பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பி அனிதாவுக்கு மத்திய இணை அமைச்சர் வாழ்த்து
பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பி அனிதா மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்
பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பி அனிதா, மத்திய தகவல் & ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்பு இணை அமைச்சர் டாக்டர் எல் முருகனை இன்று நேரில் சந்தி்த்து வாழ்த்து பெற்றார்.
மத்திய இணை அமைச்சரை அவரது புதுதில்லி அலுவலகத்தில் அனிதா சந்தித்த போது, அவரது சாதனைகளுக்கும், பத்மஸ்ரீ விருது பெற்றதற்கும் டாக்டர் எல் முருகன் வாழ்த்து தெரிவித்ததோடு, மேலும் பல சாதனைகளை புரிந்து இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற தமது அவாவை வெளிப்படுத்தினார்.
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் பெருமையாக உள்ளது என்று கூறிய அனிதா, மத்திய அரசின் ஊக்கத்திற்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.
சென்னையை சேர்ந்த அனிதா, தமது 11 வயது முதல் கூடைப்பந்து விளையாடி வருகிறார். 2021 நவம்பர் 9 அன்று புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்ட போது, குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் அனிதாவுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
கருத்துகள்