ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆரோக்கிய குழந்தைகளுக்கு காட்டுமன்னார்கோயிலில் சார்-ஆட்சியர் மதுபாலன் பரிசளிப்பு
காட்டுமன்னார்கோயிலில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆரோக்கிய குழந்தைகளுக்கு சார்-ஆட்சியர் மதுபாலன் பரிசளிப்பு
இந்தியா வளர்ந்த நாடாக முன்னேறி வருவதில் மனித வளத்துக்கு மிகப்பெரும் பொறுப்பு உள்ளது. குழந்தைப் பருவத்திலேயே குழந்தைகளை ஊட்டச்சத்துடன் வளர்த்தால் பிற்காலத்தில் உடல்நலத்துக்கு அதிகம் செலவிட வேண்டிய தேவை இருக்காது. அதனால்தான் அரசு குழந்தை பிறந்ததில் இருந்து முதல் 1000 நாட்களில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துமாறு தாய்மார்களை வலியுறுத்தி வருகின்றது. கொரோனா கால கட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆற்றிய பணி பாராட்டுக்கு உரியது. இவர்கள் தங்கள் மையத்துக்கு வரும் மகளிரிடம் பாரம்பரிய உணவுகளின் சிறப்புகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாபாலன் கேட்டுக்கொண்டார்.
புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் காட்டுமன்னார்கோயில் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகம் ஆகியன இணைந்து இன்று காட்டுமன்னார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடத்திய ஊட்டச்சத்து மாத விழா சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சார்-ஆட்சியர் மதுபாலன் இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவர் திருமிகு. சஃதியா பர்வீன் தலைமை வகித்தார்.
கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் டாக்டர் த.பழனி துவக்கவுரை ஆற்றினார். கடலூர் மாவட்டத்தில் சுமார் 50 சதவிகிதப் பெண்களுக்கு ரத்தசோகை நோய் உள்ளது. இதை நீக்க இரும்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை பெண்கள் அதிக அளவில் சேத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை மரம் வளர்க்க வேண்டும். ஏனென்றால் முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து உள்ளது. கடலூர் மாவட்டத்தை ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத மாநிலமாக மாற்ற அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பழனி கேட்டுக்கொண்டார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ப.வெங்கடேசன் கர்ப்பிணிகள் பயமோ தயக்கமோ இல்லாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஏ.இப்ராஹிம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமிகு. கோ.அனிதாசெந்தில் ஆகியோரும் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் சார்-ஆட்சியர் மதுபாலன் ஆரோக்கிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கியதோடு கர்ப்பிணிகளுக்கு வளைகாப்புக்கான பொருட்கள் அடங்கிய பெட்டகத்தையும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் வளர்இளம் பெண்களுக்கும் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் அடங்கிய பெட்டகங்களையும் வழங்கினார். இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டையொட்டி வெளியிடப்பட்ட பேக்கட் கார்டுகளையும் அவர் பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் சார் ஆட்சியர் மதுபாலன் மரக் கன்றுகளும் நட்டார். ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு வாகனத்தையும் அவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
நிகழ்ச்சியில், மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குநர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார். இதில் அங்கன்வாடிப் ப்ணியாளர்கள் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் கண்காட்சியையும் அமைத்திருந்தனர்.
சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாபாலன் ஆரோக்கிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குகிறார்
சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாபாலன் விருந்தினர்களுக்கு இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டையொட்டி வெளியிடப்பட்ட பேக்கட் கார்டுகளை வழங்கினார்
சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாபாலன் மரக்கன்று நடுகிறார்.
சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாபாலன் வீடியோ வேனை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
கருத்துகள்