தகவலறியும் உரிமை சட்டத்தில் முறையாக பதிலளிக்காத பொதுப்பணித்துறை அதிகாரிக்கு ரூபாய்.50,000 அபராதம்
மாநிலத் தகவல் ஆணையர் உத்தரவு.
பாசன வசதி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிக்காத பொதுப்பணித் துறை அதிகாரிக்கு ரூபாய். 50,000 அபராதம் விதித்துத் தகவல் ஆணையர் உத்தர விட்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் மேல் முறை யீட்டு மனுக்களின் மீதான விசாரணையை நடத்தினார். பின்னர் மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் நிருபர்களிடம் தெரிவித்ததாவது
கொரோனா தடுப்பு ஊரடங்கு காலத்திற்குப் பிறகு தற்போது மனுதாரர்களின் இரண்டாவது மேல் முறையீட்டு மனு மீதான விசாரணைதென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக நடந்ததில் மொத்தம் 50 மேல்முறை யீட்டு மனுக்களின் மீதான விசாரணை .
காலையில் 25 மனுக்க ளும் மதியம் 25 மனுக்களும் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தகவல் அறி யும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விக ளுக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். தவறினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
மேலும் நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் வீதம் பணியாளருக்கு அபரா தம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். விசாரணை மீதான தீர்ப்புகள் அனைத்தும் இரண்டு நாட்களில் இணையதளத்தில் தெரி விக்கப்படும்.
கடைய நல்லூரில் இணைய வழி இருந்தால் இணையத்தில் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறப் பட்ட பதிலுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறோம். தகவல் அலுவலர் பட்டா உள்ளிட்ட விவரங்கள் குறித்த கேள்விகளுக்கு ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறக் கூடாது, அதற்கும் கண்டனம் தெரிவித்திருக்கிறோம்.
நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் கேள்விக ளுக்கு பதிலளிக்க மறுக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவு ஏதாவது இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்ப டும்.
ராணுவ ரகசியங்கள், அமைச்சரவை கூட்ட ஆலோசனைகள் உள்ளிட்டடவை தவிர மற்ற அனைத்துமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கலாம். சிபிஐ விசாரணையில் கூட மனுதாரர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரலாம் என்று கூறியிருக்கிறோம்,
மாநில தகவல் ஆணை யத்திற்கு சென்னை நந்தனம் மவுன்ட் ரோடு அண்ணா சாலையில் ஒரு ஏக்கர் நிலம் வழங்கி 30 முதல் 40 கோடி ரூபாய் செலவில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் அல்லது ஜனவ ரியில் பயன் பாட்டுக்கு வரும். தமிழகத்தில் தான் மாநில தகவல் ஆணையத் திற்கு சொந்தக் கட்டிடம் கட் டப்பட்டுள்ளது குறிப்பி டத்தக்கது.
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை பொதுப்பணித்துறை ஆகிய துறைகள் மீதான இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்கள் 50 மனுக்கள் விசாரிக்கப் பட்டது. இதில் வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச் சித் துறையின் 90 சதவீத பதில் திருப்தியாக உள்ளது. 4 மனுக்கள் மீது மட்டும் பதில் அளிக்கப்பட வில்லை. அவை குறித்து 5 முதல் 10 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது தவறும் பட்சத்தில் நாளொன்றுக்கு 250 ரூபாய் வீதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.
திசையன்விளையைச் சேர்ந்த சுதாகர் பாலாஜி என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நம்பியாறு பாசன வசதி குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பொதுப்பணித் துறை சார்பில் உரிய பதில் அளிக்கவில்லை. அவர் + முறை முதலமைச்சருக்கு மனு செய்திருக்கிறார். ஆளுநருக்கு மனுக் கொடுத் திருக்கிறார். பொதுப்ப ணித்துறை தலைமை பொறியாளருக்கு மனு செய்திருக்கிறார்.
மொத்தம் 23 மனுக் கள் தாக்கல் செய்திருக்கி தார். ஆனால் அவருக்கு உரிய பதில் கிடைக்க வில்லை என்று இரண் டாவது மேல் முறையீடு செய்திருந்தார். பலமுறை அலைந்தும், செலவு செய் தும், மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். அது குறித்து விசாரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் சிற் றாறு வடி நிலக்கோட்ட பொதுப்பணித்துறையின் தலைமை வரைபடவியலாளர் உதயகுமாருக்கு பிரிவு 20 (1) ன் கீழ் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பிரிவு 20 (2) ன் கீழ் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்பட் டுள்ளது
இவ்வாறு தெரிவித்தார்.
கருத்துகள்