முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரூ.1.48 கோடி மதிப்பில் 1700-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினர் மத்திய இணையமைச்சர்கள்

ரூ.1.48 கோடி மதிப்பில் 1700-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினர் மத்திய இணையமைச்சர்கள் டாக்டர் எல்.முருகன் & ஏ.நாராயணசாமி


மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் சார்பில் “சமூக வலுவூட்டல் முகாம்” தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது.


மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமினை தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ஏ. நாராயணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.


இந்த முகாமில் ரூ. 1 கோடியே 48 லட்சம் மதிப்பிலான, மூன்று சக்கர வாகனங்கள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், வாக்கிங் ஸ்டிக்ஸ், காது கேட்கும் கருவி, செயற்கை கை மற்றும் கால்கள், ஸ்மார்ட் ஃபோன் போன்ற 3164 உபகரணங்களை 1700-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். அதன் அடிப்படையிலே இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில் மத்திய அரசு வேளாண் சட்டத் திருத்தங்களை  நிறைவேற்றியிருப்பதாகவும், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு அவர்களே விலையை நிர்ணயம் செய்ய இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், சிலர் அரசியல் நோக்கத்திற்காக இந்த சட்டத்தை எதிர்க்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்துப் பேசிய மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. ஏ.நாராயணன், பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு, நாடு முழுவதும் இதுவரை 10,993 முகாம்கள் நடத்தி ரூ.1,268.44 கோடி மதிப்பில் 20.74 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவி உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார். மத்திய அரசு 350 வகையான உதவி உபகரணங்களை தயாரித்து விநியோகிக்கிறது என்றும் தமிழகத்தில் இதுவரை 410 முகாம்கள் நடத்தி  ரூ.42.84 கோடி மதிப்பில் 92 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இத்தகைய “சமூக வலுவூட்டல் முகாம்கள்” சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியிலும் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.  

 பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் எல். முருகன், அறியப்படாத தலைவர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கை வரலாற்றையும் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். அண்மையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்கள் மற்றும் அவர்களது 2 படகுகளைத் திரும்ப கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட அவர், தமிழக அரசிடம் இந்த மீனவர்களின் முழு விவரமும் கேட்கப்பட்டுள்ளது என்றும் அவர்களை விரைவில் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் சம்பவங்கள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் மீனவர்கள் நலனில் மத்திய அரசு முழு கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ்  பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தஞ்சாவூரில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமில் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் உரையாற்றியதோடு மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களையும் வழங்கினார்

தஞ்சாவூரில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமில் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு.ஏ.நாராயணசாமி உரையாற்றியதோடு மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களையும் வழங்கினார்

தஞ்சாவூரில் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு.ஏ.நாராயணசாமி ஆகியோர் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கினர்தஞ்சாவூரில் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு.ஏ.நாராயணசாமி ஆகியோர் மாற்றுத் திறனாளிகளுக்ககான உபகரணங்களை வழங்கினர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...