முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊட்டச்சத்து மாதம் குறித்து முத்தரசநல்லூரில் திருச்சி கள விளம்பர அலுவலகத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊட்டச்சத்து மாதம் குறித்து முத்தரசநல்லூரில் திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலகத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ஊட்டச்சத்து மாதம், கொவிட் தடுப்பு மற்றும் விடுதலையின் அம்ரித் மகோத்சவம் குறித்து ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சி ஒன்றை

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கள விளம்பர அலுவலகம் முத்தரசநல்லூரில் செப்டம்பர் 7 அன்று நடத்தியது.

அறிமுகவுரையாற்றிய திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலர் திரு கே தேவி பத்மநாபன், 2018 மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று தேசிய ஊட்டச்சத்து திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்ததாகவும், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதே முழுமையான ஊட்டச்சத்திற்கான பிரதமரின் லட்சியமிக்க இத்திட்டத்தின் நோக்கம் என்றும் கூறினார். தூய்மை இந்தியா இயக்கம் போன்று மக்கள் இயக்கமாக மாறினால் ஊட்டச்சத்து திட்டமும் வெற்றி பெறும்.

ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக ஊட்டச்சத்து சவால்களுக்கான தேசிய குழு அறிவித்தது. செப்டம்பர் 1 முதல் 7 வரை ஊட்டச்சத்து மிக்க மரக்கன்றுகளை நடுதல், செப்டம்பர் 7 முதல் 15 வரை ஆரோக்கியத்தில் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல், செப்டம்பர் 16 முதல் 23 வரை அங்கன்வாடி பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்குதல் மற்றும் செப்டம்பர் 24 முதல் 30 வரை தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு ஊட்டச்சத்து மிக்க உணவை அவர்களுக்கு வழங்குதல் என நான்கு மைய திட்டங்களை கொண்டு இந்த வருட ஊட்டச்சத்து மாதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை விடுதலையின் அம்ரித் மகோத்சவமாக நாடு கொண்டாடி வரும் வேளையில், குறிப்பாக அதிகம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை மக்கள் நினைவு கூற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக 18 வயதான அனைவருக்கும் கொவிட் தடுப்பு மருந்தை இலவசமாக அரசு வழங்கி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய அந்தநல்லூர் பஞ்சாயத்து ஒன்றிய தலைவர் திரு எஸ் துரைராஜ், பெருந்தொற்றை தடுப்பதற்காக அனைவரும் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். பண்டைய ஆரோக்கியமான உணவு பழக்கங்களை மக்கள் மீண்டும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிறப்புரை ஆற்றிய முத்தரசநல்லூர் பஞ்சாயத்து தலைவர் திரு டி ஆதிவாசன், ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படும் இலவச தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொண்டு, கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதில் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.

சிறப்புரை ஆற்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் குழந்தைகள் மேம்பாடு திட்ட அலுவலர் திருமதி கே கோகிலா, ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதில் 11 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறினார். முருங்கை கீரை, தவசி கீரை மற்றும் நெல்லிக்காயின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய அவர், ஆரோக்கியமிக்க குழந்தைகளை பெற கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்பட வேண்டும் என்றார். ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் பிரித்விராஜ், கொவிட்டின் மூன்றாவது அலையை தடுக்க அனைவரும் தடுப்புமருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். ஊட்டச்சத்து மிக்க உணவை உறுதி செய்வதில் காய்கறிகளின் முக்கியத்துவம் குறித்தும் அவர் விளக்கினார்.

சிறப்புரை ஆற்றிய ஊட்டச்சத்து திட்டத்தின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி பி பிரியங்கா, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஊட்டச்சத்து மிக்க உணவை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். இலை காய்கறிகள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க உணவை கர்ப்பிணி பெண்கள் உண்ண வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அந்தநல்லூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம், அந்தநல்லூர் பஞ்சாயத்து ஒன்றியம் மற்றும் குழுமணி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலகத்தின் கள விளம்பர உதவியாளர் திரு கே ரவீந்திரன் கூறினார்.

விடுதலையின் அம்ரித் மகோத்சவம் மற்றும் கொவிட் தடுப்பு குறித்த மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், சென்னையின் எல் ஈ டி நடமாடும் விழிப்புணர்வு வாகனம் முத்தரசநல்லூரில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளியின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த வாகனம் செல்லும்.

அங்காள பரமேஸ்வரி கிரியேஷன்ஸ் நாடகக் குழுவினர் பாடல் மற்றும் நாடகம் மூலம் ஊட்டச்சத்து மாதம் மற்றும் கொவிட் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊட்டச்சத்து மிக்க உணவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கண்காட்சி ஒன்றுக்கு முத்தரசநல்லூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் ஏற்பாடு செய்திருந்தது. ஆரோக்கியமான குழந்தை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்ச்சியின் போது பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த