முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரூ.1.48 கோடி மதிப்பில் 1700-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினர் மத்திய இணையமைச்சர்கள்

ரூ.1.48 கோடி மதிப்பில் 1700-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினர் மத்திய இணையமைச்சர்கள் டாக்டர் எல்.முருகன் & ஏ.நாராயணசாமி


மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் சார்பில் “சமூக வலுவூட்டல் முகாம்” தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது.


மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமினை தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ஏ. நாராயணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.


இந்த முகாமில் ரூ. 1 கோடியே 48 லட்சம் மதிப்பிலான, மூன்று சக்கர வாகனங்கள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், வாக்கிங் ஸ்டிக்ஸ், காது கேட்கும் கருவி, செயற்கை கை மற்றும் கால்கள், ஸ்மார்ட் ஃபோன் போன்ற 3164 உபகரணங்களை 1700-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். அதன் அடிப்படையிலே இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில் மத்திய அரசு வேளாண் சட்டத் திருத்தங்களை  நிறைவேற்றியிருப்பதாகவும், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு அவர்களே விலையை நிர்ணயம் செய்ய இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், சிலர் அரசியல் நோக்கத்திற்காக இந்த சட்டத்தை எதிர்க்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்துப் பேசிய மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. ஏ.நாராயணன், பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு, நாடு முழுவதும் இதுவரை 10,993 முகாம்கள் நடத்தி ரூ.1,268.44 கோடி மதிப்பில் 20.74 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவி உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார். மத்திய அரசு 350 வகையான உதவி உபகரணங்களை தயாரித்து விநியோகிக்கிறது என்றும் தமிழகத்தில் இதுவரை 410 முகாம்கள் நடத்தி  ரூ.42.84 கோடி மதிப்பில் 92 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இத்தகைய “சமூக வலுவூட்டல் முகாம்கள்” சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியிலும் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.  

 பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் எல். முருகன், அறியப்படாத தலைவர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கை வரலாற்றையும் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். அண்மையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்கள் மற்றும் அவர்களது 2 படகுகளைத் திரும்ப கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட அவர், தமிழக அரசிடம் இந்த மீனவர்களின் முழு விவரமும் கேட்கப்பட்டுள்ளது என்றும் அவர்களை விரைவில் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் சம்பவங்கள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் மீனவர்கள் நலனில் மத்திய அரசு முழு கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ்  பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தஞ்சாவூரில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமில் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் உரையாற்றியதோடு மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களையும் வழங்கினார்

தஞ்சாவூரில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமில் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு.ஏ.நாராயணசாமி உரையாற்றியதோடு மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களையும் வழங்கினார்

தஞ்சாவூரில் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு.ஏ.நாராயணசாமி ஆகியோர் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கினர்தஞ்சாவூரில் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு.ஏ.நாராயணசாமி ஆகியோர் மாற்றுத் திறனாளிகளுக்ககான உபகரணங்களை வழங்கினர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த