை உள்ளது. வருவாய் துறை செட்டில்மென்ட் நில ஆவணங்களுக்கும்  நத்தம் சர்வே வரும் முன்பாக கிராமங்களில் பரம்பரை கர்ணங்கள் இருந்நவரை என்றுமே வளமை குன்றாத வகையில் தான் தமிழகம் இருந்தது. சுதந்திரகாலத்திற்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட எம் எம் டி எ தான். தமிழ் நாட்டின் சீரழிவுக்குக் காரணம். எனவே சி.எம்.டி.ஏ.,வால் அழிந்த ஏரிகள், குளங்கள் 2,389 ஏக்கர் . இச்சூழலில் நகர், ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி., பகுதிகளில், நில வகைப்பாடு மாற்றம் தொடர்பாக, உள்ளூர் திட்டக் குழும அளவில் முடிவுகள் எடுக்க அதிகாரம் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெருநகருக்கு வெளியிலுள்ள பகுதிகள், டி.டி.சி.பி., நிர்வாகத்தில் வருகின்றன. இப்பகுதிகளில், கட்டுமானத் திட்ட அனுமதி வழங்குவதில், டி.டி.சி.பி., தான் முடிவுகள் எடுக்கும். இதில், 27 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு, உள்ளூர் அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகை, அதிகாரப் பகிர்வு சமீபத்தில் வழங்கப்பட்டதை அமல்படுத்தும் பணிகள் நடக்கின்ற நிலையில், நில வகைப்பாடு மாற்றம் தொடர்பான கோப்புகளில், சென்னையிலுள்ள டி.டி.சி.பி., தலைமை அலுவலகம் தான் முடிவெடுத்து வருகிறது. அது அரசின் அறிவிக்கையாக வெளியிடப்படுவதில் ஏற்படும் கால தாமதத்தைத் தடுக்க, உள்ளூர் திட்டக் குழும நிலையிலேயே நில வகைப்பாடு மாற்றம் தொடர்பான முடிவுகளை எடுக்க, அரசு முடிவு செய்துள்ளதன்படி, நில வகைப்பாடு மாற்றக் கோப்புகள் விரைவாக முடிக்கப்படும். இந்த முடிவுகள் குறித்து, உள்ளூர் திட்டக் குழுமங்கள், தலைமை அலுவலகத்துக்கு விபரம் தெரிவித்து, அறிவிக்கை வெளியிடலாம். இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை பிறப்பித்துள்ளது. பிரபலமான ஜக்கிக்கு ஆதரவாக, அப்பகுதியில் இருந்த "ராஜ வாய்க்கால்" என்ற நீர் பாசன கால்வாய் அப்போது இல்லவே இல்லை என்று பொய் கூறி, அந்த இடத்தில் கட்டுமானத்துக்கு அனுமதி அளித்தது அப்போது கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டி.என்.ஹரிஹரன்



ஐஏஎஸ் ஆகும் அது குறித்து வழக்கும் உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...