முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆரோக்கிய குழந்தைகளுக்கு காட்டுமன்னார்கோயிலில் சார்-ஆட்சியர் மதுபாலன் பரிசளிப்பு

காட்டுமன்னார்கோயிலில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி  ஆரோக்கிய குழந்தைகளுக்கு சார்-ஆட்சியர் மதுபாலன் பரிசளிப்பு

இந்தியா வளர்ந்த நாடாக முன்னேறி வருவதில் மனித வளத்துக்கு மிகப்பெரும் பொறுப்பு உள்ளது. குழந்தைப் பருவத்திலேயே குழந்தைகளை ஊட்டச்சத்துடன் வளர்த்தால் பிற்காலத்தில் உடல்நலத்துக்கு அதிகம் செலவிட வேண்டிய தேவை இருக்காது. அதனால்தான் அரசு குழந்தை பிறந்ததில் இருந்து முதல் 1000 நாட்களில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துமாறு தாய்மார்களை வலியுறுத்தி வருகின்றது. கொரோனா கால கட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆற்றிய பணி பாராட்டுக்கு உரியது.  இவர்கள் தங்கள் மையத்துக்கு வரும் மகளிரிடம் பாரம்பரிய உணவுகளின் சிறப்புகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாபாலன் கேட்டுக்கொண்டார்.

 புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் காட்டுமன்னார்கோயில் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகம் ஆகியன இணைந்து இன்று காட்டுமன்னார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடத்திய ஊட்டச்சத்து மாத விழா சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சார்-ஆட்சியர் மதுபாலன் இவ்வாறு தெரிவித்தார்.

 நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவர் திருமிகு. சஃதியா பர்வீன் தலைமை வகித்தார்.

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் டாக்டர் த.பழனி துவக்கவுரை ஆற்றினார்.  கடலூர் மாவட்டத்தில் சுமார் 50 சதவிகிதப் பெண்களுக்கு ரத்தசோகை நோய் உள்ளது.  இதை நீக்க இரும்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை பெண்கள் அதிக அளவில் சேத்துக்கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை மரம் வளர்க்க வேண்டும். ஏனென்றால் முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து உள்ளது.  கடலூர் மாவட்டத்தை ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத மாநிலமாக மாற்ற அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பழனி கேட்டுக்கொண்டார்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ப.வெங்கடேசன் கர்ப்பிணிகள் பயமோ தயக்கமோ இல்லாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஏ.இப்ராஹிம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமிகு. கோ.அனிதாசெந்தில் ஆகியோரும் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் சார்-ஆட்சியர் மதுபாலன் ஆரோக்கிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கியதோடு கர்ப்பிணிகளுக்கு வளைகாப்புக்கான பொருட்கள் அடங்கிய பெட்டகத்தையும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் வளர்இளம் பெண்களுக்கும் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் அடங்கிய பெட்டகங்களையும் வழங்கினார். இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டையொட்டி வெளியிடப்பட்ட பேக்கட் கார்டுகளையும் அவர் பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் சார் ஆட்சியர் மதுபாலன் மரக் கன்றுகளும் நட்டார். ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு வாகனத்தையும் அவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

நிகழ்ச்சியில், மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குநர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார். இதில் அங்கன்வாடிப் ப்ணியாளர்கள் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் கண்காட்சியையும் அமைத்திருந்தனர்.

சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாபாலன் ஆரோக்கிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குகிறார்

சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாபாலன்  விருந்தினர்களுக்கு இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டையொட்டி வெளியிடப்பட்ட பேக்கட் கார்டுகளை வழங்கினார்

சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாபாலன் மரக்கன்று நடுகிறார்.

சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாபாலன் வீடியோ வேனை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...