முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆரோக்கிய குழந்தைகளுக்கு காட்டுமன்னார்கோயிலில் சார்-ஆட்சியர் மதுபாலன் பரிசளிப்பு

காட்டுமன்னார்கோயிலில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி  ஆரோக்கிய குழந்தைகளுக்கு சார்-ஆட்சியர் மதுபாலன் பரிசளிப்பு

இந்தியா வளர்ந்த நாடாக முன்னேறி வருவதில் மனித வளத்துக்கு மிகப்பெரும் பொறுப்பு உள்ளது. குழந்தைப் பருவத்திலேயே குழந்தைகளை ஊட்டச்சத்துடன் வளர்த்தால் பிற்காலத்தில் உடல்நலத்துக்கு அதிகம் செலவிட வேண்டிய தேவை இருக்காது. அதனால்தான் அரசு குழந்தை பிறந்ததில் இருந்து முதல் 1000 நாட்களில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துமாறு தாய்மார்களை வலியுறுத்தி வருகின்றது. கொரோனா கால கட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆற்றிய பணி பாராட்டுக்கு உரியது.  இவர்கள் தங்கள் மையத்துக்கு வரும் மகளிரிடம் பாரம்பரிய உணவுகளின் சிறப்புகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாபாலன் கேட்டுக்கொண்டார்.

 புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் காட்டுமன்னார்கோயில் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகம் ஆகியன இணைந்து இன்று காட்டுமன்னார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடத்திய ஊட்டச்சத்து மாத விழா சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சார்-ஆட்சியர் மதுபாலன் இவ்வாறு தெரிவித்தார்.

 நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவர் திருமிகு. சஃதியா பர்வீன் தலைமை வகித்தார்.

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் டாக்டர் த.பழனி துவக்கவுரை ஆற்றினார்.  கடலூர் மாவட்டத்தில் சுமார் 50 சதவிகிதப் பெண்களுக்கு ரத்தசோகை நோய் உள்ளது.  இதை நீக்க இரும்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை பெண்கள் அதிக அளவில் சேத்துக்கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை மரம் வளர்க்க வேண்டும். ஏனென்றால் முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து உள்ளது.  கடலூர் மாவட்டத்தை ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத மாநிலமாக மாற்ற அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பழனி கேட்டுக்கொண்டார்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ப.வெங்கடேசன் கர்ப்பிணிகள் பயமோ தயக்கமோ இல்லாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஏ.இப்ராஹிம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமிகு. கோ.அனிதாசெந்தில் ஆகியோரும் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் சார்-ஆட்சியர் மதுபாலன் ஆரோக்கிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கியதோடு கர்ப்பிணிகளுக்கு வளைகாப்புக்கான பொருட்கள் அடங்கிய பெட்டகத்தையும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் வளர்இளம் பெண்களுக்கும் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் அடங்கிய பெட்டகங்களையும் வழங்கினார். இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டையொட்டி வெளியிடப்பட்ட பேக்கட் கார்டுகளையும் அவர் பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் சார் ஆட்சியர் மதுபாலன் மரக் கன்றுகளும் நட்டார். ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு வாகனத்தையும் அவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

நிகழ்ச்சியில், மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குநர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார். இதில் அங்கன்வாடிப் ப்ணியாளர்கள் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் கண்காட்சியையும் அமைத்திருந்தனர்.

சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாபாலன் ஆரோக்கிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குகிறார்

சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாபாலன்  விருந்தினர்களுக்கு இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டையொட்டி வெளியிடப்பட்ட பேக்கட் கார்டுகளை வழங்கினார்

சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாபாலன் மரக்கன்று நடுகிறார்.

சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாபாலன் வீடியோ வேனை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...