முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊட்டச்சத்து மாதம் குறித்து முத்தரசநல்லூரில் திருச்சி கள விளம்பர அலுவலகத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊட்டச்சத்து மாதம் குறித்து முத்தரசநல்லூரில் திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலகத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ஊட்டச்சத்து மாதம், கொவிட் தடுப்பு மற்றும் விடுதலையின் அம்ரித் மகோத்சவம் குறித்து ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சி ஒன்றை

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கள விளம்பர அலுவலகம் முத்தரசநல்லூரில் செப்டம்பர் 7 அன்று நடத்தியது.

அறிமுகவுரையாற்றிய திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலர் திரு கே தேவி பத்மநாபன், 2018 மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று தேசிய ஊட்டச்சத்து திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்ததாகவும், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதே முழுமையான ஊட்டச்சத்திற்கான பிரதமரின் லட்சியமிக்க இத்திட்டத்தின் நோக்கம் என்றும் கூறினார். தூய்மை இந்தியா இயக்கம் போன்று மக்கள் இயக்கமாக மாறினால் ஊட்டச்சத்து திட்டமும் வெற்றி பெறும்.

ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக ஊட்டச்சத்து சவால்களுக்கான தேசிய குழு அறிவித்தது. செப்டம்பர் 1 முதல் 7 வரை ஊட்டச்சத்து மிக்க மரக்கன்றுகளை நடுதல், செப்டம்பர் 7 முதல் 15 வரை ஆரோக்கியத்தில் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல், செப்டம்பர் 16 முதல் 23 வரை அங்கன்வாடி பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்குதல் மற்றும் செப்டம்பர் 24 முதல் 30 வரை தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு ஊட்டச்சத்து மிக்க உணவை அவர்களுக்கு வழங்குதல் என நான்கு மைய திட்டங்களை கொண்டு இந்த வருட ஊட்டச்சத்து மாதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை விடுதலையின் அம்ரித் மகோத்சவமாக நாடு கொண்டாடி வரும் வேளையில், குறிப்பாக அதிகம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை மக்கள் நினைவு கூற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக 18 வயதான அனைவருக்கும் கொவிட் தடுப்பு மருந்தை இலவசமாக அரசு வழங்கி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய அந்தநல்லூர் பஞ்சாயத்து ஒன்றிய தலைவர் திரு எஸ் துரைராஜ், பெருந்தொற்றை தடுப்பதற்காக அனைவரும் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். பண்டைய ஆரோக்கியமான உணவு பழக்கங்களை மக்கள் மீண்டும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிறப்புரை ஆற்றிய முத்தரசநல்லூர் பஞ்சாயத்து தலைவர் திரு டி ஆதிவாசன், ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படும் இலவச தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொண்டு, கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதில் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.

சிறப்புரை ஆற்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் குழந்தைகள் மேம்பாடு திட்ட அலுவலர் திருமதி கே கோகிலா, ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதில் 11 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறினார். முருங்கை கீரை, தவசி கீரை மற்றும் நெல்லிக்காயின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய அவர், ஆரோக்கியமிக்க குழந்தைகளை பெற கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்பட வேண்டும் என்றார். ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் பிரித்விராஜ், கொவிட்டின் மூன்றாவது அலையை தடுக்க அனைவரும் தடுப்புமருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். ஊட்டச்சத்து மிக்க உணவை உறுதி செய்வதில் காய்கறிகளின் முக்கியத்துவம் குறித்தும் அவர் விளக்கினார்.

சிறப்புரை ஆற்றிய ஊட்டச்சத்து திட்டத்தின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி பி பிரியங்கா, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஊட்டச்சத்து மிக்க உணவை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். இலை காய்கறிகள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க உணவை கர்ப்பிணி பெண்கள் உண்ண வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அந்தநல்லூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம், அந்தநல்லூர் பஞ்சாயத்து ஒன்றியம் மற்றும் குழுமணி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலகத்தின் கள விளம்பர உதவியாளர் திரு கே ரவீந்திரன் கூறினார்.

விடுதலையின் அம்ரித் மகோத்சவம் மற்றும் கொவிட் தடுப்பு குறித்த மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், சென்னையின் எல் ஈ டி நடமாடும் விழிப்புணர்வு வாகனம் முத்தரசநல்லூரில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளியின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த வாகனம் செல்லும்.

அங்காள பரமேஸ்வரி கிரியேஷன்ஸ் நாடகக் குழுவினர் பாடல் மற்றும் நாடகம் மூலம் ஊட்டச்சத்து மாதம் மற்றும் கொவிட் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊட்டச்சத்து மிக்க உணவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கண்காட்சி ஒன்றுக்கு முத்தரசநல்லூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் ஏற்பாடு செய்திருந்தது. ஆரோக்கியமான குழந்தை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்ச்சியின் போது பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...