விற்பனைக்கான கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு இருக்கை வசதி கட்டாயமென தமிழக சட்டமன்றப் பேரவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தற்போது
தமிழகத்திலுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக கட்டாயமாக நிற்க வைக்கப்படுகின்றனர். அதன் விளைவாக பல வகையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகின்றனர். தங்களது வேலை நேரம் முழுவதும் தங்கள் பாதங்களிலேயே நிற்கும் வேலையாட்களின் நிலையைக் கருதி கடைகள் மற்றும் நிறுவனங்களின் பணிசெய்து வரும் அனைத்து வேலை ஆட்களுக்கும் இருக்கை வசதி வழங்குதல் உரிமையாளருக்கு அவசியமெனக் கருதி
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்கும் பொருட்கூறானது முன்வைக்கப்பட்டு அது அந்தக் குழுவின் உறுப்பினர்களால் ஒத்த கருத்துடன் ஏற்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்த சட்ட முன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்கும் படி இனிமேல் கடைகளில் பணி செய்யும் ஊழியர்கள் கால்கடுக்க நின்று பணி செய்யும் நிலை இல்லை. என்பதே.
கருத்துகள்